என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு
    X

    குமரியில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு

    • அடையாமடையில் அதிகபட்சமாக 19.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்பொழுது கன்னி பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது.

    இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. அடையாமடை, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல் பகுதிகளிலும் மழை பெய்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் சற்று வெப்பம் தணிந்து காணப்ப டுகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியல் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தி ருந்தனர். அவர்கள் அருவி யில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.36 அடியாக உள்ளது. அணைக்கு 656 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் ணஇருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.20 அடியாக உள்ளது. அணைக்கு 547 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 4, நாகர்கோ வில் 2.4, புத்தன்அணை 4.8, சுருளோடு 5.2, சிற்றார் 2- 2, தக்கலை 4.4, குளச்சல் 4, இரணியல் 10.2, பாலமோர் 17.4, மாம்பழத்துறையாறு 7.6, திற்பரப்பு 5.3, கோழிப்போர்விளை 13.5, அடையாமடை 19.1, முக்கடல் 4.2.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை விவசாயிகளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பயிர் செய்யப்பட்டுள்ள கன்னிபூ கடைமடை பகுதிகளில் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள நிலையில் மழை பெய்துள்ளது விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்பொழுது கன்னி பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் நெற்பயிரகளை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால் அவரகள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×