search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருஞ்சாணி அணை"

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி எடுத்தது. நாகர்கோவில் பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

    தோவாளை, அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்த நிலையில் தெருக்களிலும் வீடுகளை சுற்றியும் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று இரு அணைகளுக்கும் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்றும் 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.24 அடியாக உள்ளது. அணைக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 75.12 அடியாக உள்ளது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1- நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர் மழைக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 12 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 5 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்துள்ளன.

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில் 605 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    • கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்துள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசி வருகிறது. அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதனையடுத்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.12 அடியாக உள்ளது. அணைக்கு 1639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1550 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.80 அடியாக உள்ளது. அணைக்கு 1849 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1432 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 187 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 129 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணை நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளது.

    ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மழைக்கு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 18 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 8 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சூறை காற்றுக்கு அகஸ்தீஸ்வரம், வடுவன் பற்று பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்கம்பங்கள் சேதமானதையடுத்து நேற்று இரவு தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. நள்ளிரவு மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

    • குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.59 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று இரவு 638 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரக்கூ டிய நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 2000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மதகுகள் வழியாக 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரிநீரை அதி கரிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 73.60 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அணைக்கு 3000 கன அடியாக அதிகரித்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு-1 அணைக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது.

    3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதேபோல் மாம்பழத்துறையாறு அணையும் இன்று முழு கொள்ளள வான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    • கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
    • அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால், அணை பகுதிக ளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும், தொடர் மழையினாலும் கோதை யாறு, வள்ளியாறு, பரளி யாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நேற்று அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. முக்கடல் அணை பகுதியில் 29.2 மில்லி மீட்டரும், மாம்பழத்துறை யாறில் 12.3 மில்லி மீட்டரும், பூதப்பாண்டியில் 11.4 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 402 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொண்ட பெருஞ்சாணி அணை 72 அடியை எட்டி வருகிறது.இன்று காலை அணையின் நீர்மட்டம் 71.55 அடியாக உள்ளது. அணைக்கு 586 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.54 அடியாக உள்ளது. அணைக்கு 188 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி விட்டது.

    அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை கருத்தில் கொண்டு, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இடைவிடாது மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.

    மாலையில் சற்று மழை குறைந்து இருந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மயிலாடி பகுதியில் நேற்று விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு அதிகபட்சமாக 110.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, கோழிபோர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1¼ அடியும் பெருஞ்சாணி அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக மழை பெய்த பிறகும் உயராத நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    இதேபோல் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 5½ அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு அணை நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது. அணைக்கு 1546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.2, பெருஞ்சாணி 67.8, சிற்றாறு 1-42, சிற்றாறு 2-46.4, பூதப்பாண்டி 31.4, களியல் 79, கன்னிமார் 20.2, கொட்டாரம் 62, குழித்துறை 97.2, மயிலாடி 110.2, நாகர்கோவில் 72.2, புத்தன்அணை 63.2, சுருளோடு 56.4, தக்கலை 59.8, குளச்சல் 26.4, இரணியல் 18.2, பாலமோர் 62.6, மாம்பழத்துறையாறு 93.8, திற்பரப்பு 26.6, ஆரல்வாய்மொழி 10.4, கோழிப்போர்விளை 84.5, அடையாமடை 52.3, குருந்தன்கோடு 28, முள்ளங்கினாவிளை 57.8, ஆணைக்கிடங்கு 94, முக்கடல் 26.

    • குமரியில் போதிய அளவு மழை இல்லாததால் நீர்மட்டம் சரிவு
    • பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்ய வில்லை. இயல்பான மழை அளவை காட்டிலும் 69 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை பெய்யாததையடுத்து மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். மதியம் நேரங்களில் சாலையில் கானல் நீராகவே காட்சி அளிக்கிறது. மழை ஏமாற்றி வரும் நிலையில் பாசன குளங்களிலும், அணை களிலும் நீர்மட்டம் கிடுகிடு வென சரிய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே அணை மற்றும் பாசன குளங்களை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. மீதம் உள்ள 3 ஆயிரம் ஹெக்டே ரில் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது.

    கடைமடை பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. அணையில் குறைவான அளவில் தண்ணீர் உள்ளதை யடுத்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வந்த நிலையில் தற்போது 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 504 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.10 அடியாக உள்ளது.

    அணைக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் சரிந்து காணப்படுகிறது. 

    • பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. வழக்கமான அளவை காட்டிலும் 65 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை குறைந்ததையடுத்து நீர் நிலைகளிலும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 27.57 அடியாக இருந்தது. அணைக்கு 312 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 681 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளி யேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே கன்னி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீரை விட கூடுதல் அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் இன்று காலை 24.65 அடியாக இருந்தது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 11.1 அடியாகவும் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களிலும் தண்ணீர் வற்ற தொடங்கி யுள்ளது. 2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களில் ஒரு சில குளங்களில் மட்டுமே தண்ணீர் முழு கொள்ள ளவில் உள்ளது.

    75 சதவீ தத்திற்கு மேற்பட்ட குளங்களில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. அணைகளிலும், குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பெருஞ்சாணியில் 15.8 மில்லி மீட்டர் மழை பதிவு
    • 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்படுகிறது. பாசன குளங்களிலும் போது மான அளவு தண்ணீர் இல்லை. இருப்பினும் விவ சாயிகள் பருவமழையை நம்பி சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை கண்ணாமூச்சி காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் நாகர்கோ வில் பகுதியில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. பின்னர் திடீரென மழை பெய்தது. ½ மணி நேரமாக மழை தூறியது.

    இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. பள்ளி சென்ற மாணவிகள் குடைபிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குல சேகரம், தக்கலை, ஆரல் வாய்மொழி, மார்த்தாண்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது.

    திற்பரப்பு அருவியிலும் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்ச மாக 15.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அணைகளுக்கு வரக்கூ டிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.69 அடியாக இருந்தது. அணைக்கு 366 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 689 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 22.95 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது.

    இதையடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சினை சமா ளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் புத்தன் அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண் ணீரை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.4, களியல் 14.5, திற்பரப்பு 12.8, பாலமோர் 12.2, கோழி போர்விளை 8.2, பூதப்பாண்டி 7.4, குழித்துறை 6.2, குருந்தன்கோடு 4.8, நாகர் கோவில் 4.2, அடையாமடை 4.2, மயிலாடி 2.6, பேச்சிப்பாறை 2.4, ஆணைக் கிடங்கு 2.1, கொட்டாரம் 1.2.

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 5 நாட்களில் 11 அடி உயர்வு
    • மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. இன்று காலையில் அங்கு மழை பெய்தது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, மாம்பழத்துறையாறு, நாகர்கோவில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு-2 அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 28.60 அடியாக உள்ளது. அணைக்கு 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.93 அடியாக உள்ளது. அணைக்கு 972 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.

    விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மழை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பெருஞ்சாணி அணையில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • சானல்களில் ஷிப்ட் முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் : 

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக பெய்ய தொடங்கும்.

    ஆனால் இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பாலமோர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அங்கு 13.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறை, பேச்சிப்பாறை, மாம்பழத்துறையாறு, திருவட்டார் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    மற்ற இடங்களில் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களிலிருந்து கன்னிபூ சாகுபடிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் பின்னர் 250 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    தற்பொழுது பெருஞ்சாணி அணையிலிருந்து 550 கன அடி தண்ணீர் கன்னிபூ சாகுபடிக்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி, பேச்சிப் பாறை அணையில் இருந்தும் 61 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 2 அணைகளில் இருந்தும் 611 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் சானல்களில் ஷிப்ட் முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.74 அடியாக இருந்தது. அணைக்கு 123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 38.95 அடியாக இருந்தது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    • பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    நாகர்கோவில், ஜூன்.3-

    கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 61 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 211 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானலுக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது.

    இந்த தண்ணீர் தோவாளை மற்றும் அனந்தனார் சானல்களில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களில் திறந்து விடவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 40.66 அடியாக இருந்தது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 61 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணிஅணை நீர்மட்டம் 41.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றார் 2 நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும் மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    • அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயி கள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தக்கலை, அருமநல்லூர், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நேற்று திறக்கப்பட்டது.

    அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 50 கன அடியாக குறைக்கப்பட் டுள்ளது. பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களிலும் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தேவை யான அளவு தண்ணீரை வெளியேற்றவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.62 அடி யாக இருந்தது. அணைக்கு 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக இருந்தது. அணைக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    ×