search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை

    • பெருஞ்சாணியில் 15.8 மில்லி மீட்டர் மழை பதிவு
    • 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்படுகிறது. பாசன குளங்களிலும் போது மான அளவு தண்ணீர் இல்லை. இருப்பினும் விவ சாயிகள் பருவமழையை நம்பி சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை கண்ணாமூச்சி காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் நாகர்கோ வில் பகுதியில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. பின்னர் திடீரென மழை பெய்தது. ½ மணி நேரமாக மழை தூறியது.

    இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. பள்ளி சென்ற மாணவிகள் குடைபிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குல சேகரம், தக்கலை, ஆரல் வாய்மொழி, மார்த்தாண்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது.

    திற்பரப்பு அருவியிலும் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்ச மாக 15.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அணைகளுக்கு வரக்கூ டிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.69 அடியாக இருந்தது. அணைக்கு 366 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 689 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 22.95 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது.

    இதையடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சினை சமா ளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் புத்தன் அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண் ணீரை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.4, களியல் 14.5, திற்பரப்பு 12.8, பாலமோர் 12.2, கோழி போர்விளை 8.2, பூதப்பாண்டி 7.4, குழித்துறை 6.2, குருந்தன்கோடு 4.8, நாகர் கோவில் 4.2, அடையாமடை 4.2, மயிலாடி 2.6, பேச்சிப்பாறை 2.4, ஆணைக் கிடங்கு 2.1, கொட்டாரம் 1.2.

    Next Story
    ×