search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு
    X

    பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு

    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்
    • காலை அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 73.19 அடியாக உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பெருஞ்சாணி அணை நேற்று மூடப்பட்ட நிலையில் அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் அணையில் இருந்து மீண்டும் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 73.19 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.12 அடியாக உள்ளது. அணைக்கு 691 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 785 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×