என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு
Byமாலை மலர்25 Dec 2022 9:01 AM GMT
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்
- காலை அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 73.19 அடியாக உள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பெருஞ்சாணி அணை நேற்று மூடப்பட்ட நிலையில் அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் அணையில் இருந்து மீண்டும் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 73.19 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.12 அடியாக உள்ளது. அணைக்கு 691 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 785 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X