search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

    • பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    நாகர்கோவில், ஜூன்.3-

    கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 61 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 211 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானலுக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது.

    இந்த தண்ணீர் தோவாளை மற்றும் அனந்தனார் சானல்களில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களில் திறந்து விடவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 40.66 அடியாக இருந்தது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 61 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணிஅணை நீர்மட்டம் 41.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றார் 2 நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும் மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    Next Story
    ×