என் மலர்
நீங்கள் தேடியது "Perunjani Dam"
- திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
- கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் நீடித்தது. நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று இரவு விட்டுவிட்டு சாரல் மழை பெய்து. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி,குழித்துறை, கோழிப்போர்விளை, குளச்சல், இரணியல், தக்கலை பகுதிகளில் இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. மோதிரமலை, தச்சமலை பகுதிகளிலும் மழை பெய்தது.
பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஏராளமான மரங்கள் முறிந்துவிழுந்தன. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி தேங்கியது.
மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. பாலமோரில் அதிகபட்சமாக 55.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.64 அடியாக இருந்தது. அணைக்கு 1,164 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 361 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.78 அடியாக உள்ளது. அணைக்கு 1,224கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 285 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 14 அடி எட்டியது.
தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் மற்றும் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழைக்கு வீடு ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் மழை பெய்தபடியே இருப்பதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.
- குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
- விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.59 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று இரவு 638 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரக்கூ டிய நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 2000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மதகுகள் வழியாக 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரிநீரை அதி கரிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 73.60 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அணைக்கு 3000 கன அடியாக அதிகரித்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு-1 அணைக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது.
3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதேபோல் மாம்பழத்துறையாறு அணையும் இன்று முழு கொள்ளள வான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.






