search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்கள்"

    • கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
    • வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.

    உடுமலை:

    உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகவடிவேல், ஒன்றியக்குழு ஆணையர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

    கூட்டத்தில் பெரியகோட்டை, தாந்தோணி, சின்னவீரம்பட்டி கிராமங்களில் கால்நடைகள் வேட்டையாடுவதை தடுப்பதற்காக ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாய்கள் பிடிக்கப்பட வேண்டும் என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர்.

    அதற்கு பிரதிநிதிகள் தரப்பில் வேட்டைக்கு செல்லும் நாய்களை வேட்டை முடிந்த பிறகு உரிமையாளர்கள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதனால் வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.அதை வனத்துறையினர் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    • வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மானை தெருநாய்கள் கடித்தன.
    • கடப்போகத்தி காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மான் ஒன்றை தெருநாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன.

    அதனை கண்ட பொதுமக்கள் நாய்களை அங்கிருந்து துரத்தி விட்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர் நேரில் வந்து பார்த்தபோது நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த மான் பெண் மான் என்றும், அதற்கு 3 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கடப்போகத்தி பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது. அங்கிருந்து தப்பி ஊருக்குள் வந்த மானை நாய்கள் துரத்தி கடித்துள்ளதாக வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

    • சிறுமி ஜான்வி அலறியபோது, மேலும் 2 நாய்கள் அங்கு வந்து சிறுமியின் கை, கால்களை கடித்தன.
    • பெற்றோர் மீட்டு கண்ணூர் சாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தெரு நாய்கள் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

    இதில் குறிப்பாக கண்ணூர் மாவட்டம் முழப்பிலாங்காட்டில் கடந்த 11-ந்தேதி தெரு நாய்கள் கடித்து குதறியதில் அந்த பகுதியை சேர்ந்த நவுஷாத்-நுசீபா தம்பதியரின் மகன் நிஹால் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.

    ஆனால் அது முழுமை பெறாததால், நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

    இதனால் வீதிக்கு வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் தெருநாய்களின் தாக்குதலில் மேலும் ஒரு மாணவர் மற்றும் மாணவி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    முழப்பிலாங்காடு அருகே உள்ள பச்சக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி ஜான்வி (வயது 9). 3-ம் வகுப்பு மாணவியான இவர் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த தெருநாய் அவரை கடித்தது. சிறுமி ஜான்வி அலறியபோது, மேலும் 2 நாய்கள் அங்கு வந்து சிறுமியின் கை, கால்களை கடித்தன.

    ஜான்வியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்த சிறுமி ஜான்வியை பெற்றோர் மீட்டு கண்ணூர் சாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறுமியை நாய்கள் கடித்ததை பார்த்தவர்கள், தெருநாய்கள் சிறுமியை கடித்து இழுத்துச் செல்ல முயன்றதாக தெரிவித்தனர். இதற்கிடையில் கொல்லம், சத்தினம்குளத்தில் மற்றொரு சம்பவமாக தெருநாய்கள் கடித்ததில் 10-ம் வகுப்பு மாணவர் ஆதில் என்பவர் காயமடைந்து உள்ளார். அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன.
    • பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    பஞ்சாயத்து ஊழியர்கள் கிராமங்களில் உள்ள நாய்களை பிடித்து கூண்டுகளில் அடைத்தனர். 100-க்கும் ஏற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பஞ்சாயத்து ஊழியர்களால் பிடிக்கப்பட்டு ஊசி போடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்தன.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    • ஆட்டுக்கொட்டகைக்குள் சென்ற நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
    • நாய்களால் அப்பகுதி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செந்தட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது39). இவர் செந்தட்டியில் இருந்து வேப்பங்குளம் செல்லும் சாலையில் ஆட்டு கொட்டகை அமைத்து அங்கு சுமார் 41 ஆடுகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு அந்த ஆட்டுக்கொட்டகைக்குள் சென்ற நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இதில் 24 செம்மறி ஆடுகளும் 8 வெள்ளாடுகளும் உயிரிழந்தன. மேலும் நாய்கள் கடித்ததில் 9 ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன.

    நாய்கள் கூட்டமாக சென்று ஆடுகளைக் கடித்து குதறும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதாகவும், அவற்றால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன.
    • விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை.

    நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும்.

    சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிடிபட்ட 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியிலேயே நாய்களுக்கு நாய் பிரியர்கள் உணவளிப்பதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

    இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறித்து சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விலங்குகள் நல தன்னார்வலர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குடியிருப்போர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க குடிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

    ஆனால் அதை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை நாய்கள் கடித்து குதறியது. 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
    • உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள் முகாமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. நாய் பீதியால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றனர். நாய்கடி பாதிப்பு என்பது கொடுமையானது. நாய்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படு பவர்களின் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இறப்பார்கள். எனவே மதுரை நகரில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    முன்பு நாய்களுக்கு கருத்தடை செய்ய சிறப்பு வாகனங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது வெகு சொற்பமாக நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்படுகின்றன. இதனால் நகரில் நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றவர்கள் விபரம் குறித்து தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமையும் சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கான பதிலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    இதில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை நாய் கடித்துள்ளது தெரியவந்தது. இதேபோல் கடந்த 2021 -ம் ஆண்டு நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவரும்,

    2022 -ம் ஆண்டு 2 பேரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியில் மாதத்திற்கு 200 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், நாய் கடியால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய் கண்காட்சியும் நடைபெற்றது.
    • நீண்ட காலத்துக்கு பிறகு இந்தாண்டு ஆஸ்திரேலியா ஷெப்பர்டு, பூடூல் ரக நாய்கள் பங்கேற்றுள்ளன.

    ஊட்டி:

    ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சவுத் இந்தியன் கெனல் கிளப் சார்பில் 132 மற்றும் 133-வது நாய் கண்காட்சி ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதல் நிகழ்ச்சியாக நாய்களின் கீழ் படிதல் போட்டியுடன் கண்காட்சி தொடங்கியது. இதில் லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரிட்டிவர், பீகள், பெல்ஜியம் மேலினாயஸ், டாஷ்ஹ வுண்ட் உட்பட 56 நாய்கள் பங்கேற்றன. கொல்கத்தாவை சேர்ந்த நடுவர் சி.ஆர்.பட்நாயக் நாய்களை மதிப்பிட்டார். இதில் நாய்கள் நடந்து வந்த விதத்தையும், பவ்யமாக படுத்து கீழ்படிதலை காட்டியதை பார்த்து சுற்றுலா பயணிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும், சிறப்பு கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய் கண்காட்சியும் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய்கள் போட்டியிட்டன. நடுவர் பிலிப் ஜான் மதிப்பிட்டார்.

    இது தொடர்பாக தென்னிந்திய கெனல் கிளப் செயலாளர் நகீனா கூறிய தாவது:-

    இந்தாண்டு நாடு முழு வதிலும் இருந்து 56 ரகங்களில் 470 நாய்கள் பங்கேற்கின்றன. நாய்களை மதிப்பிட பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரிபெல், சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டான்லி ேஷன் மற்றும் தைவானை சேர்ந்த சங் யூ சேங்க் நடுவர்களாக பணிபுரிகின்றனர்.

    கீழ் படிதல் போட்டியில் ஜம்ஷெட்பூரில் நடக்கும் போட்டியில் தான் அதிகளவு நாய்கள் பங்கேற்கும். அதையடுத்து, ஊட்டியில் நடக்கும் கண்காட்சியில் தான் 56 நாய்கள் பங்கேற்றுள்ளன. நீண்ட காலத்துக்கு பிறகு இந்தாண்டு ஆஸ்திரேலியா ஷெப்பர்டு, பூடூல் ரக நாய்கள் பங்கேற்றுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர்.
    • செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கோளப்பாறை கிராமத்தில் நேற்று தெருவில் சுற்றித் திரிந்த சில நாய்கள் திடீரென பொதுமக்களை கடித்துக் குதற ஆரம்பித்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கோளப்பாறை கிராமத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை ஏற்பாடு செய்தார். அதன்படி கோளப்பாறை கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வெறி நோய் விழிப்புணர்வு மற்றும் செல்லப்பி ராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் தலைமையில் டாக்டர் மகேஸ்ராம், டாக்டர் ஆலமரத்தான் மற்றும் குழுவினர் கிராமத்தில் சுற்றித்திரிந்த மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணிகளுக்கும் தெரு நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி போட்டனர் . அத்துடன் கோளப்பாறை கிராம பொதுமக்களுக்கு வெறிநோய் அறிகுறிகள், தடுப்பூசியின் அவசியம் ,மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட டாக்டர்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை யினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார். மேலும் விழுப்புரம் கா ல்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரனின் அறிவுரைப்படி கோள ப்பாறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை உதவி டாக்டர்கள் தலைமை யில் குழுக்கள் அமைத்து தினசரி தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார்.
    • நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சாதாரணக்கூட்டம் நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் வாசுதேவன், துணை தலைவர் ம.சுப்பராயன், மேலாளர் காதர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, நித்தியாதேவி பாலமுருகன்: எனது வார்டில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் தெருக்களிலேயே எரியூட்டுகின்றனர். அதனை தடுத்துநிறுத்த வேண்டும்.

    ஜெயந்திபாபு: பண்டாரகுளம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். ராமு: மீன்மார்கெட் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவேண்டும். காய்கனி மார்கெட் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டைகளாக கட்டி பிரதான சாலையோரம் வைக்கப்பட்டு வருவதால் நாள்தோறும் குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்லவேண்டும்.

    வள்ளி முத்து: நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் இருசக்கர வா–கனங்களிலோ, நடந்தோ செல்லமுடியவில்லை. நாய்கள் துரத்தி கடிக்கிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ராஜசேகரன்: எரியவாயு தகனமேடையில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை மாற்றிவிட்டு தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் பங்கேற்றனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் நன்றி கூறினார்.

    • மகாலட்சுமி வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிலில் சாத்விகாவை தூங்க வைத்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்தார்.
    • சுற்றித்திரிந்த நாய்கள் கூட்டம் தூங்கி கொண்டிருந்த குழந்தை அருகே வந்தன. சாத்விகாவை திடீரென கட்டிலில் இருந்து கடித்து இழுத்து சென்றன.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மேட்டவலசா பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. அப்பகுதியில் சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு குசுமா மற்றும் சாத்விகா (வயது1) என இரண்டும் பெண் குழந்தைகள் இருந்தன.

    நேற்று மாலை மகாலட்சுமி வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிலில் சாத்விகாவை தூங்க வைத்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்தார். மூத்த மகள் குசுமா தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.

    அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கூட்டம் தூங்கி கொண்டிருந்த குழந்தை அருகே வந்தன. சாத்விகாவை திடீரென கட்டிலில் இருந்து கடித்து இழுத்து சென்றன அருகில் உள்ள தேக்கு மர தோப்பிற்குள் வேகமாக இழுத்துச் சென்ற நாய்கள் குழந்தையை கடித்து குதறின.

    இதனால் குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி துடித்தது. தங்கை அழும் சத்தத்தை கேட்ட குசுமா நாய்கள் சாத்விகாவை கடிப்பதை கண்டு அழுது கொண்டே வீட்டுக்குள் ஓடியது. இதுகுறித்து அவரது தாயாரிடம் கூறியதும் அவர் அலறி அடித்தப்படி வெளியே ஓடிவந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று நாய்களை விரட்டி அடித்து விட்டு சாத்விகாவை மீட்டனர். விஜயநகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீகாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

    குழந்தை இறந்ததை கண்டு சாத்விகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • கடந்த 10 நாட்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 வார்டில் மொத்தம் 551 நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளது.
    • 407 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் வார்டு வாரியாக நாய்கள் அதற்கான வாகனங்கள் மூலம் பிடித்து வரப்பட்டு கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. ஒரு வார்டில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அதே வார்டில் விடப்படுகிறது.

    அந்தவகையில், கடந்த 10 நாட்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 வார்டில் மொத்தம் 551 நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளது. இதில், 407 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக புளியந்தோப்பில் 150 நாய்களும், கண்ணம்மாப் பேட்டையில் 70 நாய்களும், மீனம்பாக்கத்தில் 57 நாய்களும் பிடிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    ×