search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்ட உதவிகள்"

    • உலக மனநல தினத்தை முன்னிட்டு பி.வி.எம் மனநல காப்பகத்தில் கருத்தரங்கம் நடந்தது.
    • டாக்டர் அப்துல் ரசாக் விளக்கவுரையாற்றினார்.



    காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.

     ராமநாதபுரம்

    உலக மனநல தினத்தை முன்னிட்டு கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதிநகரில் செயல்படும் பி.வி.எம். மனநலக்காப்பகத்தில் மனநலம் குறித்த கருத்த ரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கட்டடக்கலை நாயகன் விருதாளரும், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவரும், கீழக்கரை,ராமநாதபுரம், தேவிபட்டினம், தொண்டி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு பல்வேறு கட்டடங்களை கட்டி வரும் மெரீனா காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.

    கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளரும், ரோட்டரி செயலாளருமான எபன் பிரவீன் குமார், ரோட்டரி சங்க பொரு ளாளரும், முன்னாள் தலைவருமான சுப்ரம ணியன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அரசு வட்டார மருத்துவ அலுவலருமான செய்யது ராசிக்தீன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அப்பா மெடிக்கல்ஸ் உரிமையாளருமான டாக்டர் சுந்தரம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கீழக்கரை நகர் உப தலைவர் சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி மாஸ்டர் ரெடிமேட்ஸ் உரிமையாளர் செல்வ நாராயணன், மூத்த வழக்க றிஞரும், ராமநாதபுரம் இலவச சட்ட மைய வழக்கறி ஞருமான கேசவன், மதுரா பவர்ஸ் நிறுவனர் சித்ர வேலு, மெரீனா கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர் செய்யது முக்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பி.வி.எம் மனநலக்காப்பக நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் உலக மனநல தினத்தை பற்றி விளக்கவுரையாற்றினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தின் தலைமை பொறுப்பாளர் உம்முல் சல்மா நன்றி கூறினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தில் உள்ள பயனாளிகளுக்கு அன்னதானம், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பி.வி.எம். மனநலக் காப்பகத்தின் திறப்பு விழா சிறப்பு மலரும், நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.

     


    • நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

     தாராபுரம் : 

    தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.64 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவி, வீட்டுமனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் வழங்கினர். விழாவில் அமைச்சர் மு.ெப.சாமிநாதன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றி வருகிறார்கள். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழகக்கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை வழங்கல் புதுமைப்பெண் என்கிற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் கயல்விழி பேசும்போது " இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து வீட்டுமனைப் பட்டா வழங்குதல் போன்ற பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பட்டாவை பெற்ற நபர்கள் அங்கே வீடு கட்டி குடியேறிய பட்சத்தில் அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் புஷ்பா தேவி. தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகர்மன்ற தலைவர் கு.பாப்பு கண்ணன், தாசில்தார் கோவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட பாலவிளை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிரா மங்களிலும் முதல் மற்றும் 2 கட்டங்களாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன் பெறுவதே ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 4,77,000 குடும்ப அட்டைகள் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமம் திட்டத்திற்கு சுமார் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த மாதம் 15-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விடுப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமம் திட்டம் தொடர்பாக குறைகள் இருந்தால் தகுந்த சான்றிதழ் வழங்கி அக்குறை களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    கடந்த வாரம் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள், தாசில்தார்கள் ஆகியோரிடம் அறிக்கைகள் பெறப்பட்டு, கலந்தாய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார். முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

    முகாமில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நோட்டுப்புத்தகங்களையும், 4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • சிறப்பு மருத்துவ முகாம்களில் 1,041 மாற்றுத்திறனாளி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மாற்றுத்திற னாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுபெற வேண்டுமென்று தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக் கான இலவச பேருந்து பயணச்சலுகை, பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலு கை, அரசு பஸ்சில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பஸ் பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக் கான சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்று கோல் மற்றும் பிரெய்லி கை கடிகாரம், நவீன செயற்கை அவயம், செயற்கை அவயம், முட நீக்கு சாதனம் (காலிபர்), ஊன்றுகோல், கை, கால் பாதிக்கப்பட்டவருக்கான திருமண உதவித்தொகை, பார்வையற்றவருக்கான திருமண உதவித்தொகை, செவித்திறன் குறைவுடை யோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக் கான திருமண உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக் கான நடமாடும் சிகிச்சை பிரிவு போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2022 மற்றும் 2023 ஆண்டு வரை 31 பயனாளி களுக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களும், 55 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திர மும், 60 பயனாளிகளுக்கு செவித்திறன் கருவியும், 20 பயனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலியும், 8 பயனாளி களுக்கு ரூ.8 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டோருக்கான நாற்காலியும் வழங்கப்பட்டது.

    60 பயனாளிகளுக்கு ஆக்சிலரி ஊன்றுகோல், 60 பயனாளிகளுக்கு கருப்பு கண்ணாடியும், 30 பயனாளி களுக்கு ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியும், 120 பயனாளிகளுக்கு பிரதி பலிக்கும் மடக்கு குச்சிகளும், 60 பயனாளிகளுக்கு துணை ஊன்றுகோல்களும், 30 பயனாளிகளுக்கு பிரெய்லி கைகடிகாரமும், 40 பயனாளிகளுக்கு எல்போ ஊன்றுகோல்களும், 300 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து மதிப்பிலான திறன் ேபசிகளும் வழங்கப்பட்டது.

    30 பயனாளிகளுக்கு நடைபயிற்சி சாதனங்களும், 6 பயனாளிகளுக்கு கோர்னர் இருக்கைகளும், 58 பயனாளி களுக்கு ரூ.48 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 17 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பி லான முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியும், 80 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பி லான சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது.

    26 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான ஆவாஸ், 5 பயனாளிகளுக்கு ஸ்மாட் கேனும், 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளி வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை என ஆக மொத்தம் 1,041 பயனாளி களுக்கு ரூ.1.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மாற்றுதிறனாகளின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாற்றுத்திற னாளிகளும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
    • அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை திறந்து வைத்து தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பால் வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் நிர்வாக இயக்குநர் வினித் முன்னிலை வகித்தனர்.

    மேலும் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார் (பெரியகுளம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். தங்கதமிழ்செல்வன், லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன பாலகத்தில் தேவையான குளிரூட்டும் கருவிகள், பன்னீர் தயாரிக்கும் எந்திரம், பாதாம் பொடி தயாரிக்கும் எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களும், ஆவின் நெய், வெண்ணெய், பால்கோவா, ஐஸ்கிரீம், நறுமண பால், தயிர், மோர் மற்றும் பால்பவுடர் போன்ற பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தரமானதாகவும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பாலகத்தின் விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.

    தேனி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் திறன் கொண்ட குளிரூட்டும் நிலையத்திற்கு மாவட்டத்திலுள்ள 444 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம், நாள் ஒன்றிற்கு 50,000 லிட்டர் கொள்முதல் செய்து குளிரூட்டப்பட்டு, மதுரை மற்றும் பிற மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு பால் வாகனங்கள் மூலம் தினமும் அனுப்பி வைக்கப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் 43 பயனாளிகளுக்கு பால் கறவை மாட்டுக் கடன் உதவிகளும், ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் 29 பயனாளிகளுக்கு கறவை மாடு பராமரிப்பு கடன் உதவிகளும், ரூ.19.54 லட்சம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தாட்கோ மூலம் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.35,250 மதிப்பிலான தீவன விதைகளுக்கான கடன் உதவிகளும், 218 பயனாளிகளுக்கு ரூ.96.56 லட்சம் மதிப்பீட்டில் பால் தர பரிசோதனை கருவிகளும், சிறுபால் பண்ணை அமைப்பதற்காக ஒரு குழுவிற்கு ரூ.66 7. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், மகளிர் திட்டத்தின் மூலம் 3 குழுக்களுக்கு ரூ.24.50 லட்சம் கடனுதவிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் பால் மாட்டுக்கடனாக 71 பயனாளிகளுக்கு ரூ.42.86 லட்சம் கடனுதவிகளும் என மொத்தம் 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    தேனி மாவட்டத்தில் அதிகப்படியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகப்படியான பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக நெய் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • 58-வது வட்ட தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. 58-வது வட்டம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞான ஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாளை (7-ந்தேதி) நடைபெறு கிறது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். 58-வது வார்டு கவுன்சிலரும், மாநில தலைமை செயற்குழு உறுப்பின ருமான ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். பகுதி செயலர் மாறன், வட்ட செயலாளர் சீனிர மேஷ், கப்பல்ஜான், வக்கீல் ராகவேந்திரன், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரி யர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கு கின்றனர். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பொன்முத்து ராமலிங்கம், வேலுசாமி, குழந்தைவேலு, மூவேந்தி ரன், மேயர் இந்திராணி, தன செல்வம், சின்னம்மாள், அக்ரிகணேசன், சவுந்தர் ராஜன் உள்பட பலர் பங் கேற்கின்றனர். ராஜா, சட்சி தானந்தம், அன்புகுமார், ஆகியோர் நன்றி கூறு கின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு 1189 பயனாளிகளுக்கு ரூ.980.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.

    விழாவில் பயிர்கடன், கால்நடை பராமரிப்பு மூலதான கடனுதவிகள், வேளாண் மத்திய கால கடனுதவிகள், தானிய ஈட்டுக்கடனுதவிகள், பொது நகைக்கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளை வழங்கினார்.

    இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அன்றாட பயணச் செலவு களை தவிர்த்திடும் வகையில் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணத் திட்டத்தினை ஏற்படுத்தி யுள்ளார். பெண்கள் உயர்கல்வி கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது. மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம். இத்திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,06,50,000 மகளிர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை த்தொகை கிடைக்க ப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி உடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். எந்த மாநி லத்திலும் செயல்ப டுத்தப்படாத அற்புதமான திட்டத்தை முதல்-அமைச்சர் செயல்ப டுத்தியுள்ளார்.

    பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 296 விவசாயிகளுக்கு ரூ.556.10 லட்சம் மதிப்பிலான பயிர்கடன், 21 விவசாயிகளுக்கு ரூ.12.74 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு மூலதன கடன், 1 விவசாயிக்கு ரூ.5.94 லட்சம் மதிப்பிலான வேளாண் மத்திய காலக்கடன், 2 விவசாயிகளுக்கு ரூ.20.00 லட்சம் மதிப்பிலான தானிய ஈட்டுக்கடன், 604 விவசாயிகளுக்கு ரூ.274.49 லட்சம் மதிப்பிலான பொது நகைக்கடன், 264 நபர்களுக்கு ரூ.110.67 லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன், 1 மாற்றுதிறனாளிக்கு ரூ.0.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் என மொத்தம் 1189 நபர்களுக்கு ரூ.980.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க ப்பட்டுள்ளது. என பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அன்பரசு, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுனா ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகாத்தாள், ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராணி மோகனபிரபு, ஒட்டன்சத்திரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் தஷீரா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 120 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தி.மு.க. விவசாய அணி நெல்லை மண்டல கலந்துரையாடல் கூட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் 120 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள், தென்னங்கன்றுகளை மாநில விவசாய அணி செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், குற்றாலம் பேரூர் செயலாளர் சங்கர் என்ற குட்டி, நகர செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் ஷெரீப், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ், டேவிட் முருகன், பிச்சையா, சொக்கம்பட்டி முருகன், மதுரை சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், மனோ தங்கராஜ் வழங்கினர்
    • விழாவில் 7,36,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச் சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திற னாளி களுக்கான மருத்துவ முகாம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் இன்று நடந்தது.

    விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சிவசங்கரன் வரவேற்று பேசினார். மருத்துவ முகாமினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். 11 பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களும், 47 பயனாளிகளுக்கு திறன் பேசியும், 5 பேருக்கு பாதுகாவலர் நியமன சான்றும் வழங்கப்பட்டது. விழாவில் 7,36,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் உள்ளத்தோடு மக்களை பார்த்து வருகிறார். இந்த அரசு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6.8 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

    உலக நாடுகளில் இதை ஒப்பிடும்போது ஒரு சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமாக மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.1443 கோடி செலவில் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொழில் தொடங்கவும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய துணை கண்டத்திலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளி களுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்கியது தி.மு.க. அரசு தான். மாற்றுத்திறனாளிகள் எப்பொழுது வேண்டுமானா லும் தங்களது பிரச்சினைகளை எங்களிடம் நேரில் தெரிவிக்க லாம். மாற்றுதிறனாளிகள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. இந்த அரசு உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளி களுக்கு என்று தனி அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி. கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கி உள்ளார்.

    ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்கள் கல்வி அறிவு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பசிப்பிணியை போக்குவதுடன் அறிவு பிணியை போக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவி தொகை கிடைக்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கும் நிலையை உருவாக்கவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் நலம் சார் அரசாக இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஒன்றிய செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன், மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை ஜேமினா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் பிரியாதிரேஸ் நன்றி கூறினார்.

    • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சத்துணவு அமைப்பாளர்களிடம் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் துணை சேர்மன் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    அரசு மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு, முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளிகளில் செயல்பட்டு வருவதையொட்டி அனைத்து குழந்தைகளுக்கும் தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் விழா வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி சத்துணவு அமைப்பாளர்களிடம் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய கணபதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலகர் (சத்துணவு) மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உள்ளார் விக்கி, தி.மு.க. கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடியில் 129 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் உள்ள உதயனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடி யாக வழங்கிடும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந் தேடுத்து அதில் உள்ள கிரா மங்களுக்கு சென்று பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடத்தப் பட்டு வருகிறது.

    இந்த முகாமினை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி யுடைய 130 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பொது மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு கூட்டு குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட் டங்களின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம் பாட் டிற்கு மகளிர் திட்டம் கூட்டு றவு சங்கங்களின் மூலம் கிஷான் அட்டை, கால்நடை பராமரிப்பு, கடன் பயிர் கடன் மற்றும் கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்து பயன் பெறுவதற்கென ஒரு ஹெட் டருக்கு ரூ. 7,500 தொகை என அரசின் பல்வேறு திட் டங்களின் கீழ் பொதுமக்க ளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசால் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களை அணு பயன்பெற வேண்டும்.

    மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான நபர்களை தவிர நிரா கரிக்கப்பட்ட மனுக்களுக்கு அதற்கான காரணங்களை இணையதளத்தின் வாயி லாக தெரிந்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை மேல் முறையீடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும். குறிப் பாக அவர்கள் உயர் கல்வி கற்பதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோக னச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வரு வாய் கோட்டாட்சியர்சுகிதா, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, உதயனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரிட்டோ, இளையான்குடி வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
    • கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புல்லக்கடம்பன் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வருவாய்த்துறையின் மூலம் 41 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூ தியம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், இயற்கை மரண உதவித்தொகை என ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல் உட்பிரிவு, பட்டா மாறுதல் முழுப்புலம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.53 ஆயிரத்து170 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக் கலைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பழமரத் தொகுப்பு ரூ.22 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தார்பாய், தெளிப்பான் ரூ.9 ஆயிரத்து 640 மதிப்பீட்டி லும், தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2 பயனாளிகளுக்கு பயணியர் ஆட்டோ, துணிக்கடை ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 326 மதிப்பீட்டிலும் என மொத்தம் 146 பயனாளி களுக்கு ரூ.18 லட்சத்து 62 ஆயிரத்து 836 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக் களுக்கு அரசின் நலத் திட்டங்கள் இன்று வழங்கப் படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்துத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.

    இப்பகுதியை பொருத்த வரை விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாயம் பணிகளுக்கு தேவையான திட்டங்கள் வேளாண்மைத் துறையின் மூலம் செயல் படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முகம்மது முக்தார், திருவாடனை வட்டாட்சியர் கார்த்திகேயன் , புல்லக் கடம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் மாதவி கண்ணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×