search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமை"

    • கலெக்டர் தகவல்
    • துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட பாலவிளை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிரா மங்களிலும் முதல் மற்றும் 2 கட்டங்களாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன் பெறுவதே ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 4,77,000 குடும்ப அட்டைகள் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமம் திட்டத்திற்கு சுமார் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த மாதம் 15-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விடுப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமம் திட்டம் தொடர்பாக குறைகள் இருந்தால் தகுந்த சான்றிதழ் வழங்கி அக்குறை களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    கடந்த வாரம் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள், தாசில்தார்கள் ஆகியோரிடம் அறிக்கைகள் பெறப்பட்டு, கலந்தாய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார். முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

    முகாமில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நோட்டுப்புத்தகங்களையும், 4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.

    • குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் ரேசன் கார்டுகள் மூலம் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது .

    சிறப்பு முகாம்கள்

    அதன்படி சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக வருவாய் துறை மற்றும் கூட்டுறவு துறை மூலம் 1000-த்திற்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தி தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.

    சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். 15-ந் தேதி காலை இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளை வழங்குகிறார்.

    எடப்பாடியில் தொடக்கம்

    இதைதொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட தொடக்க விழா 15-ந் தேதி எடப்பாடியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்குகிறார். இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்கு வதற்கான ஆைணைகளை வழங்குகிறார்.

    மேலும் ஏ.டி.எம்.மில் இந்த பணத்தை எடுக்க குடும்ப தலைவிகளுக்கு தனியாக ஒரு ஏ.டி.எம்.கார்டுகளும் வழங்கப்படுகிறது. எடப்பாடியி ல்நடைபெறும் விழாவில் 5 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை ஆணை மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை அவரவர் கணக்கில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

    • முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிைம திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந் தோறும் 1000 உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெற சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக முகாம்கள் நடந்தது. முதல்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 846 மையங்களில் நடந்த முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக கடந்த 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 695 மையங்களில் நடந்த முகாமில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 213 விண்ணப் பங்கள் என மொத்தம் 1541 முகாம்கள் மூலம் 7 லட்சத்து 13 ஆயி ரத்து 662 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதற்கிடையே ஓய்வூதியம் பெறும் மாற்று திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (18-ந் தேதி) முதல் வரும் 20-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஏற்கனவே முகாம் நடைபெற்ற அதே 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் இன்று காலை தொடங்கியது.

    ஏற்கனவே 2 கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் விடுபட்டவர்களும் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்கள் இன்று காலை முதல் இந்த முகாம்களில் திரண்டுள்ளனர். அவர்களிடம் விண்ணப் பங்களை பெற்று அதிகாரிகள் பதிவு செய்து வருகிறர்கள். இதனை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    • 56 பேர் கலந்து கொண்டனர்
    • கலெக்டர் தலைமை தாங்கி பேசினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

    இந்த பயிற்சியில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 56 பேர் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பூர்த்தி செய்த படிவத்தினை எவ்வாறு மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து, மாநில அளவிலான பயிற்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் விரிவாக பயிற்சி அளித்தaனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உட்பட இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×