என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's rights"

    • 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
    • இத்திட்டம் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை மற்றும் சம்பா பயிர்களும், நவம்பர் இறுதியில் டிட்வா புயலால் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அரசின் அலட்சியம் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் கடந்த 13-ந் தேதி வரை சராசரியாக 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்திருந்தன.

    சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போது 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் இத்திட்டம் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டிருக்கும் அப்பட்டமான வாக்குத் திருட்டு முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    வாக்குகளைத் திருடும் தி.மு.க.வின் பேராசைக்காகவும், மோசடிக்காகவும் உழவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் ஏமாற்ற முயன்றால், தி.மு.க. அரசுக்கு எதிராக காவிரி பாசன மாவட்ட மக்கள் கொந்தளிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட உழவர்களின் உணர்வுகளையும், துயரத்தையும் அரசு புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 56 பேர் கலந்து கொண்டனர்
    • கலெக்டர் தலைமை தாங்கி பேசினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

    இந்த பயிற்சியில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 56 பேர் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பூர்த்தி செய்த படிவத்தினை எவ்வாறு மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து, மாநில அளவிலான பயிற்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் விரிவாக பயிற்சி அளித்தaனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உட்பட இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் ரேசன் கார்டுகள் மூலம் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது .

    சிறப்பு முகாம்கள்

    அதன்படி சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக வருவாய் துறை மற்றும் கூட்டுறவு துறை மூலம் 1000-த்திற்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தி தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.

    சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். 15-ந் தேதி காலை இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளை வழங்குகிறார்.

    எடப்பாடியில் தொடக்கம்

    இதைதொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட தொடக்க விழா 15-ந் தேதி எடப்பாடியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்குகிறார். இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்கு வதற்கான ஆைணைகளை வழங்குகிறார்.

    மேலும் ஏ.டி.எம்.மில் இந்த பணத்தை எடுக்க குடும்ப தலைவிகளுக்கு தனியாக ஒரு ஏ.டி.எம்.கார்டுகளும் வழங்கப்படுகிறது. எடப்பாடியி ல்நடைபெறும் விழாவில் 5 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை ஆணை மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை அவரவர் கணக்கில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

    ×