மகளிர் உரிமை திட்ட பயிற்சி

56 பேர் கலந்து கொண்டனர் கலெக்டர் தலைமை தாங்கி பேசினார்
மகளிர் உரிமை திட்ட பயிற்சி
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

இந்த பயிற்சியில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 56 பேர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பூர்த்தி செய்த படிவத்தினை எவ்வாறு மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து, மாநில அளவிலான பயிற்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் விரிவாக பயிற்சி அளித்தaனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உட்பட இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com