search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மனநல தினம்"

    • உலக மனநல தினத்தை முன்னிட்டு பி.வி.எம் மனநல காப்பகத்தில் கருத்தரங்கம் நடந்தது.
    • டாக்டர் அப்துல் ரசாக் விளக்கவுரையாற்றினார்.



    காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.

     ராமநாதபுரம்

    உலக மனநல தினத்தை முன்னிட்டு கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதிநகரில் செயல்படும் பி.வி.எம். மனநலக்காப்பகத்தில் மனநலம் குறித்த கருத்த ரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கட்டடக்கலை நாயகன் விருதாளரும், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவரும், கீழக்கரை,ராமநாதபுரம், தேவிபட்டினம், தொண்டி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு பல்வேறு கட்டடங்களை கட்டி வரும் மெரீனா காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.

    கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளரும், ரோட்டரி செயலாளருமான எபன் பிரவீன் குமார், ரோட்டரி சங்க பொரு ளாளரும், முன்னாள் தலைவருமான சுப்ரம ணியன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அரசு வட்டார மருத்துவ அலுவலருமான செய்யது ராசிக்தீன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அப்பா மெடிக்கல்ஸ் உரிமையாளருமான டாக்டர் சுந்தரம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கீழக்கரை நகர் உப தலைவர் சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி மாஸ்டர் ரெடிமேட்ஸ் உரிமையாளர் செல்வ நாராயணன், மூத்த வழக்க றிஞரும், ராமநாதபுரம் இலவச சட்ட மைய வழக்கறி ஞருமான கேசவன், மதுரா பவர்ஸ் நிறுவனர் சித்ர வேலு, மெரீனா கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர் செய்யது முக்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பி.வி.எம் மனநலக்காப்பக நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் உலக மனநல தினத்தை பற்றி விளக்கவுரையாற்றினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தின் தலைமை பொறுப்பாளர் உம்முல் சல்மா நன்றி கூறினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தில் உள்ள பயனாளிகளுக்கு அன்னதானம், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பி.வி.எம். மனநலக் காப்பகத்தின் திறப்பு விழா சிறப்பு மலரும், நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.

     


    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
    • முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக மனநல தின விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவா் சஞ்சய் பேசியதாவது:-

    ஒருவரின் உடல் மட்டுமல்ல, மனமும் நலமாக இருந்தால்தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும். மனமும், உடலும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றின் பாதிப்பு மற்றொன்றையும் பாதிக்கும்.

    போதைப்பொருள்கள் பயன்படுத்துவது, வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிக்கப்படுகிறது. மக்களிடம் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மனநலக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கவும் உலக மனநல தினம் உருவாக்கப்பட்டது.

    மனநலம் பாதிக்கப்பட்டவா் குறித்த விவரங்கள் தெரியவந்தால் 104 என்ற எண்ணுக்கும், மனச்சோா்வு உள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து 14416 என்ற எண்ணிற்கும் தகவல் தர வேண்டும் என்றாா்.பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, தினேஷ்கண்ணன், சிரஞ்சீவி, சிவசண்முகம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்களுக்கு ஏதேனும் மனநல பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு உதவுவேன், மனநலம் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.

    • மனநல நோய் ஒருவரின் எண்ணம், செயல், உணர்வுகளை பாதிக்கிறது.
    • மனநலம் இன்றி உடல் நலம் இல்லை. அதேபோல் உடல்நலம் இன்றி மனநலம் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ந்தேதி உலக சுகாதார நிறுவனத்தால் 'உலக மனநல தினம்' அனுசரிக்கப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'உலக மக்கள் அனைவரின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலே முதன்மையானதாக கருத வேண்டும்' என்பதே. உலக அளவில் 8 பேரில் ஒருவர் மனநல பாதிப்பு உள்ளவராக உள்ளனர். இளம் வயதிலேயே அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

    உலக சுகாதார நிறுவனம் 10 முதல் 19 வயது வரையிலுள்ள வளர் இளம் பருவத்தினரில் 7 பேரில் ஒருவர் மனநல பிரச்சினையில் உள்ளதாக தெரிவிக்கிறது.

    இந்த வயதினர் ஆண்டு தோறும் சராசரியாக 45,800 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது 11 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலக அளவில் தற்கொலை எண்ணங்கள் மக்களிடையே அதிகரித்து உள்ளது. மனப்பதற்றம் மற்றும் மனஅழுத்த நோய்கள் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நீண்ட நாள் கருத்து வேறுபாடுகள், வன்முறை, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அவசர கால நோய்கள் போன்றவைகளினால் மக்கள், மனநல பாதிப்பு அடைகின்றனர்.

    மனநல நோய் ஒருவரின் எண்ணம், செயல், உணர்வுகளை பாதிக்கிறது. மனநலம் இன்றி உடல் நலம் இல்லை. அதேபோல் உடல்நலம் இன்றி மனநலம் இல்லை. இலவசமாக மனநல சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் அளிக்கப்படும். மனநல சிகிச்சை பெற மக்கள் தயக்கத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×