search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    58-வது வட்ட தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    58-வது வட்ட தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

    • 58-வது வட்ட தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. 58-வது வட்டம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞான ஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாளை (7-ந்தேதி) நடைபெறு கிறது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். 58-வது வார்டு கவுன்சிலரும், மாநில தலைமை செயற்குழு உறுப்பின ருமான ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். பகுதி செயலர் மாறன், வட்ட செயலாளர் சீனிர மேஷ், கப்பல்ஜான், வக்கீல் ராகவேந்திரன், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரி யர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கு கின்றனர். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பொன்முத்து ராமலிங்கம், வேலுசாமி, குழந்தைவேலு, மூவேந்தி ரன், மேயர் இந்திராணி, தன செல்வம், சின்னம்மாள், அக்ரிகணேசன், சவுந்தர் ராஜன் உள்பட பலர் பங் கேற்கின்றனர். ராஜா, சட்சி தானந்தம், அன்புகுமார், ஆகியோர் நன்றி கூறு கின்றனர்.

    Next Story
    ×