search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artist Centenary Celebration"

    • 58-வது வட்ட தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. 58-வது வட்டம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞான ஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாளை (7-ந்தேதி) நடைபெறு கிறது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். 58-வது வார்டு கவுன்சிலரும், மாநில தலைமை செயற்குழு உறுப்பின ருமான ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். பகுதி செயலர் மாறன், வட்ட செயலாளர் சீனிர மேஷ், கப்பல்ஜான், வக்கீல் ராகவேந்திரன், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரி யர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கு கின்றனர். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பொன்முத்து ராமலிங்கம், வேலுசாமி, குழந்தைவேலு, மூவேந்தி ரன், மேயர் இந்திராணி, தன செல்வம், சின்னம்மாள், அக்ரிகணேசன், சவுந்தர் ராஜன் உள்பட பலர் பங் கேற்கின்றனர். ராஜா, சட்சி தானந்தம், அன்புகுமார், ஆகியோர் நன்றி கூறு கின்றனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி நடந்தது.
    • ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகளப்போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்த விளையாட்டு போட்டிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விளையாட்டு போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற னர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், ரமேஷ் கண்ணா, சம்பத் குமார், தௌபீக் அலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உதயசூரியா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×