search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூரில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    வாசுதேவநல்லூரில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சத்துணவு அமைப்பாளர்களிடம் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் துணை சேர்மன் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    அரசு மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு, முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளிகளில் செயல்பட்டு வருவதையொட்டி அனைத்து குழந்தைகளுக்கும் தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் விழா வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி சத்துணவு அமைப்பாளர்களிடம் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய கணபதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலகர் (சத்துணவு) மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உள்ளார் விக்கி, தி.மு.க. கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×