search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்ட உதவிகள்"

    • கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சி பாதையில் செயல்படுத்த கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
    • 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் , எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம் , ராமலிங்கம் , எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் 2315 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகளையும், கூட்டுறவு வார விழா பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செயல்படுத்திட கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வம் , மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி , வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா , பூர்ணிமா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பழனீஸ்வரி , இணைப் பதிவாளர் பெரியசாமி , துணைப் பதிவாளர் அப்துல் மஜீத் மற்றும் துணைப் பதிவா ளர்கள், பொது மேலாளர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாதவராயர் பாலர்பள்ளி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது
    • 51 நலிவுற்ற பெண் முதியோர்களுக்கும் 3 நலிவுற்ற ஆண் முதியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தில் அமைந்து உள்ள மாதவராயர் பாலர் பள்ளி மன்றம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி 54 நலிவுற்ற ஏழை முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மன்ற செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இதில் 51 நலிவுற்ற பெண் முதியோர்களுக்கும் 3 நலிவுற்ற ஆண் முதியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் நலிவுற்ற ஏழை முதியோர்களுக்கு இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாதவராயர் பாலர் பள்ளி குழந்தைகள், மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அரிசி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • சிறப்பு விருந்தினராக கே.ஆர்.பி. இளங்கோ கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் பொருளாளருமாகிய சினேகா பாரதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இதில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனரும், ஆலமர வட்டார தலைவருமாகிய கே.ஆர்.பி. இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட பொருட்களை வழங்கி கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் ஜேக்கப் சுமன் வாழ்த்தி பேசினார். முடிவில் ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளர் சுனில்குமார் நன்றி கூறினார்.

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் 2-வது கட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேட்டவலம் சாலையில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் குட்டி புகழேந்தி, சீனுவாசன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் ஹேமா சசிகுமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பிற்கு வரும் போதெல்லாம் திருவண்ணா மலை மாவட்டம் வளர்ச்சி அடைகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது மாவட்டத்திற்கு பல வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தன.

    குறிப்பாகச் சொல்லப்போனால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை, போக்குவரத்து மண்டலம் ஆகியவை அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி.

    தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொது மக்களுக்கு நன்மை விளைவிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் ஆட்சியின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பஸ் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கல்லூரி பெண்களுக்கான புதுமைப்பெண்கள் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், தொமுச மாநில செயலாளர் சௌந்தரராசன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், வக்கீல் முரளி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சமயராஜ், ராயல் தியாகு, வட்ட செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்ட பிரதிநிதி வெங்கட் நன்றி கூறினார்.

    • கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
    • கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் ஊராட்சியில் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

    ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர்கள் சங்கீதா பாரி (ஆலங்காயம்), சுரேஷ் குமார் (மாதனூர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி சப் - கலெக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்றார். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.

    முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், சலவைப்பெட்டி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் உதவித் தொகை, களை எடுக்கும் கருவி, உளுந்து விதை, ஊட்டசத்து பெட்டகம், வங்கி கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை என ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்து 578 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளா (இளையநகரம், காந்திமதி (மேல்குப்பம்), ஒன்றிய குழு உறுப்பினர் சம்பங்கி, கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தாசில்தார் மோகன் நன்றி கூறினார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
    • பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வை யிட்டார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், திருவட்டார் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சுருள கோடு ஊராட்சிக்குட்பட்ட புனித அந்தோணியார் உயர்நி லைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார்.

    முகாமில் 45 பயனாளி களுக்கு ரூ.9.92 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இந்த முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன்பெறு வதே ஆகும். குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதர வற்றோர் விதவை சான்றி தழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்.

    மேலும் குடும்ப அட்டை யின் வகை மாற்றுவதற்கான மனுக்கள் அதிகமாக வரு கிறது. மேலும் வீட்டுமனை பட்டா மனுக்களும் அதிகள வில் வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். வீடு தொடர்பான மனுக்க ளுக்கு மாநகராட்சி, நக ராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் தகுதி யான பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

    மேலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிர் திட்டம், முன்னோடி வங்கி ஆகிய துறைகள் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அம்முகாமில் 2200-கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அவர் களில் 250 நபர்களுக்கு உடனடி ஆணைகளும், 400-க்கும் மேற்பட்டவர் களுக்கு அடுத்த கட்டமாக தேர்வும் நடத்தப்படவுள்ளது. வருடத்திற்கு இரு முறை பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும், மாதந்தோறும் சிறு அளவி லான முகாம்களும் நடத்தப்படுவதோடு அரசு பணிக்க ளுக்கான பயிற்சி வகுப்பு களும் நடத்தப்பட்டு வரு கிறது.

    புதுமைப்பெண் திட்டம் தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அரசு பள்ளிகளில் பயின்ற மாணவி களுக்கு வங்கி மூ லமாக ரூ.1000 வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப் பித்து விடுப்பட்ட நபர்களுக்கு தகுதி அடிப்ப டையில் உதவித்தொகை வழங்குவ தற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. முதலில் விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு, விண்ணப்பங்களை பெற முகாம்கள் நடத்தப்பட்டது. பின்னர் தகுதியான பய னாளிகளை வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு கண்டறியப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப் பான இடங்களில் தங்க வேண்டும், இடி மின்னல் ஏற்படும்போது பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும், பொது இடங்களில் செல்லும் போது இடி மின்னல் தாக்கினால் மரத்தின் கீழோ, கட்டங்களின் கீழோ நிற்க வேண்டாம். மழைக்கா லத்தில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மின்கம்பங்கள் அருகில் செல்லமாலும் அதன் அருகில் தேங்கியிருக்கும் தண்ணீர் அருகில் செல்ல மால் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் வீடுகளில் உபயோகிக்கும் மின்சாரம் மற்றும் பழுது அடைந்த மின்சாதனங்களை தொடமால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    விவாசாயிகள் உங்கள் பகுதியில் உள்ள காலநிலை களை அறிந்து அதற்கேற்ற பருவகாலங்களில் பயிரிட வேண்டிய பயிர்களை பயி ரிட்டு அதிக மகசூல் பெற்று தங்கள் வாழ்வதாரத்தை உயர்த்தி கொள்ள வேண் டும். மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் சுருள கோடு-உள்ளிமலை-மேதோப்பு-பூவஞ்சந்தி சாலைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக, சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி வளாகத் தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கபட்டிருந்த பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வை யிட்டார்.

    திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ஜாண், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குழந்தைசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலாராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் கனக ராஜ், மாவட்ட ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, துணை இயக்குநர்கள் வாணி (வேளாண்மை), ஷீலா ஜாண் (தோட்டக்கலை), திருவட்டார் வட்டாட்சியர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா (சுருளகோடு), லில்லிபாய் (பாலமோர்), ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பிலோமினாள் மற்றும் துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண் டார்கள்

    • அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிஅருகே அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் வழங்கினார்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது,

    அனைத்துத் துறை அலுவலர்களும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.

    பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் ஆரம்ப கல்வி, உயர்கல்வி, மேல்நிலை கல்வி பயில்வதில் உறுதியாக இருக்க வேண்டும். 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் ஆரம்ப கல்வி முறையினை கற்பதற்கும், சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதற்காகவும் அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டும்.

    குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறுவயதில் கர்ப்பம் அடைதல், குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் ஆகியவற்றை தவிர்க்க குறிப்பிட்டுள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர், பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் உறுதி கொள்ள வேண்டும்.

    பல்வேறு தொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், சுயதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வங்கிகளின் மூலம் பெற்றவர்கள் அதனை முறையாக குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    மழைக்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. முடிந்தவரை பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.

    • தமிழ்நாடு பால் விற்பனைத்துறை ஊழியர் நலச்சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
    • மாற்றுத்திறனாளிகள் 283 பேருக்கு நலத்திட்ட உதவிகளாக தையல் இயந்திரம், வீல் சேர், புதிய ஆடைகள், இனிப்புகள் வழங்கினார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையில் தமிழ்நாடு பால் விற்பனைத்துறை ஊழியர் நலச்சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்க மாநில பொதுச் செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு பால் முகவர் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, ஆவாரம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 283 பேருக்கு நலத்திட்ட உதவிகளாக தையல் இயந்திரம், வீல் சேர், புதிய ஆடைகள், இனிப்புகள் வழங்கினார். விழாவில் சங்க மாநில பொருளாளர் நாசர், மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் பிறந்தநாள் விழா.
    • குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும் அந்த வார்டு ஏழை பெண்களுக்கு புடவைகளை பரிசாக வழங்கி உதவினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி எப்சிராஜ், வார்டு தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது.
    • கோரிக்கை மற்றும் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் 96 பயனாளிகளுக்கு ரூ.12.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், பாலையூர், காஞ்சிவாய், நல்லாவூர், ஸ்ரீகண்டபுரம் ஆகிய கிராம ங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமை யொட்டி செப்டம்பர் 5-ஆம் தேதியில் இருந்து அலுவலர்கள் பாலையூர் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் இருந்து பெற்ற 101 கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ததில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    அதன்படி, வருவாய் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா தலா ரூ.20,000 மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 34 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகன் திருமணம்) 11 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகள் திருமணம்) 5 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பிலும், இயற்கை மரண உதவி த்தொகை 21 பயனாளிகளுக்கு தலா ரூ.21,500 உள்பட மொத்தம் 96 நபர்களுக்கு ரூ.12,89,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை 7092255255 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம். அந்த கோரிக்கை மற்றும் புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, சமூக பாதுகாப்பு த் திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, கோட்டாட்சியர் யுரேகா, ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், வட்டாட்சியர் சித்ரா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கண்காட்சியினை தென்காசி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • பயனாளி ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இடுபொருட்கள், காய்கறி நாற்றுகள் வழங்கப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யில் நேற்று நடைபெற்றது.

    மேலும் குருவிகுளம் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறையினர், தென்காசி மற்றும் கீழப்பாவூர் வட்டார தோட்ட க்கலைத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை தென்காசி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குருவிகுளம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிக்கு நலத்திட்ட உதவியாக ரூ.2 ஆயிரம் மதிப்பில் மின்கல மருந்து தெளிப்பான் முழு மானியத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    தென்காசி வட்டார தோட்டக்கலைத் துறை யினர் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னையில் ஊடு பயிராக காய்கறி சாகுபடி செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியத்தில் இடு பொருட்கள் வழங்கப் பட்டன.

    தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்காக பயனாளி ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இடுபொ ருட்கள் மற்றும் காய்கறி நாற்றுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 277 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் வேளா ண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ஊமைத்துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) கனகம்மாள், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை சுப்பையா, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனை த்து வட்டார தோட்ட க்கலை உதவி இயக்கு நர்கள், அனைத்து துறை அலுவ லர்கள், அனைத்து விவ சாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைவருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1112 பயனாளிக ளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் பயனுள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகி றார். அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் மாதந்தோறும் கடைகோடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாமில் 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 125 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசில் எல்லோருக்கும் எல்லாமும் என்ற தத்துவத் தின் அடிப்படையில் அனை வருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்களை தேடி அரசு என்ற உன்னத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்க ளையும் ஒருங்கி ணைத்து நடைபெற்று கொண்டி ருக்கும் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்து உள்ளனர்.

    இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு அத்து றையைச் சார்ந்த அலுவலர் களை முறையாக அணுகி அதன் மூலம் பயன்பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், ஊராட்சி தலை வர் புவனேஸ்வரி காளி தாஸ், திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராய ணன், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய துணை அமைப்பா ளர் கண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×