search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10.78 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
    X

    விழாவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

    ரூ.10.78 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    • கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சி பாதையில் செயல்படுத்த கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
    • 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் , எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம் , ராமலிங்கம் , எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் 2315 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகளையும், கூட்டுறவு வார விழா பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செயல்படுத்திட கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வம் , மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி , வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா , பூர்ணிமா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பழனீஸ்வரி , இணைப் பதிவாளர் பெரியசாமி , துணைப் பதிவாளர் அப்துல் மஜீத் மற்றும் துணைப் பதிவா ளர்கள், பொது மேலாளர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×