search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மாதவபுரத்தில் 54 நலிவுற்ற ஏழை முதியோருக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    கன்னியாகுமரி மாதவபுரத்தில் 54 நலிவுற்ற ஏழை முதியோருக்கு நலத்திட்ட உதவிகள்

    • மாதவராயர் பாலர்பள்ளி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது
    • 51 நலிவுற்ற பெண் முதியோர்களுக்கும் 3 நலிவுற்ற ஆண் முதியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தில் அமைந்து உள்ள மாதவராயர் பாலர் பள்ளி மன்றம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி 54 நலிவுற்ற ஏழை முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மன்ற செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இதில் 51 நலிவுற்ற பெண் முதியோர்களுக்கும் 3 நலிவுற்ற ஆண் முதியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் நலிவுற்ற ஏழை முதியோர்களுக்கு இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாதவராயர் பாலர் பள்ளி குழந்தைகள், மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×