search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்தான விழிப்புணர்வு"

    • நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அரிசி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • சிறப்பு விருந்தினராக கே.ஆர்.பி. இளங்கோ கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் பொருளாளருமாகிய சினேகா பாரதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இதில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனரும், ஆலமர வட்டார தலைவருமாகிய கே.ஆர்.பி. இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட பொருட்களை வழங்கி கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் ஜேக்கப் சுமன் வாழ்த்தி பேசினார். முடிவில் ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளர் சுனில்குமார் நன்றி கூறினார்.

    ×