search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திரம்"

    • அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.

    முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்

    மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.

    ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    • நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இடையில் புருவ மத்தியில் அக்னி (நெற்றிக்கண்) உள்ளது.
    • 9 சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அடுத்த வல்லத்தில் யோக நரசிம்மப் பெருமாள் கோவில் உள்ளது.

    யோக நரசிம்மர் இங்கு சுயம்பு மூர்த்தி ஆவார். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இடையில் புருவ மத்தியில் அக்னி(நெற்றிக்கண்) உள்ளது.

    நரசிம்மர் மனித உடலும் சிங்க முகமும் கொண்டவர் என்பதால் இக்கோவிலில் யோக நரசிம்மர் கல், சுதை இரண்டும் கலந்து யோக நரசிம்மராக பக்தர்களுக்கு இங்கு காட்சி தருகிறார்.

    இவருக்கு தைலக்காப்பு மட்டுமே சாற்றுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் இது போன்ற அமைப்புகள் உடைய யோக நரசிம்மர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதி மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று காலையில் ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஒன்பது சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

    இந்த நிலையில் இன்று நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 6.30மணிக்கு உற்வர் லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் விஷேட திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு யோக நரசிம்மப் பெருமாளை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலையில் யோக நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனை நடைபெறும்.

    இந்த விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் சுவாதி கைங்கர்ய குழுவினர் செய்திருந்தனர்.

    • ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள்.
    • 27 நட்சத்திரக்காரர்களின் இயல்பான குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

    அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை 'ஜென்ம நட்சத்திரம்' என்று கூறுவர்.

    ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணமுண்டு. அந்த அடிப்படையில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இயல்பாக அமைந்த குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. இவை பொதுவான பலன்கள் தான்.

    அசுவதி:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், செய்யும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பர். மனோதிடம் கொண்டவர்கள். உண்மைக்குப் புறம்பாக பேசமாட்டார்கள். முன்கோபத்தால் உறவினர்களைப் பகைத்துக்கொள்ளும் சூழல் ஏற்படும். லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்கள். உதவி செய்வதன் மூலம் பதவிகளைப் பெறுவர்.

    பரணி:- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், ஆரம்பித்த காரியத்தை முடிப்பதில் அசகாய சூரர்கள். குடும்பப் பாசம் உள்ளவர்கள். குடும்ப உறுப்பினர்களை அல்லது விபரம் அறிந்தவர்களைக் கலந்து ஆலோசித்தே எந்த முடிவும் எடுப்பர். பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்கள். கலைத்துறையில் ஈடுபாடு இருக்கும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பர்.

    கார்த்திகை:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பெருமைக்குரியவர்கள், பிறரால் மதிக்கப்படுபவர்கள். கம்பீரமான தோற்றத்தோடு காட்சியளிப்பர். கடமையைச் செவ்வனே செய்வார்கள். வழக்குகளில் வாதாடி வெற்றி பெறும் தன்மை உண்டு. இனிய பேச்சால் மற்றவர்களை வசமாக்கும் தன்மை கொண்டவர்கள்.

    ரோகிணி:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இரக்க குணம் கொண்டவர்கள். ஸ்திரமான மனது இவர்களுக்கு இருப்பது அரிது. வளர்பிறையும், தேய்பிறையும் வருவது போல இன்பமும், துன்பமும் கலந்த வாழ்வைப் பெறுவர். சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். அடிமைத் தொழிலைக் காட்டிலும் சுய தொழிலை விரும்புவார்கள்.

    மிருகசீர்ஷம்:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக விளங்குவர். இவர்கள் மனதில் உள்ளதை பிறர் அறிந்து கொள்ள இயலாது. சுய ரகசியங்களைக் காப்பாற்றுபவர்கள். பேச்சில் வல்லமை பெற்றவர்கள் என்பதால், பிறருக்கு பிடிகொடுக்க மாட்டார்கள்.

    திருவாதிரை:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் சகல துறைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வார்கள். பகை பாராட்டும் தன்மை இவர்களிடம் காணப்படும். மற்றவர்கள் மத்தியில் தான், யார் என்பதை நிரூபிக்கப் பாடுபடுவர். மற்றவர்களிடம் யோசனை கேட்டாலும் தான் எடுத்த முடிவையே மேற்கொள்வர்.

    புனர்பூசம்:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். அன்பாகப் பேசிப் பழகுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் உண்டு. நட்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.

    பூசம்:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். தாய்ப்பாசம் மிக்கவர்கள். பெற்றோர்களின் ஆதரவால் பெரிய நிலையை அடைவர். செல்வந்தனாகத் திகழும் வாய்ப்பு உண்டு. மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். பொதுநலத்தில் ஈடுபட்டு நியாயத்திற்காக பாடுபடும் தன்மை கொண்டவர்கள்.

    ஆயில்யம்:- இது புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் எதிரிகளையும் தன்வசமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியமிக்கவர்கள். மனதில் உள்ள குறைகளை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள். இவர்களைக் கூட்டாளிகளாக வைத்துக்கொள்பவர்கள் விரைவில் முன்னேற்றம் காண்பர்.

    மகம்:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். மிகுந்த சாமர்த்தியசாலிகள். கோபம் வந்தால் எதிரிகளை இரண்டில் ஒன்று ஆக்கிவிடுவர். அதிக நண்பர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுவர். எதைச் சொன்னாலும் விவாதம் செய்த பிறகே ஏற்றுக்கொள்வர்.

    பூரம்:- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பழகுவதில் கண்ணியமிக்கவர்கள். பலவிதமான தொழில்களைச் செய்து வெற்றி காண்பர். கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள். அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முன்னின்று காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர்கள்.

    உத்ரம்:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி மிக்கவர்கள். யதார்த்தவாதி. தேசப்பற்று மிக்கவர்களோடு பழக்கம் அதிகம் இருக்கும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பர். எல்லோரும் விரும்பும் விதத்தில் நடந்துகொள்வர். பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.

    ஹஸ்தம்:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். மற்றவர்கள் போற்றும்படியான வாழ்க்கையை நடத்துபவர்கள். வீர தீரச் செயல்களில் விருப்பம் கொண்டவர்கள். சிறுவயது முதலே தொழில் செய்து சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள். குருபக்தியும், விசுவாசமும் இவர்களோடு இணைந்தே இருக்கும்.

    சித்திரை:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாகும். சரீரபலமும், திடமான பேச்சாற்றலும் கொண்டவர்கள். பிறருக்காக பரிந்து பேசி உரையாடி காரியங்களைச் சாதிப்பீர்கள். சிக்கனமாக வாழ்க்கை நடத்துவதில் வல்லவர்கள். கவுரவத்தைக் காப்பாற்றத் துடிப்பீர்கள்.

    சுவாதி:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். ஜனவசியம் அதிகம் பெற்றவர்கள். எதையும் ரசித்தும் பார்ப்பார்கள், ருசித்தும் பார்ப்பார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள். 64 கலைகளில் அதிகமான கலைகளை அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள். தனது விருப்பப்படியே எதையும் செய்வர்.

    விசாகம்:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். உறவினர்களையும், நண்பர்களையும் அதிகம் நேசிக்கக் கூடியவர்கள். வேத சாஸ்திரங்களை கற்று வைத்திருப்பர். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். பக்திமான், கூர்மையான புத்தியுடையவர்கள். மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசமாக காட்டிக் கொள்ளப் பிரியப்படுவர்.

    அனுஷம்:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். தோஷமில்லாத நட்சத்திரம் என்று சொல்வது வழக்கம். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் தன்மை கொண்டவர்கள். நல்ல குணமும், நல்ல மனமும், ஒரு காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு இப்படிச் செய்திருக்கலாமே என்று சிந்திப்பவர்களும் இவர்கள்தான்.

    கேட்டை:- இது புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். கடவுள் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். தன்னிச்சையாக செயல்படும்பொழுது தந்திரமான குணத்தைக் கையாள்பவர்கள். கள்ளம் கபடமில்லாத மனத்தைப் பெற்றவர்கள். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள்.

    மூலம்:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். உயர்ந்த சிந்தனை, கூர்மையான அறிவு படைத்தவர்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால் முன்னேற்றத்தை விரைவில் காண இயலும்.

    பூராடம் :- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணமும் உண்டு. பெருந்தன்மையான குணமும் உண்டு. தாய்ப்பாசம் மிக்கவர்கள். பொதுநலத்தில் அக்கறை காட்டி புகழ் பெறுவார்கள். தொழில் நுணுக்கங்களைக் கற்று வைத்திருப்பர். தர்ம சிந்தனை அதிகம் உள்ளவர்கள்.

    உத்ராடம்:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இனிமையாகப் பேசுபவர்கள் எல்லோரிடமும் பிரியமாக நடந்து கொள்வர். பிறர்பொருள் மேல் விருப்பம் கொள்ளமாட்டார்கள். செய்நன்றி மறக்காத குணம் இவர்களுக்கு உண்டு. மூத்த சகோதரர்களிடம் பாசம் காட்டுவார்கள்.

    திருவோணம்:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். முன்பின் தெரியாதவர்களிடம் கூட மனம்விட்டுப் பேசுவர். தான தர்மம் செய்வதில் பிரியம் கொண்டவர்கள். முயற்சியில் சளைக்காமல், முன்னேற்றம் காண்பதிலேயே கவனமாக இருப்பர்.

    அவிட்டம்:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். எதிரிகளைக் கண்டு அஞ்சாதவர்கள். தான் சொல்லிய கருத்தை மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்று விரும்புபவர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற அற்புதக் குணம் கொண்டவர்கள். சொத்து சேர்ப்பதில் வல்லவர்களாக விளங்குவர்.

    சதயம்:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். ஆன்ம பலமும், தேகபலமும் மிக்கவர்கள். பகைவர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தலைமைப் பதவிகள் இவர்களைத் தேடி தானாகவே வரும். திருப்பணிகள் செய்வதிலும் விருப்பம் கொண்டவர்கள். திக்கெட்டும் புகழ்பரப்பும் விதம் ஏதேனும் சாதனைகளைச் செய்வர்.

    பூரட்டாதி:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். நியாயம், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். பொருட்கள் தேடுவதில் சாதுரியமாக செயல்படுவர். நண்பர்களைப் பூரணமாக நம்பிச் செயல்படமாட்டீர்கள். உறவினர் பகை எப்போதும் இவர்களுக்கு இருக்கும். கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தி காரியங்களை தொடங்கும் குணம் உண்டு.

    உத்திரட்டாதி:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்யும் குணம் பெற்றவர்கள். பிறருக்கு கொடுத்த வாக்கைக் எப்படியும் காப்பாற்றிவிடுவீர்கள். உறவினர்களை ஆதரிக்கும் குணம் உண்டு. சந்தர்ப்பத்திற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொள்வார்கள். தர்ம காரியங்களை செய்வதில் நாட்டம் கொள்வர்.

    ரேவதி:- இது புதன் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பிறரிடம் ஆலோசனை கேட்டு நடக்க விரும்புவர். பேச்சாற்றல் மிக்கவர்கள். பிறரை அணுகும் முறையில் திறமைசாலிகளாக விளங்குவர். உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று எடுத்துரைப்பர்.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • காயத்ரி மந்திரத்தை 48 நாட்கள் தினமும் சொல்லி வந்தால் நன்மையான பலன்கள் கிடைக்கும்.
    • இங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய காயத்ரி மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இறைவனை துதிக்கும் மந்திரங்களிலேயே, காயத்ரி மந்திரத்திற்கு முதலிடம் உண்டு. எந்த பிரச்சினையையும் தீர்க்கும் மந்திரமாக காயத்ரி மந்திரம் போற்றப்படுகிறது. அனைத்து தெய்வங்களுக்கும், தெய்வீக சக்தி கொண்ட பொருட்களுக்கும், கிரகங்களுக்கும் என்று பலவற்றுக்கும் காயத்ரி மந்திரங்கள் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரம் உள்ளது. ஒருவர் தன்னுடைய ஜாதகத்திற்குரிய நட்சத்திரத்தின் காயத்ரி மந்திரத்தை, 1 மண்டல (48 நாட்கள்) காலம், தினமும் அதிகாலையில் சொல்லி வந்தால், நன்மையான பலன்கள் கிடைக்கும். தினமும் ஒன்பது முறையாவது, உங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றம் வந்து சேரும்.

    இங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய காயத்ரி மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கானதை தினமும் பாராயணம் செய்து, வாழ்வில் சகலவிதமான வளங்களையும் பெறுங்கள்.

    * அஸ்வினி

    ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே

    சுதாகராயை தீமஹி

    தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

    * பரணி

    ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே

    தண்டதராயை தீமஹி

    தன்னோ பரணி ப்ரசோதயாத்

    * கிருத்திகை

    ஓம் வன்னிதேஹாயை வித்மஹே

    மஹாதபாயை தீமஹி

    தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

    * ரோஹிணி

    ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே

    விச்வரூபாயை தீமஹி

    தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

    * மிருகசீரிடம்

    ஓம் சசிசேகராய வித்மஹே

    மஹாராஜாய தீமஹி

    தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

    * திருவாதிரை

    ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே

    பசும்தநாய தீமஹி

    தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

    * புனர்பூசம்

    ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே

    அதிதிபுத்ராய த தீமஹி

    தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

    * பூசம்

    ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே

    மஹா திஷ்யாய தீமஹி

    தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

    * ஆயில்யம்

    ஓம் ஸர்பராஜாய வித்மஹே

    மஹா ரோசனாய தீமஹி

    தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

    * மகம்

    ஓம் மஹா அனகாய வித்மஹே

    பித்ரியா தேவாய தீமஹி

    தன்னோ மகஃப்ரசோதயாத்

    * பூரம்

    ஓம் அரியம்நாய வித்மஹே

    பசுதேஹாய தீமஹி

    தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

    * உத்திரம்

    ஓம் மஹாபகாயை வித்மஹே

    மஹாச்ரேஷ்டாயை தீமஹி

    தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

    * அஸ்தம்

    ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே

    ப்ரக்ருப்ணீதாயை தீமஹி

    தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

    * சித்திரை

    ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே

    ப்ரஜாரூபாயை தீமஹி

    தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

    * சுவாதி

    ஓம் காமசாராயை வித்மஹே

    மகாநிஷ்டாயை தீமஹி

    தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

    * விசாகம்

    ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே

    மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி

    தன்னோ விசாகா ப்ரசோதயாத்

    * அனுஷம்

    ஓம் மித்ரதேயாயை வித்மஹே

    மஹா மித்ராய தீமஹி

    தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

    * கேட்டை

    ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே

    மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி

    தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

    * மூலம்

    ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே

    மஹப்ராஜையை தீமஹி

    தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

    * பூராடம்

    ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே

    மஹாபிஜிதாயை தீமஹி

    தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

    * உத்திராடம்

    ஓம் விஸ்வேதேவாய வித்மஹே

    மஹா ஷாடாய தீமஹி

    தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

    * திருவோணம்

    ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே

    புண்யஸ்லோகாய தீமஹி

    தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

    * அவிட்டம்

    ஓம் அக்ர நாதாய வித்மஹே

    வசூபரீதாய தீமஹி

    தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

    * சதயம்

    ஓம் பேஷஜயா வித்மஹே

    வருண தேஹா தீமஹி

    தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

    * பூரட்டாதி

    ஓம் தேஜஸ்கராய வித்மஹே

    அஜஏகபாதாய தீமஹி

    தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    * உத்திரட்டாதி

    ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே

    ப்ரதிஷ்டாபநாய தீமஹி

    தன்னோ உத்ரப் ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    * ரேவதி

    ஓம் விச்வரூபாய வித்மஹே

    பூஷ்ண தேஹாய தீமஹி

    தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

    • நம்முடைய நட்சத்திரத்திற்கு உரியதாக தேர்ந்தெடுத்து வழிபடும் போது, கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
    • உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு பலன் பெறுங்கள்.

    ஒவ்வொருவரும் ஆலயங்களுக்குச் செல்லும் போதும், வீட்டில் பூஜை அறையில் இறைவனை வழிபடும் போதும், மலர்களை வைத்து வழிபடுவார்கள். அந்த மலர்களை நம்முடைய நட்சத்திரத்திற்கு உரியதாக தேர்ந்தெடுத்து வழிபடும் போது, கூடுதல் பலன்கள் கிடைக்கும். இங்கே 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மலர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு பலன் பெறுங்கள்.

    அஸ்வினி - சாமந்தி

    பரணி - முல்லை

    கார்த்திகை - செவ்வரளி

    ரோகிணி - பாரிஜாதம்

    மிருகசீரிடம் - ஜாதிமல்லி

    திருவாதிரை - வில்வப் பூ

    புனர்பூசம் - மரிக்கொழுந்து

    பூசம் - பன்னீர் மலர்

    ஆயில்யம் - செவ்வரளி

    மகம் - மல்லிகை

    பூரம் - தாமரை

    உத்திரம் - கதம்பம்

    அஸ்தம் - வெண் தாமரை

    சித்திரை - மந்தாரை

    சுவாதி - மஞ்சள் அரளி

    விசாகம் - இருவாட்சி

    அனுஷம் - செம்முல்லை

    கேட்டை - பன்னீர் ரோஜா

    மூலம் - வெண்சங்கு மலர்

    பூராடம் - விருட்சி

    உத்திராடம் - சம்பங்கி

    திருவோணம் - செந்நிற ரோஜா

    அவிட்டம் - செண்பகம்

    சதயம் - நீலோற்பலம்

    பூரட்டாதி - வெள்ளரளி

    உத்திரட்டாதி - நந்தியாவட்டம்

    ரேவதி - செம்பருத்தி

    • பள்ளியில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் ஆய்வு.
    • பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    பின்பு, சி.2002, இ.3 என பெயரிடப்பட்ட பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    பின்னர், பள்ளி மாணவி நீலவேணி தான் வரைந்த கலெக்டர் அருண் தம்புராஜின் உருவப்படத்தை அவரிடம் வழங்கினார்.

    ஆய்வின்போது நாகை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், வட்டாரக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், பள்ளி துணை ஆய்வர் ராமநாதன், தலைமையாசிரியர் ஸ்டெல்லா, ஜேனட் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது.
    • இந்த கோவில் திருவண்ணாமலை வந்தவாசி தாலுகா இஞ்சிமேடு கிராமத்தில் உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன.

    பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.

    பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன.

    பெருந்தேவி தாயார் சிறப்பு

    பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.

    • ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.
    • இன்று மாலை மாலை 6.04 மணிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.

    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

    சச்சரவின்றி சாகா நெறியில்

    இச் சகம் வாழ இன்னருள் தா தா

    நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3-ம் நாள் 17.1.2023 செவ்வாய் கிழமை இன்று மாலை 6.04 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களில் நீதிமானாக போற்றப்படும் சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில்(காலபுருஷ10ம் ராசி) அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து மற்றொரு சொந்த வீடான கும்ப ராசி (காலபுருஷ11ம் ராசி) அவிட்டம் 3ம் பாதம் சென்று ஆட்சி பலம் பெறப்போகிறார்.

    சனி பகவான் தனது 3ம் பார்வையால் காலபுருஷ முதல் ராசியான மேஷத்தில் உள்ள ராகுவையும் ஏழாம் பார்வையால் காலபுருஷ ஐந்தாம் ராசியான சிம்மத்தையும் பத்தாம் பார்வையால் காலபுருஷ அஷ்டம ஸ்தானமான விருச்சிகத்தையும் பார்வையிடு கிறார்.

    சனிப் பெயர்ச்சி அனைவருக்கும் கெடுபலன் தராது. அவரவரின் சுய ஜாதகத்தில் நடப்பில் உள்ள தசை புத்திக்கு ஏற்ற சுப, அசுப விளைவுகளே நடக்கும். எனவே பரிகார ராசியினர் சுய ஜாதகரீதியான நடப்பு திசை மற்றும் புத்தி அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் இறைவழிபாடுகளை கடைபிடிக்க நல்ல விதமான முன்னேற்றங்கள் உண்டாகும்.

    பரிகார ராசிகள்:

    கடகம் - அஷ்டமச் சனி

    சிம்மம் - கண்டகச் சனி

    விருச்சிகம் - அர்தாஷ்டமச் சனி

    மகரம் - பாதச் சனி

    கும்பம் - ஜென்மச் சனி

    மீனம் - ஏழரைச் சனி ஆரம்பம்

    கடக ராசியினர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் சென்று வழிபடவும்.பிற 5 பாரிகார ராசியினர் குச்சனூர் அல்லது திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபட வேண்டும்.

    மேஷம் - லாபச் சனி

    ரிஷபம் - தொழில் சனி

    மிதுனம் - பாக்கியச் சனி

    கன்னி - ரோக ஸ்தான சனி

    துலாம் - பஞ்சம சனி

    தனுசு - சகாய ஸ்தான சனி

    இந்த ராசியினர் சனிக்கிழமை சிவன் கோவிவில் உள்ள கால பைரவரை வழிபட நன்மைகள் இரட்டிப்பாகும்.

    அதே போல் சனிப் பெயர்ச்சி என்றவுடன் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.ஏப்ரல் 22, 2023ல் ஏற்படப் போகும் குருப்பெயர்ச்சியால் உலகிற்கு பல்வேறு சுப பலன்களும் உண்டாகும். சில மாதங்கள் ராகு குருவை கிரகணப் படுத்தினாலும் மீதமுள்ள மாதங்களில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் உண்டு.

    மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டேகால் வருடத்தில் சுமார் ஒன்பது மாத காலம் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் குருவின் உதவியுடன் எளிமையாக சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது ஆறுதலான விசயம்.

    அனைவரும் தமது கடமையையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வரை நமது செயல்பாடுகளால் பிறரை காயப்படுத்தாமல் வாழும் வரை துன்பம் யாரையும் நெருங்காது. அத்துடன் வாக்கிய பஞ்சாங்கம் சரியா? திருக்கணித பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதமும் அவசியமற்றது. அவரவரின் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை ஒத்து வருகிறதோ அதை பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது.

    நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும் போது நமக்குள் இருக்கும் உயிரே இறைவன் என்பதை உறுதியாக உணரும் போது, ஆத்மா புனிதமடையும்.

    ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. சனி பகவான் காற்று ராசியான கும்பத்தில் சஞ்சாரம் செய்வதால் பரிகாரங்கள் பாரயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும்.

    ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்

    கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

    ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி

    இந்த சனிப்பெயர்ச்சி அனைவரின் வாழ்விலும் தித்திப்பான மாற்றமும், மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிறைந்த செல்வமும், நோயற்ற வாழ்வும் நிரந்தரமாக வழங்க பிரபஞ்ச தாயின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • ஈரோடு மாநகரம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு களைகட்டி உள்ளது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கு வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ஈரோடு:

    ஈரோட்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி ஈரோட்டில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாநகரம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு களைகட்டி உள்ளது.

    நாளை (25-ந்தேதி) இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.

    கிறிஸ்தவர் வீடுகளில் வண்ண அலங்கார தோரண மின் விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கார சீரியல் விளக்குகள் ஜொலித்து வருகின்றன.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கு வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ஈரோட்டில் பல்வேறு ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை பார்க்க பொதுமக்கள் கூட்டம் திரண்டு வருகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இன்று நள்ளிரவு ஈரோடு புனித அமல அன்னை, சி.எஸ்.ஐ. பிரப் நினைவாலயம், ரெயில்வே காலனியில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    ஈரோடு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தேவாலயம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம், கிறிஸ்துமஸ் குடில், கலை நிகழ்ச்சி ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அனைத்து தேவாலயங்களும் மின் விளக்கு களால் அலங் கரிக்கப்பட்டு ஜொலித்தன. ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் நினைவாலயம் மற்றும் அமல அன்னை பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரார்த் தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒரு வருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

    • ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்க்கை இருந்தால் முதல் தாரத்துடன் பிரிவினையை ஏற்படுத்துகிறது.
    • பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் முதல் தாரத்துடன் பிரிவினையை ஏற்படுத்துகிறது.

    ஒரு திருமணம் கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக்காக பலர் ஏங்கிக் கொண்டு இருக்கும் காலத்தில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்து விடுகிறது.

    ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் எனும் குடும்ப ஸ்தானத்தின் மூலம் ஏழாமிடம் ஆணின் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண்கள் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் அறியலாம்.

    ஆண்கள் ஜாதகத்தில் சுக்ரன் கேது சேர்க்கை, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் முதல் தாரத்துடன் தேவையற்ற வம்பு வழக்கு அல்லது பிரிவினையை ஏற்படுத்துகிறது.

    திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ரஜ்ஜு, யோனி பொருத்தம் இல்லாத ஜாதகம் தம்பதியினரை பிரிக்கும்.11-ம் பாவகத்திற்கு திரிகோணதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும் போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படும்.

    11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்தல், 1, 11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறும்போது இரு தாரம் ஏற்படும். 7-ம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தை கூட தரும். ஜென்ம லக்ன அடிப்படையில் இருதார அமைப்புகள் ரி‌ஷபம், மிதுனம், கடகம், துலாம், மீனம் ஆகிய 5 லக்னத்திற்கு இயல்பாகவே இருப்பதால் இரு தார யோகம் உண்டு.

    ரி‌ஷபம் : கால புரு‌ஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்ரனின் ஆட்சி வீடு ரி‌ஷபத்தில் உச்சம் பெறும். ராகு ஏழாம் இடமான விருச்சிகத்தில் நீசம் பெறும். விருச்சிகம் கால புரு‌ஷ ஸ்தானத்தில் எட்டாம் இடம். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்க முடியாத மறைவு வாழ்க்கை நிச்சயம் உண்டு.

    மிதுனம் : இந்த லக்னம் கால புரு‌ஷ ஸ்தானத்தில் மூன்றாம் இடம் என்பதால் அடிக்கடி வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். லக்னாதிபதி புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். புதனும், சுக்ரனும் நட்பு கிரகம். மேலும் சுக்ரன் மிதுனத்திற்கு 5, 12-ம் அதிபதி என்பதால் தக்க நேரத்தில் துணையாக இருந்து இரண்டு தார யோகத்தை செய்து காட்டுவார். இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் புதன், சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் இரண்டு திருமணம் உண்டு.

    கடகம் : கடக லக்னத்தினருக்கு சுக்ரன் 11-ம் அதிபதி. சுக்ரன் ஆட்சி, உச்சம் சுயசாரம் பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.

    துலாம் : கால புரு‌ஷ ஸ்தானம் ஏழாம் இடம். இதன் அதிபதி சுக்ரன். சுக்ரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் சனி தசை சுக்ர புத்தி அல்லது சுக்ர தசை, சனி புத்தியால் இரண்டாம் திருமணம் நடக்கிறது.

    மீனம் : இயல்பாகவே இரட்டை தன்மை நிறைந்த லக்னம். மீனத்தில் சுக்ரன் உச்சம் பெறும்போதுஏழாம் வீடான கன்னியில் சுக்ரன் நீசம்பெறும் என்பதால் அழகான பெண் அல்லது வெகுளியான பெண்களின் அன்புக்கு அடிமையாகி தனக்காக ஒரு வாழ்க்கையும் ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.

    பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.

    • இன்று மாலை 5:32 மணி முதல் 6:18 வரை சந்திர கிரகணம் நடைபெறவிருக்கிறது.
    • ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

    அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண நேரம் முடிந்தவுடன் தலைக்கு குளித்துவிட்டு வீட்டை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்கு உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சந்திர பகவானுக்கும் உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். நவகிரகங்களில் உள்ள ராகு சந்திரன் இருவருக்கும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெள்ளை நிற வஸ்திரம், நெல், வெற்றிலை பாக்கு வைத்து யாருக்கேனும் தானம் கொடுக்க வேண்டும். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு கூட இந்த தானத்தை செய்யலாம். இதை சந்திர ப்ரீத்தி பரிகாரம் என்று சொல்லுவார்கள்.

    கிரகண நேரத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்: மேஷ ராசியில் உள்ள பெண்கள் கிரகண நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். அதே சமயம் கிரகண நேரத்தின் போது உங்களுடைய மனதிற்குள் ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை ஜெபமாக சொல்லுங்கள். சிம்ம ராசிக்காரர்கள், தனுசு ராசிக்காரர்கள், மீன ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், கவனமாக இருக்க வேண்டும்.

    வெளியில் செல்ல கூடாத ராசி: குறிப்பாக மகர ராசிக்காரர்கள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. கூடுமானவரை வெளியிடங்களுக்கு பிரயாணம் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படியே உங்களுக்கு வெளியில் பிரயாணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ராமஜபம் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் நாராயணனின் பேரை உச்சரிக்கலாம். அல்லது 'ஓம் நமசிவாய' மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

    கிரகண நேரத்தின்போது கூடுமானவரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாதீங்க. வெளியிடங்களில் பெரியவர்கள் இருப்பதை கூட தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் எந்த பிரச்சனையிலும் போய் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அனைவருமே அவரவர் வீட்டில் இருந்தபடி அவரவருக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பதன் மூலம் வரக்கூடிய பிரச்சனைகளின் பாதிப்பு குறையும்.

    • கிரகண நேரத்தில் நமக்கு உகந்த தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம்.
    • கிரகணம் முடிந்த பின்னால் குளித்து முடித்து உணவு அருந்துவது உத்தமம்.

    25.10.2022 அன்று மதியம் 2.28 மணி முதல் கிரகண அமைப்பு உருவாகத் தொடங்கினாலும், உச்ச பரிணாமமாகத் தெரிவது மாலை 5 மணிக்கு மேல்தான்.

    சூரிய கிரகண ஆரம்ப காலம் மாலை 5.14 மணி.

    சூரிய கிரகண மத்திய காலம் மாலை 5.42 மணி.

    சூரிண கிரகண முடிவு காலம் மாலை 6.10 மணி.

    கிரகணம் என்பது வானில் தோன்றுகின்ற ஒரு அதிசய, அற்புத நிகழ்வு. சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும் பொழுது ஏற்படுகின்ற நிகழ்வுதான் 'கிரகணம்' என்று சொல்வார்கள். ஆற்றல் நிறைந்த கிரகண காலத்தில் என்னென்ன செய்யலாம். என்னென்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு கிரகண காலத்திலும் கவனமுடன் இருக்க வேண்டிய நட்சத்திரங்கள் பற்றிப் பஞ்சாங்கம் மூலமாக எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

    தோஷம் பெறும் நட்சத்திரங்களுக்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்வது என்பதை நாம் அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

    பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது இந்த சுபகிருது ஆண்டில் ஐப்பசி மாதம் 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை (25.10.2022) அன்று `பார்சுவ சூரிய கிரகணம்' ஏற்படுகிறது. அன்றைய தினம் சுக்லபட்சம் பிரதமை திதியில் ராகுவிற்குரிய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில், துலாம் ராசியில் கேது கிரகஸ்தம் கூடிய நேரத்தில் கிரகணம் ஏற்படுகிறது.

    இந்தக் கிரகணத்தால் தோஷம் பெறும் நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகியவை என்பதால், அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தோஷ நிவர்த்திக்குரிய வழிபாடு, பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

    கிரகணத்தை நேராகக் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகண ஆரம்பத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அல்லது கிரகணம் முடிந்த பின்னால் குளித்து முடித்து உணவு அருந்துவது உத்தமம்.

    கர்ப்பிணிப் பெண்கள், கிரகண நேரத்தில் உடலில் சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது. ஏனென்றால் அந்த நேரத்தில் ஏற்படுகின்ற கதிர்வீச்சின் தாக்குதலால் வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கிரகண நேரத்தில் உடலில் உள்ள ஜீரண பகுதிகள் வலிமை இழக்கும். எனவே அப்போது திட உணவுகளை சாப்பிடக்கூடாது. பசி உள்ளவர்கள் திரவ ஆகாரங்களை சாப்பிடலாம். உணவுப் பொருட்களில் கிரகண கதிர் வீச்சுக்களின் தாக்கம் இல்லாமல் இருக்க, தர்ப்பைப் புல் போட்டு வைப்பது நல்லது.

    உணவுப் பாத்திரம், தண்ணீர்ப் பானை போன்றவற்றின் மேல் தர்ப்பைப் புல் போட்டு வைக்கலாம். அல்லது வைக்கோல் துரும்பும் போட்டு வைக்கலாம். தர்ப்பைப் புல் எல்லாவிதமான தீய சக்தியில் இருந்தும் நம்மைக் காக்கும் தன்மை கொண்டது. விஷ முறிவுச் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெறும் பொருளாகவும் அது கருதப்படுகிறது. எனவே தர்ப்பைப் புல்லை கையில் உள்ள மோதிர விரலில் சுற்றி வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் தலையில் ஒரு தர்ப்பைப் புல்லை சொருகி வைத்துக்கொள்ளலாம்.

    இந்த கிரகண கால நேரம், ஒரு அருமையான நேரம் ஆகும். வழிபாட்டிற்கு உகந்த நேரம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கோவில்களில் நடை மூடப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் நடை திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னா் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    கிரகண நேரத்தில் நமது இல்லத்தில் நமக்கு உகந்த தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம். இந்த வேளையில் இறை நாமத்தை ஒருமுறை நாம் சொன்னால் ஆயிரம் முறை சொன்ன பலன் நமக்குக் கிடைக்கும். முற்காலத்தில் எல்லாம் கற்றுத் தேர்ந்த நம்பிக்கை மிக்க சீடர்களுக்கு கிரகண காலத்தில் தான் குரு உபதேசங்களை வழங்குவார். குரு மூலம் தீட்சை கிடைக்கும் நேரமாக இந்த நேரம் கருதப்படுகிறது. இறையருள் சித்திக்கும் இந்த நேரத்தில் இல்லத்தில் இறை நாமங்களை உச்சரிப்பது நல்லது.

    இந்த நேரத்தில் எந்தெந்த நட்சத்திரங்களுக்குத் தோஷம் உருவாகிறதோ அந்த நட்சத்திரக்காரர்கள் கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்து ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். குளிக்கும் தண்ணீரில் கல்உப்பு ஒரு சிட்டிகை அளவு போட்டுக் குளிப்பது நல்லது. சூரிய கிரகணத்தால் உடல்நிலையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதிருக்க கல் உப்புப் போட்டுக் குளிக்க வேண்டும். சூரிய கிரகணம் என்பதால் சூரியனுக்குரிய கோதுமையைத் தானம் கொடுப்பதோடு, ஒரு தாம்பாளத்தில் ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு கொஞ்சம் வைத்து, அத்துடன் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு காணிக்கை வைத்து சூரியன் சன்னிதியில் தானம் கொடுத்து வழிபட்டு வருவது நற்பலன் தரும்.

    கடன் சுமையின் காரணமாக தடுமாறுபவர்கள் வாங்கிய கடனில் ஒரு சிறு தொகையை இந்த நேரத்தில் உரியவர்களிடம் கொடுத்தால் கடன் முழுவதும் தீர வழிபிறக்கும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க உகந்த நேரம் இதுவாகும். கிரகண காலத்தில் மன ஒருமைப்பாடும், நேர்மறைச் சிந்தனையும் உங்கள் வாழ்வை வளப்படுத்தும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம் கிடைக்கும். இந்த நேரத்தை நல்ல விதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    பொதுவாக இந்த கிரகண நேரம் வலிமையான நேரம் என்பதால் இல்லத்தில் இருந்து நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தெய்வீக சக்தி அதிகரிக்கும். அதே நேரம் நுண்கிருமிகளின் தாக்குதல் ஏற்படாமல் இருக்கவும், கதிர்வீச்சின் தாக்கம் உடலில் ஏற்படாதிருக்கவும் உணவில் கட்டுப்பாடு செலுத்தி வீட்டிற்குள்ளேயே கிரகணம் முடியும் வரை இருப்பது நல்லது.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    ×