search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தார் சாலை"

    • மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கலந்து கொண்டார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு பகுதியான வண்ணான்விளை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், பகுதி செயலாளர் ஜீவா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் ரூ.5.28 கோடி மதிப்பில் தார் சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
    • இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைச்சர் மூர்த்தி ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் 3 தார் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ1.37கோடி மதிப்பீட்டில் 1.6கி.மீ நீளம், மாங்குளம் கிராமத்தில் ரூ2.04கோடி மதிப்பீட்டில் மாங்குளம் - காந்திநகர் வரை 2கி.மீ நீளம், வெள்ளியன்குன்றம் புதூர் கிராமத்தில் ரூ1.87கோடி மதிப்பீட்டில் விபுதூர் முதல் அந்தமான் சாலை வரை 2கி.மீ நீளம் என மொத்தம் ரூ5.28கோடி மதிப்பீட்டில் 5.6கி.மீ நீளம் உள்ள 3 தார்சாலைகள் மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி பொது மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மணிமேகலை, சோமசுந்தரபாண்டியன், வழக்கறிஞர் கலாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது,
    • பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி அவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்பொழுது குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத்திற்கு ஆட்டோக்கள் கூட சவாரிக்கு வர மறுப்பதாகவும் ஆதங்கத்துடன் எம்.எல்.ஏ விடம் கூறினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலரை தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏன் இவ்வளவு நாட்களாக புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை? புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3.5 கி. மீ தூரத்திற்கு ரூ. 2 கோடியே 24 லட்சம் நிதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டு ள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரி கூறினார். இதனை தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியிடம் அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, நிர்வாகிகள் காமராஜ் ஏழுமலை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாலைகள் பல ஆண்டுகளாக மண் சாலைகளாகவே இருந்து வந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பதவியேற்றவுடன் நகரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி நகராட்சி பகுதியில் உள்ள 93 மண் சாலைகளை ரூ. 653.95 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    23-வது வார்டில் நடந்து வரும் சாலை பணிகளை நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி, நல்லுப்பாண்டி ஆகியோர் பார்வையிட்டனர். 

    • சக்கிமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்மேடு பகுதியில் எம்.ஜி.ஆர் நகர், பி.டி.ஆர். நகர், நரிக்குறவர் காலனி, அன்னை இந்திரா நகர், சத்யா நகர், அம்பேத்கர் நகர், அஞ்சுகம் நகர் ஆகியவை உள்ளன. இங்கு 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அம்பேத்கர் நகர் முதல் அஞ்சுகம் நகர் வரை தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. போக்குவரத்து சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.

    எனவே அம்பேத்கர் நகருக்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஆகியவை வருவதில்லை. அம்பேத்கர் நகரில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.பி. நிதியில் தார்ச்சாலை போடப்பட்டது. அதன்பிறகு அங்கு எந்தவித பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. கல்மேட்டில் உள்ள சிலைமான் புறக்காவல் நிலையம் செயல்படாமல் உள்ளது. 4 ரோடு சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.

    அம்பேத்கர் நகரில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும், வணிக வளாகம் கட்டிடம் மற்றும் புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
    • பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி முதல் பனிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லுாரி வரையில் பைபாஸ் பகுதியில் வராததால்அப்பகுதிக்கு தனியாக தேசிய நெடுஞ்சாலை நகாய் பிரிவின் சார்பில் தனியாக ஒப்பந்த பணி கோரப்பட்டு பணிகள் துவங்கியது. இப்பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலைகள் தரமில்லாமலும், ஒரே நீள,அகலத்தில் போட ப்படவில்லை. மாறாக பள்ளமும், மேடுமாகவும், பழைய தார்சாலை அளவில் பாதியளவே பல இடங்களில் தார் சாலைபோடப்பட்டுள்ளன.

    அரைகுறையாக போடப்பட்ட தார்சாலையும் தரமற்ற முறையில் உள்ளது. இதனால் பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது. தரமற்ற சாலைகள் போட்ட தேசிய நெடு ஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சி யினர், வியாபாரிகள் போரா ட்டம் நடத்திட தயாராகி வருகின்றனர். இதனால் தரமற்ற சாலையை சீரமைத்து, சீராக சாலை அமைத்திட மாவட்ட நிர்வாகம், நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • 15-வது மானிய பொதுநீதியின் கீழ் ரூ.18½ லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தார் சாலை அமைத்து தரக் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது மானிய பொதுநீதியின் கீழ் ரூ.18½ லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரேகா ஸ்டான்லி, ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி குமரேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குத்துக்கல்வலசை ஊராட்சி திருநகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.
    • பழனி நாடார் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு பணியினை தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சி திருநகர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று தென்காசி மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் ஆயிரப்பேரி உதய கிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி குத்துக்கல்வலசை ஊராட்சி திருநகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு சுந்தரம், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஆயிரப்பேரி தி உதய கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய தார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கரம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கணேசன் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். குத்துக்கல்வலசை ஊரா ட்சி மன்ற செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியம், அழிவிடைதாங்கி மதுரா பெருமாள்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.46.27 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

    இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தார் சாலையை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேலு, மா. கி. வெங்கடேசன், மோ. ரவி, ராம் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கிரீன் பார்க் அவென்யூ பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் தார் சாலை
    • பூஜையை கவுன்சிலர் ராஜேஸ்வரி தினகரன் தொடங்கிவைத்தார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 17-வது டிவிசனுக்குட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் பார்க் அவென்யூ பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையை கவுன்சிலர் ராஜேஸ்வரி தினகரன் தொடங்கிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் வெள்ளி சீனி, அவைத்தலைவர் முருகேசன், துணை செயலாளர்கள் அன்பு செழியன், சொர்ணபுரி முத்தப்பன், பிரதிநிதிகள் பாலாஜி, கோவிந்தன், மணி, அசோசியேஷன் தலைவர் டாக்டர் சந்திரமவுலி, செயலாளர் லாவண்யா, பொருளாளர் மாங்கனி கிருஷ்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொபாதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • 20 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. வட க்குத்தெரு 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான பிரதான சாலையாக இருக்கும் சி.எஸ்.ஐ. சர்ச் முதல் பாபு அப்துல்லா ஆட்டோ நிறுத்தம் வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    15 நாட்களுக்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. தோண்டப்பட்ட தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்தப்பகுதியில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதனால் அந்தப்பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் சிரமத்தி ற்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் தார்ச்சாலை அமைப்பதற்காக வடக்கு தெரு கருணை பள்ளி செல்லும் வழியில் 20 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. தார்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் நடுரோட்டில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களால் இரவு நேரங்களில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடிய சிறுவர்கள் கீழே விழுந்து உயிர்பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ப்பகுதியில் கொட்டப்பட்ட ஜல்லிகற்களை அகற்றி விரைவில் தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×