search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarred road"

    • வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • காவிரி ஆற்றின் நடுவே புகளூர் தடுப்பணை பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வாழவந்தியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு குற்றபுல னாய்வு துறை ஈரோடு உட்கட்ட டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 160 மூட்டையில் 9 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடத்தல்

    விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தேவேந்திரன் (52), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்திக் கொண்டு கடலூர் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, கடத்தப்பட்ட 9 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய தேவேந்தி ரன், பன்னீர்செல்வம் ஆகி யோரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1 3/4 கோடியில் புதிய மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட வீதிகளில் மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூமி, பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகளில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்குப் பிரிவு மூலம் ரூ.1 3/4 கோடியில் புதிய மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது

     இதற்கான பூமி பூஜை விழா வில்லியனூர் அண்ணாசிலை அருகில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமி நாராயணன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் சுந்தரராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட வீதிகளில் மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூமி, பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன்,

    தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ், நிர்வாகிகள் ராஜி, ஜலால் பாய், ரமணன், அக்பர், சபரிநாதன், அருணாசலம், பாஸ்கரன், மணவாளன், சேகர், ராஜேந்திரன், ஏழுமலை, ரபீக், வெங்கடேஷ், கரிகாலன், ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாலைகள் பல ஆண்டுகளாக மண் சாலைகளாகவே இருந்து வந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பதவியேற்றவுடன் நகரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி நகராட்சி பகுதியில் உள்ள 93 மண் சாலைகளை ரூ. 653.95 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    23-வது வார்டில் நடந்து வரும் சாலை பணிகளை நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி, நல்லுப்பாண்டி ஆகியோர் பார்வையிட்டனர். 

    • கீழக்கரையில் தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
    • பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. வடக்குத்தெரு 7-வது வார்டு உட்பட்ட பகுதியான பிரதான சாலையாக இருக்கும் சி.எஸ்.ஐ சர்ச் முதல் பாபு அப்துல்லா ஆட்டோ நிறுத்தம் வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    1 மாதத்திற்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றும் பணி துவங்கப்பட்டது. பின்பு ஜல்லி கற்களை பரப்பி 15 நாட்களுக்கு மேலாகிவிட்டது இதுவரையிலும் தார் சாலை அமைக்கப்படவில்லை.

    தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    அந்த பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடிய சிறு குழந்தைகள் அச்சத்தில் செல்கின்றனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுத்து தார்சாலையை விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×