search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்துக்கல்வலசை"

    • குத்துக்கல்வலசை ஊராட்சி திருநகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.
    • பழனி நாடார் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு பணியினை தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சி திருநகர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று தென்காசி மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் ஆயிரப்பேரி உதய கிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி குத்துக்கல்வலசை ஊராட்சி திருநகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு சுந்தரம், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஆயிரப்பேரி தி உதய கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய தார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கரம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கணேசன் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். குத்துக்கல்வலசை ஊரா ட்சி மன்ற செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

    ×