search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர்"

    • மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 3000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில், கபினி அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.

    பற்றாக்குறை காலங்களில் திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விடாத நிலையில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிட்ட 3000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை.

    காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அணை பகுதிகளிலும் மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை

    நெல்லையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 697 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.43 அடியாக உள்ளது. அணை பகுதிகளில் மழையால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 98 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கு 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும், நம்பியாறு அணை 12.49 அடியாகவும் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சிவகரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், தென்காசி யில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கடனா நதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    பூதலூர்:

    கல்லணையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் விடாமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசு நிரந்தர தீர்வை மேற்கொள்ள வேண்டியும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரி தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும் தமிழ் விவசாயிகள் சங்கம், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் விவசாயிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல் .ரவி ,தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சுப்புராஜ் ,தேசிய மக்கள் கட்சி துணைத் தலைவர் ராமமூர்த்தி ,திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னலட்சுமி, தஞ்சை சமூக ஆர்வலர் பனசைஅரங்கன், மக்கள் பாதை அமைப்பின் திருச்சி தங்கவேல், மது ஒழிப்பு போராளி சுந்தர், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சம்சுதீன் , நெல்லை மாவட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி செயலாளர் பாக்கியமுத்துஉள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பச்சை துண்டுஅணிந்து கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • தடுப்பணை கட்டி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
    • தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில்பொறுப்பாளர்கள்ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஞானமணி தலைமை வகித்தார்.

    செயலாளர் சத்யநாராயணன், பொருளாளர் வெங்கட்ராஜ், கௌர வதலைவர் கார்த்தி கேயன், ஆலோசகர் சேதுராமன், இளங்கோவன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்னாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    வரும் காலத்தில் இது போன்ற தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் கூடுதலாக தடுப்பணைகளை தமிழக அரசு கட்டவேண்டும்.

    அவ்வாறு தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக்கிடவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

    • குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.
    • தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள திருமானூர் நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் ஆணையர் மகேஷ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருமானூர் நீரேற்று நிலையத்தில் முதலில் உறிஞ்சும் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டது.

    இது 18 எம். எல்.டி. அளவிற்கு அமைக்க ப்பட்டு தஞ்சைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதை தவிர மற்றொரு ஆழ்குழாய் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டு உள்ளன.

    இதுவும் 18 எம்.எல்.டி. அளவிற்கு அமைக்கப்பட்டு தயாரான நிலையில் உள்ளது.

    இந்த பணிகள் இன்னும் 2 மாதத்திற்குள் முடிந்து விடும்.

    இது இரண்டும் சேர்த்தால் 36 எம். எல்.டி அளவுக்கு தஞ்சை மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதுதவிர முன்பு இருக்கக்கூடிய 23 எம். எல்.டி.யும் சேர்த்தால் சுமார் 60 எம்.எல்.டி. அளவிற்கு தண்ணீர் தஞ்சை மாநகருக்கு விநியோகம் செய்ய இருக்கிறது.

    நம்முடைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 30 எம்.எல்.டி. 'அளவிற்கு தஞ்சைக்கு தண்ணீர் வந்தாலே போதுமானது.

    தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் இன்னும் 13 ஊராட்சிகளை இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    இந்த பணிகள் மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மற்றும் இத்துறை அமைச்சரின் ஒப்புதலோடு செய்து வருகிறோம்.

    இதன் திட்ட மதிப்பீடு ரூ.73 கோடி ஆகும். குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.

    இன்னும் 10 மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற்றவுடன் 24 மணி நேரமும் எவ்வித தடையும் இன்றி பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாநகராட்சி செய ற்பொறியாளர் பொறுப்பு ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • போதிய தண்ணீர் வராததால் குறுவை பயிர்கள் கருக தொடங்கின.
    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடும்பாவியை இழுத்து சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட இடங்களில் போதிய தண்ணீர் வராததால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற, வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் கொடும்பாவி இழுத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    களிமண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்று நடுவே தீச்சட்டி வைத்து நெடும்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடும்பாவியை இழுத்து சென்றனர்.

    பின், முள்ளியாற்றில் கொடும்பாவியை விட்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் சம்பா சாகுபடி 67 சதவீதம் சரிந்தது.
    • வருகிற 12-ந்தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள முக் கிய நீராதாரங்கள் போதிய மழை இல்லாததால் வறண்டு போய் காணப்படு கின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அைடந் துள்ளனர். காலம் தவறிய பருவ மழையால் குறிப்பிட்ட நேரத்தில் சம்பா சாகுபடியில் ஈடுபடமுடியாமல் போனது.

    மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை சம்பா சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விட 67 சதவீதம் குறைந்துள் ளதாக வேளாண்மைத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக் யில் தெரிவித்துள் ளது. வழக்கமாக, செப்டம்பர் மாதத்திலேயே 45,000 ஹெக் டேரில் நெல் சாகுபடிக்கான விதைப்பு பணிகள் தொடங் கும்.

    ஆனால், போதிய மழை பெய்யாததாலும், வைகை யில் நீர் இருப்பு குறைந்து தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும், பெரும்பா லான விவசாயிகள் இந்த ஆண்டு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் விவசாயிகள் தங்கள் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செப்டம்பரில் முக்கிய நீர் ஆதாரங்களுக்கான தண் ணீர் வரத்து வந்ததால் 185 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி பணிகள் தொடங்கி யதாக வேளாண் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், சுமார் 553.645 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு சம்பா பருவத்தின் முடிவில் மாவட்டத்தில் சுமார் 45,000 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட் டது.

    தற்போது சாகுபடி பரப்பளவு குறைந்திருந்தபோதிலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் மீண்டும் பணிகள் வேகம் எடுக்கும் என்று வேளாண் மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கவேண்டும் என்றும், இந்தாண்டு குறுவை, சம்பா பருவ சாகுபடி தண்ணீர் வராததால் பொய்த்து விட் டது. எனவே மதுரை மாவட் டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் கவுரவத் தலை வர் எம்.பி.ராமன் அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் விதைப்புப் பணிகளை முடித்திருந்தா லும், தற்போது மழை பெய்து வருவதால், முழுவது மாக மீண்டும் தொடங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதுதொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை விவசாயிகள் சங்க அமைப் பாளர் எம்.கவாஸ்கர் கூறு கையில், நல்ல மழை பெய்த தால் விதைப்பு பணியை துவக்கினோம். விவசாயிகள் ஏக்கருக்கு சராசரியாக ரூ.12,000 வரை செலவழித் துள்ளனர் என்றார். விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கக் கோரி, ஆர்.எஸ்.மங்கலம், திருவா டானை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், வருகிற 12-ந்தேதி திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நேற்று (ஞாயிற் றுக்கிழமை) நடைபெற்ற சங்கக் கூட்டத்தில், 57-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங் களுக்கு இந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங் கப்படவில்லை என்று விவ சாயிகள் புகார் தெரிவித்த னர்.

    கடந்த ஐந்தாண்டு அறு வடை சராசரி அடிப்படை யில் காப்பீட்டுத் தொகை வழங்குவது தவறானது, நடப்பாண்டு சாகுபடியை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்கள் மூலம் காப் பீடு செய்யாமல், அரசு நிறு வனங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியு றுத்தி, நாங்கள் வரும் வியா ழன் அன்று திருவாடானை தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்த இருக்கி றோம் என்று கூறினர்.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 66.60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

    உடுமலை

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர்இருப்பும் உயர்ந்தது. இதனால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள பாசன நிலங்களுக்கு உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    தென்மேற்கு பருவமழையும் கைவிட்டதால் அணையில் நீர்இருப்பும் குறைவாக காணப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஆகஸ்டு் மாதம் 10 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவதால் வறட்சி அதிகரித்து உள்ளது. அதைத்தொடர்ந்து பழைய மற்றும் புதிய பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் தேவையை சமாளிப்பதற்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். வருகிற 12-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 66.60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • காவிரியில் தண்ணீர் வரவேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும்.
    • நவக்கிரக பூஜை, சிறப்பு ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ் ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் மேலக்காவேரி தனியார் திருமண மண்டபத்தில் துரைதலைமையில் உலக நலன் வேண்டி மகாளய பட்ச பருவத்தில் வேதபாராயண சத்சங்கம், சிறப்பு ருத்ர ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.

    இந்த ருத்ர ஜப ஹோமத்தில் காவிரியில் தண்ணீர் வரவேண்டும்.

    விவசாயம் செழிக்க வேண்டும். உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்று உலக நலன்வேண்டி 100-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் கலந்துகொண்டு கோபூஜை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, சிறப்பு ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ் ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

    இதில் குடந்தை மற்றும் சென்னையை சேர்ந்த ஆச்சாரியார்கள், வேதபட்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது.
    • அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுக்கா, அமராவதி ஆற்றில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் மடத்துக்குளம் தாலுக்கா, தாராபுரம் தாலுக்கா மற்றும் கரூர் மாவட்டத்திலும்சேர்த்து பழையவாய்க்கால் பாசனம் மூலம் 25 ஆயிரம் ஏக்கரும், புதிய கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதியும் சேர்த்து 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைத்து வருகிறது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டம் உட்பட நிலத்தடி நீரும் பெருகி ஓரளவுக்கு பயன்பெற்று வருகிறது. ஆனால் அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு கிடைக்கப் பெறாத நிலையில் தேவையான நீரை விட மிகக் குறைந்த நீரே கிடைத்துள்ளது. இந்நிலையில் பாசனப்பகுதியில் தென்னை மரங்கள், நீண்ட கால பயிர்களும் இந்த ஆண்டு பயிரான கரும்பு உட்பட பயிர்கள், நீர் பற்றாக்குறையால் காயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் துவங்க வேண்டிய காலத்தில் துவங்காத நிலை உள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக பிரதான கால்வாய் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து கொண்டு வருகிறது. நீர் பற்றாக்குறையால் காய்ப்பு இழந்து கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் தண்ணீரை டிராக்டர்களிலும் லாரிகளிலும் விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகின்றனர். அமராவதி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காணும் பயிர்களுக்கு உடனடியாக நீர் பாசனம் செய்ய வேண்டி உள்ளது. அமராவதி அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் உள்ள நீரை பயன்படுத்தி வறட்சியான நேரத்தில் வடகிழக்கு பருவமழை கிடைப்பதற்கு முன்னால் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை தடுத்திடவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் பழைய பாசன பகுதிகளுக்கும் இருக்கிற நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும். அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதன் மூலம் ஆற்றில் உள்ள சட்டவிரோதமான 1500 -க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் இந்நீரை பயன்படுத்தும் நிலைமையே இருந்து வந்துள்ளது. இதனால் பாசனம் பெற வேண்டிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிறது.

    ஆகவே, இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் காலத்தில் ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக நீரை எடுக்கின்ற பம்பு செட்டுகளின் மின் இணைப்புகளை துண்டித்து அதன் மூலம் அபரிமிதமாக தண்ணீரை எடுப்பதை தடுத்து நிறுத்திட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் சமமான அளவில் நீர் திறக்கவும் செய்ய வேண்டும். தலா 800 கன அடி வீதம் குடிநீர் தேவை உட்பட திறக்க வேண்டுமெனவும், காலதாமதம் செய்யாமல் காய்ந்து வரும் நீண்ட கால பயிர்களான தென்னை, கரும்பு மற்ற பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். வறட்சியான நேரத்தில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பிலும், அப்பகுதி விவசாயிகளின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது.
    • கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. இந்த பாசன பகுதியில் கரும்பு உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு போதிய மழை இல்லாத நிலையில் ஆயக்கட்டு பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது.எனவே அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அமராவதி வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:- பருவமழை பெய்யாததால் அமராவதி பிரதான கால்வாய் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. நீண்ட கால பயிரான தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே அணையிலிருந்து பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

    அணையிலுள்ள தண்ணீரை புதிய ஆயக்கட்டு மற்றும் ஆற்றுப்பாசனத்துக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். கரூர் வரை தண்ணீர் சென்றடைய வேண்டுமானால், அணையிலிருந்து கரூர் வரை ஆற்றில் முறைகேடாக தண்ணீர் எடுக்கும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு இயக்காமல் தடை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மத்திய மாவட்ட மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் மா.சேகர் (மத்திய), ரெத்தினசாமி (மேற்கு), சி.வி.சேகர் (தெற்கு), பாரதிமோகன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கி விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், உரிய காவிரி நீரை பெற்று கொடுக்க வலியுறுத்தியும் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோ ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் அமைப்பு செயலாளர்கள் காந்தி, துரை.செந்தில், கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய அணி இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், மருத்துவர் அணி துணைச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், கோட்டை பகுதி புண்ணியமூர்த்தி,

    கரந்தை பகுதி பஞ்சு, தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் நாகராஜன், மருத்துவக்கல்லூரி பகுதி மனோகர், கீழவாசல் பகுதி சதீஷ்குமார், தெற்கு ஒன்றியம் ஸ்டாலின் செல்வராஜ், 5-வது வட்ட செயலாளர் சம்பத், மருத்துவக்கல்லூரி பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பசுபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேசவன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, அம்மா பேரவை துணை தலைவர் பாலை.ரவி, விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், மாணவர் அணி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் நாகத்தி கலியமூர்த்தி, சாமிவேல், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சங்கர், மாணவர் அணி செயலாளர் ஜவகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட மாநகர செயலாளர் ராம.ராமநாதன் நன்றி கூறினார்.

    ×