search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நெற்பயிர்களை கையில் ஏந்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் பேசினார்.

    தஞ்சையில் நெற்பயிர்களை கையில் ஏந்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மத்திய மாவட்ட மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் மா.சேகர் (மத்திய), ரெத்தினசாமி (மேற்கு), சி.வி.சேகர் (தெற்கு), பாரதிமோகன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கி விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், உரிய காவிரி நீரை பெற்று கொடுக்க வலியுறுத்தியும் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோ ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் அமைப்பு செயலாளர்கள் காந்தி, துரை.செந்தில், கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய அணி இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், மருத்துவர் அணி துணைச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், கோட்டை பகுதி புண்ணியமூர்த்தி,

    கரந்தை பகுதி பஞ்சு, தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் நாகராஜன், மருத்துவக்கல்லூரி பகுதி மனோகர், கீழவாசல் பகுதி சதீஷ்குமார், தெற்கு ஒன்றியம் ஸ்டாலின் செல்வராஜ், 5-வது வட்ட செயலாளர் சம்பத், மருத்துவக்கல்லூரி பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பசுபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேசவன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, அம்மா பேரவை துணை தலைவர் பாலை.ரவி, விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், மாணவர் அணி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் நாகத்தி கலியமூர்த்தி, சாமிவேல், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சங்கர், மாணவர் அணி செயலாளர் ஜவகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட மாநகர செயலாளர் ராம.ராமநாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×