என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் சம்பா சாகுபடி 67 சதவீதம் சரிந்தது
    X

    மதுரை மாவட்டத்தில் சம்பா சாகுபடி 67 சதவீதம் சரிந்தது

    • மதுரை மாவட்டத்தில் சம்பா சாகுபடி 67 சதவீதம் சரிந்தது.
    • வருகிற 12-ந்தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள முக் கிய நீராதாரங்கள் போதிய மழை இல்லாததால் வறண்டு போய் காணப்படு கின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அைடந் துள்ளனர். காலம் தவறிய பருவ மழையால் குறிப்பிட்ட நேரத்தில் சம்பா சாகுபடியில் ஈடுபடமுடியாமல் போனது.

    மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை சம்பா சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விட 67 சதவீதம் குறைந்துள் ளதாக வேளாண்மைத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக் யில் தெரிவித்துள் ளது. வழக்கமாக, செப்டம்பர் மாதத்திலேயே 45,000 ஹெக் டேரில் நெல் சாகுபடிக்கான விதைப்பு பணிகள் தொடங் கும்.

    ஆனால், போதிய மழை பெய்யாததாலும், வைகை யில் நீர் இருப்பு குறைந்து தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும், பெரும்பா லான விவசாயிகள் இந்த ஆண்டு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் விவசாயிகள் தங்கள் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செப்டம்பரில் முக்கிய நீர் ஆதாரங்களுக்கான தண் ணீர் வரத்து வந்ததால் 185 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி பணிகள் தொடங்கி யதாக வேளாண் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், சுமார் 553.645 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு சம்பா பருவத்தின் முடிவில் மாவட்டத்தில் சுமார் 45,000 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட் டது.

    தற்போது சாகுபடி பரப்பளவு குறைந்திருந்தபோதிலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் மீண்டும் பணிகள் வேகம் எடுக்கும் என்று வேளாண் மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கவேண்டும் என்றும், இந்தாண்டு குறுவை, சம்பா பருவ சாகுபடி தண்ணீர் வராததால் பொய்த்து விட் டது. எனவே மதுரை மாவட் டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் கவுரவத் தலை வர் எம்.பி.ராமன் அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் விதைப்புப் பணிகளை முடித்திருந்தா லும், தற்போது மழை பெய்து வருவதால், முழுவது மாக மீண்டும் தொடங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதுதொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை விவசாயிகள் சங்க அமைப் பாளர் எம்.கவாஸ்கர் கூறு கையில், நல்ல மழை பெய்த தால் விதைப்பு பணியை துவக்கினோம். விவசாயிகள் ஏக்கருக்கு சராசரியாக ரூ.12,000 வரை செலவழித் துள்ளனர் என்றார். விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கக் கோரி, ஆர்.எஸ்.மங்கலம், திருவா டானை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், வருகிற 12-ந்தேதி திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நேற்று (ஞாயிற் றுக்கிழமை) நடைபெற்ற சங்கக் கூட்டத்தில், 57-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங் களுக்கு இந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங் கப்படவில்லை என்று விவ சாயிகள் புகார் தெரிவித்த னர்.

    கடந்த ஐந்தாண்டு அறு வடை சராசரி அடிப்படை யில் காப்பீட்டுத் தொகை வழங்குவது தவறானது, நடப்பாண்டு சாகுபடியை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்கள் மூலம் காப் பீடு செய்யாமல், அரசு நிறு வனங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியு றுத்தி, நாங்கள் வரும் வியா ழன் அன்று திருவாடானை தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்த இருக்கி றோம் என்று கூறினர்.

    Next Story
    ×