search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பூசி முகாம்"

    • மதுரையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 38 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்பட 1,459 பகுதிகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தன.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 37-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

    இதற்காக மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்பட 1,459 பகுதிகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தன.

    கிராமப்புற பகுதிகளில் 909 மையங்களும், மாநகரில் 550 மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 2லட்சத்து 20 ஆயிரத்து 256 பேர் தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 498 பேர் ஊரக பகுதிகளிலும், 1லட்சத்து12 ஆயிரத்து 758 பேர் மாநகர பகுதிகளிலும் வசிப்பது தெரிய வந்தது.

    அதே போல மதுரை மாவட்டத்தில் 11லட்சத்து 63 ஆயிரத்து 107 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டி இருந்தது. அவர்களில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 374 பேர் கிராமங்களிலும், 5லட்சத்து 72 ஆயிரத்து 733 பேர் மாநகரிலும் பகுதிகளிலும் வசிப்பது தெரியவந்தது.

    தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பள்ளி, கல்லூரி என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஒருங்கிணைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தாத பயனாளிகளை கண்டறிந்து சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 ஆயிரத்து 462 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் முதல் டோஸ்: 530, 2-ம் டோஸ்: 2968, பூஸ்டர் டோஸ்: 11 ஆயிரத்து 76 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் முதல் டோஸ்: 269, 2-ம் டோஸ்: 9 ஆயிரத்து 315, பூஸ்டர் டோஸ்: 12 ஆயிரத்து 872 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மதுரை அரசினர் மருத்துவமனையில் முதல் டோஸ்: 65, 2-ம் டோஸ்: 464, பூஸ்டர் டோஸ்: 810 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் முதல் டோஸ்: 9, 2-ம் டோஸ்: 6, பூஸ்டர் டோஸ்: 78 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்றைய சிறப்பு முகாம் வாயிலாக முதல் டோஸ்: 873, 2-ம் டோஸ்: 12ஆயிரத்து 753, பூஸ்டர் டோஸ்: 24 ஆயிரத்து 836 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் சிறப்பு முகாம்கள் வாயிலாக 38 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

    • செப்டம்பா் மாத இறுதி வரையில் மட்டுமே பூஸ்டர் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
    • 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது.

    கோவை

    கோவை மாவட்டத்தில் நாளை (18-ந் தேதி) 1,530 இடங்களில் மெகா ெகாரோனா தடுப்பூசிமுகாம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் உத்தரவுப்படி செப்டம்பா் மாத இறுதி வரையில் மட்டுமே பூஸ்டர் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.

    அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 37-வது ெகாரோனா தடுப்பூசி முகாம் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் கிராமப்புறங்களில் 1081 இடங்கள், மாநகராட்சிப் பகுதிகளில் 340 இடங்கள், நகராட்சிப் பகுதிகளில் 109 இடங்கள் என மொத்தம் 1,530 இடங்களில் ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    ெகாரோனா பூஸ்டர் தடுப்பூசியானது 2-வது தவணைப் பெற்று 6 மாதங்கள் அல்லது 26 வாரம் ஆன 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது.

    இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள்அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    முகாம் நடைபெறும் இடங்களை coimbatore.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பொது மக்கள் தெரிந்துகொள்ளலாம். 18 முதல் 59 வயதினருக்கான பூஸ்டர் தடுப்பூசி வரும் 30-ந் தேதி வரை மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில்1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    ஈரோடு, செப். 17-

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை (ஞாயிற்று க்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவ சமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுப்படுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

    • மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 37-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மையங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 256 பேர் - (ஊரக பகுதிகளில் 107498 மாநகர பகுதிகளில் - 112758) உள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் முடிவுற்றவர்கள் 11 லட்சத்து 63 ஆயிரத்து 107 பேர் (ஊரக பகுதிகளில் 590374 மாநகர பகுதிகளில் -572733) உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது.
    • அனைவருக்கும் இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொது மக்களை பாதிக்காமல் தடுக்கும் வகையில் சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமார் 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2-வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது. குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடை வெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் வருகிற 30-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் முழு மையாக செலுத்தப் பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் தற்போது 12,78,000 பய னாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.
    • பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

    காங்கயம்:

    முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.

    முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு வருகிற 18- ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

    • மதுரையில் கொரோனா சிறப்பு முகாம் நடந்தது. இதில் 56 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    • பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

    மதுரை

    தமிழகத்தில் கொரோனா பரவல் முற்றிலுமாக குறையவில்லை. மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று 1000-க்கும் மேற்பட்ட மையங்களில் சுகாதார ஊழியர்கள் தடுப்பு செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் டோஸ் 11 ஆயிரத்து 628, 2-வது டோஸ் 6 ஆயிரத்து 815, பூஸ்டர் 9 ஆயிரத்து 832 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 28 ஆயிரத்து 275 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் டோஸ் 472, 2-வது டோஸ் 14 ஆயிரத்து 501, பூஸ்டர் 11 ஆயிரத்து 880 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 26 ஆயிரத்து 853 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    மதுரை அரசு மருத்துவமனையில் முதல் டோஸ் 75, 2-வது டோஸ் 555, பூஸ்டர் 871 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1501 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் 9, 2-வது டோஸ் 8, பூஸ்டர் 43 தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 60 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் முதல் டோஸ் 12 ஆயிரத்து 184 பேருக்கும், 2-வது டோஸ் 21 ஆயிரத்து 879 பேருக்கும், பூஸ்டர் 22 ஆயிரத்து 626 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 56 ஆயிரத்து 689 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • மாவட்டத்தின் 1,341 இடங்களில் முகாம் நடந்தது.
    • 2,681 பணியாளர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை, 15 முதல் 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் 35ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 98.92 சதவீதம் பேர் முதல் தவணையும், 79.06 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 15 முதல் 18 வயது பிரிவில், 88.64 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.18 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 12 முதல் 14 வயது பிரிவில் 90.44 சதவீதம் பேர் முதல் தவணையும், 66.84 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

    இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி இன்று நடந்த 34-ம் கட்ட முகாமில் செலுத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகம், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் 1,341 இடங்களில் முகாம் நடந்தது. பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

    • கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது.
    • இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 6.71 லட்சம் மிதிவண்டிகள் ரூ.341 கோடி மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளிடம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னையில் உள்ள 174 பள்ளிகளில் 27,689 மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்படும் மிதிவண்டிகளின் தரம் மாணவ, மாணவிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று பாதிப்பு உள்ளது. எனினும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தித்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. எனவே மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

    கோவை 

    கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கைகளாலும் பொது மக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த ப்பட்டுள்ளது.

    மேலும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநிலம் முழுவதும் துரித படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் 34 வது கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும் மாநகராட்சிப்பகுதிகளில் 339 முகாம்களும் நகராட்சிப்பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்தி க்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2888241 நபர்களுக்கு முதல் தவணை 2646998 இரண்டாம் தவணையும் 15:18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 140239 முதல் தவணை 110400 இரண்டாம்தவணையும், 12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 90250 முதல் தவணை 62619 இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் என மொத்தமாக 62,32,938 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தடுப்பூசியானது இரண்டாம் தவணைப் பெற்று 6 மாதங்கள் அல்லது 26 வாரம் ஆன 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் வழங்கப்படுகிறது.

    இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் தங்களை சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 வரை 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 16,82,050 (98.50 சதவீதம்) நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 15,81,862 (92.64 சதவீதம்) நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி 2,69,354 நபர்களுக்கும் என மொத்தம் 35 லட்சத்து 33 ஆயிரத்து 266 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் 3,753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு மாநில முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 3753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இந்த நிலையில் 3-வது பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி பொதுமக்கள் போட்டு வந்தனர்.

    தற்போது 75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக முகாம்களிலும் போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தடுப்பூசி செலுத்திக்கொண்டு அங்கிருந்த பொது மக்களிடம் தடுப்பூசி என்பது மிகவும் பாதுகாப்பானதாகும். ஆகையால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி உள்ளனர்.

    ×