search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன்"

    • டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது.
    • கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்தது. அப்போது சின்னமனூரைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் டிரோன் கேமராவை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றார்.

    டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து தெரித்து ஓடினர். எனவே இதுகுறித்து கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.
    • 300 பேர் ரூ.2 ஆயிரம் செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ. 6 லட்சமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சீனிவாசன்பி ள்ளை ரோட்டில் உள்ள தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டில் வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பது, பொருட்களை உற்பத்தி செய்வது மட்டு மின்றி சந்தைப்படுத்துவதில் சிறந்து விளங்குவது எப்படி என்பது குறித்து விவசாயிக ளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) அனீஸ்குமார் தலைமை தாங்கினார்.

    தஞ்சை தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் சேர்மன் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    இதில் ஈரோடு ஆதார நிறுவனம் திட்ட அலுவலர் முனைவர் வடிவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இந்தியா முழுவதும் உருவாக்குகிற மத்திய அரசின் சிறப்பு திட்டம்.

    இதில் 10 ஆயிரத்தில் 3000 நிறுவனங்களை நபார்டு வங்கி மூலம் உருவாக்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் விவசாயிகளுக்கு உற்பத்தி தளத்தில் தலைமுறை தலைமுறையாக அனுபவ அறிவு இருக்கும்.

    ஆனால் சந்தைப்படுத்துதல் என்ற தளத்தில் அவர்களுக்கு அனுபவம் மிகவும் குறைவு.

    இதனால் 300 விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து நிறுவ னத்தை உருவாக்கினால் சந்தைபடுத்துதலில் ஒரு வலிமையை கொடுக்கும்.

    இந்த திட்டம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் சந்தையிலும் ஒரு வியாபாரி போல் பொருட்களை விற்க முடியும்.

    இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் 300 பேர்.

    கம்பெனியின் ஒரு பங்கு என்பது ரூ.100 ஆகும்.

    ஒவ்வொரு விவசாயியும் 20 பங்கு வாங்கலாம். அப்படி என்றால் ரூ.2000 செலுத்த வேண்டும்.

    300 பேர் 2000 செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ.6 லட்சமாகும்.

    இதில் இணைப்பங்காக மத்திய அரசு ரூ.6 லட்சம் கொடுக்கிறது. இதனால் முதலீடு ரூ.6 லட்சமாகிவிடும். இது 750 நபர் வரை கொடுப்பார்கள்.

    உச்சபட்ச முதலீடு ரூ.30 பங்காகும்.

    இந்த கம்பெனியில் 10 பேர் கொண்ட இயக்குனர் குழு வந்துவிடும். அதில் முதன்மை செயல் அலுவலர், அக்கவுண்ட் மேனேஜர் நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவர்கள் விவசாயிகள் இடம் அறுவடை காலத்தில் பொருட்களை வாங்கி விடுவார்கள்.

    பின்னர் அந்த பொருட்களை சுத்தப்படுத்தி விலை ஏறும் போது மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துவார்கள்.

    வணிகத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இது 3 ஆண்டுகளுக்கான நிதி வழங்கும் திட்டமாகும்.

    இவர்களை வழி நடத்துவதற்கு ஆதார நிறுவனங்கள் என்று 247 பேரை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

    ஈரோடு துள்ளியல் பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது ஆதார நிறுவனம் ஆகும்.

    தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டை வளர்த்து எடுக்கும் பொறுப்பை நாங்கள் எடுத்துள்ளோம்.

    நாங்கள் இவர்களுடன் 5 ஆண்டு பயணம் செய்வோம்.

    ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.18 லட்சத்தை மத்திய அரசு கொடுக்கிறது.

    ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.2 கோடி வரைக் கடன் உதவி வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் நிறுவனமானது தென்ன ங்கன்று, நாற்றங்காலை கையில் எடுத்துள்ளது. கண்டிதம்பட்டு அருகே சொக்காலி கிராமத்தில் அரை ஏக்கரில் தென்னை நர்சரி அமைக்கப்பட்டுள்ளது.

    அடுத்த திட்டம் என்னவெ ன்றால் தேங்காயைடன் கணக்கில் கொள்முதல் செய்து பெரிய கம்பெனிகளுக்கு கொடுப்பது. குறிப்பிட்டு சொல்வது என்னவென்றால் இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.

    அனைத்து பயிர்களுக்கும் இந்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கலாம்.

    அதேபோல் தென்னைக்கு வேர் வழி நுன்னூட்டம் கொடுப்பதால் தென்னை செழித்து வளரும்.

    தென்னை மற்றும் பிற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டல் உணவுப் பொருட்கள் தயாரிப்பது மற்றொரு திட்டமாகும். இதற்கான எந்திரங்கள் ரூ.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.

    இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் வந்த பிறகு தரமான உணவு பொருட்கள் தயார் செய்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்த முடியும்.

    எதிர்கா லத்தில் தஞ்சாவூரில் உள்ள இந்த கம்பெனி விவசாயிகளுக்கு பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும்.

    வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்று கொடுப்பது அடிப்படை நோக்கமாகும்.

    ஜூலை மாதத்தில் சென்னையில் உணவு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் முதன்மை செயல் அலுவலர் நவீன் அரசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது.
    • இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    சர்வதேச எல்லை பகுதியில் பஞ்சாப் வழியே இந்தியாவுக்குள் போதை பொருளை கொண்டுவந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த நான்கு நாட்களில் இது போன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது. கீழே விழுந்த கருப்பு நிற டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அளவில் பெரியதாகவும், கருப்பு நிறத்திலும் இருந்த டிரோனில் சந்தேகத்திற்குரிய போதை மருந்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

     

    மே 19 ஆம் தேதி முதல் இந்திய எல்லைக்குள் இதே போன்று அத்துமீறி நுழைந்த ஐந்தாவது டிரோன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பல சமயங்களில் டிரோன் பறந்து வருவது போன்ற சத்தம் மட்டும் கேட்கும். ஆனால் விசாரணையில் டிரோன் எதுவும் மீட்கப்படாத சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    ஏற்கனவே இரண்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்றாவது டிரோன் ஊடுறவ முயன்ற போது சுட்டதில், அது பாகிஸ்தான் எல்லை பகுதியில் வீழ்ந்தது என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி ஊடுறவிய டிரோனில் 3.3 கிலோகிராம் போதை பொருள் இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.
    • 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்திற்கு இடமாக பறந்த டிரோனை அவர்கள் சுட்டுவீழ்த்தினார்கள். இதே மாவட்டத்தில் ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.

    கறுப்பு நிறத்திலான இந்த 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.
    • பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர்.

    இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ஊடுருவும் டிரோன்களை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியான குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குர்தாஸ்பூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

    • முதுகுளத்தூர் பகுதிகளில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது.
    • இந்தப் பணிகளை வேளாண்மை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் சுமார் 8,200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பருத்தியை பொறுத்த வரை விதைப்பு முதல் அறுவடை வரை பல்வேறு நிலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், புழுக்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற் கொள்வது அவசியமாகிறது.

    இந்தநிலையில் நிலைக்கத்தக்க பருத்தி சாகுபடி இயக்கத்தின்கீழ் டிரோன் மூலம் பருத்தி வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் திருவரங்கம், வளநாடு, கருமல் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். இந்தப் பணிகளை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன் ஆய்வு செய்தார். அப்போது வேளாண் உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், முத்துராஜ் மற்றும் ஜெயக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து,சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

    சென்னையில் ரிமோட் மூலம் செயல்படும் நவீன சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பில் நடந்த இந்த விழாவில் அவர் பேசுகையில்,சென்னை போக்குவரத்து போலீசுக்கு பல்வேறு நவீன வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.அவர் கூறியதாவது:-

    சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதில் ஒரு திட்டம்தான் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல் ஆகும்.அவசர வேளைகளில் சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது,சிக்னலை மாற்றி வழி விடவேண்டும்.போக்குவரத்து போலீசார் அருகில் இல்லாதபோது,சிக்னலை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.இதனால் இதுபோன்ற நேரத்தில் ரிமோட் மூலம் சிக்னலை உடனே மாற்றி விடலாம்.அதனால் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இது தவிர கார்,மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்கள் அதிவேகமாக சென்றால்,அவற்றின் வேகத்தை கணக்கிட்டு அபராத தொகை தொகை விதிக்கும் 6 கருவிகளின் திரைகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து,சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் நவீன வசதியும் வரப்போகிறது. கோடைகாலம் தொடங்கி விட்டதால், போக்குவரத்து போலீசாருக்கு இலவசமாக குளிர்ச்சியான மோர் தினமும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர்,இணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • பசில்கா பகுதியில் கானியாகே கிராம பகுதியில் அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
    • டிரோன் பறந்தது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தின் எல்லை பகுதிகள் வழியாக அடிக்கடி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்ட பகுதியில் நேற்று ஒரு டிரோன் பறப்பதை அதிகாரிகள் பார்த்தனர்.

    இதுபற்றி வீரர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் அந்த ஆளில்லா டிரோனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி பசில்கா பகுதியில் கானியாகே கிராம பகுதியில் அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

    அந்த டிரோனை ஆய்வு செய்தபோது அது சீன தயாரிப்பு டிரோன் என தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் இது 2வது சம்பவம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆளில்லா உளவு பார்க்கும் டிரோன்களின் சோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    • இந்திய தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலேயே டிரோன்களை தயாரித்தால் செலவு கணிசமாக குறையும்.

    புதுடெல்லி:

    இந்திய ராணுவம் தற்போது பல நவீன ஆயுதங்களை தனது படைபிரிவில் சேர்த்து வருகிறது.

    மேலும் வெளிநாட்டு ஆயுதங்களை வாங்குவதற்கு பதில் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி ராணுவத்தில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளுக்கான டிரோன்களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து உள்ளது.

    இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா உளவு பார்க்கும் டிரோன்களின் சோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இச்சோதனையில் டிரோன்களின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமைந்தால் அவற்றை ராணுவத்தில் இணைத்து கொள்வது பற்றி உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    இதுபோல ராணுவத்துக்கு அதிக ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பிலும் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இப்பணிகள் முடிந்ததும் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் ஆளில்லா விமானத்தின் சோதனையும் நடைபெறும். இந்த விமானச்சோதனை வெற்றி பெற்றால் இந்தியா இதுபோன்ற பல விமானங்களை தயாரிக்கமுடியும்.

    டி.ஆர்.டி.ஓ. தயாரித்து வரும் ஆளில்லா விமானம் மூலம் சுமார் 300 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். தரையில் இருந்து 28 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து செல்லவும், 18 மணி நேரத்திற்கு தடை இன்றி பறக்கும் விதத்திலும் இந்த விமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    தபஸ் பி.எச். என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான தயாரிப்பும் வெற்றி பெற்றால் இந்திய ராணுவத்தில் டிரோன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதன் கண்காணிப்பு திறனும் மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய ராணுவத்திற்காக இப்போது அமெரிக்காவில் இருந்து நவீன டிரோன்கள் வாங்கப்பட உள்ளது. சுமார் 30 டிரோன்கள் வாங்க திட்டமிடப்பட்டது. இதற்கான செலவு 3 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய பண மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடியாகும்.

    இதையே இந்திய தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலேயே டிரோன்களை தயாரித்தால் செலவு கணிசமாக குறையும். எனவே விரைவில் இதுபோன்ற உள்நாட்டு தயாரிப்புகளை தொடங்க டிஆர்.டி.ஓ. திட்டமிட்டு வருகிறது.

    • யானைகள் கூட்டத்தை வனத்துறையின் அதிவிரைவு படையினா் வனத்துக்குள் விரட்டினா்.
    • ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பகுதியில் காட்டு யானை ஒன்று அண்மையில் 2 பேரை கொன்றது. இந்த யானை தற்போது கிளன்வான்ஸ் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த ஆட்கொல்லி யானை மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வனத்துறையினா் ட்ரோன் கேமரா மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

    இதற்கிடையே, நியூஹோப் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டத்தை வனத்துறையின் அதிவிரைவு படையினா் கிளன்வான்ஸ் பகுதியில் உள்ள வனத்துக்குள் விரட்டினா்.

    • கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
    • பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் பறந்தது ஊழியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம், தலைமை செயலகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர், காவல்துறை தலைமையகம் ஆகியவை உள்ளது.

    கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் இன்று பகலில் பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் ஒன்று பறந்தது.

    இதைக்கண்ட தூதரக ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த தூதரக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று டிரோனை இயக்கியவரை பிடித்து விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்பாக அந்த நபர் டிரோனை எடுத்துக்கொண்டு மாயமானார்.

    அங்கிருந்த கேமரா மூலம் டிரோனை இயக்கியவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

    • பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களை இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
    • டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களையும், போதை பொருட்களையும் இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    எல்லையில் அத்துமீறி நுழையும் டிரோன்களை கண்காணிக்க ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று ஊடுருவியது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து உஷாரானார்கள்.

    அந்த டிரோனை நோக்கி சரமாரியாக சுட்டனர். அந்த டிரோன் பாகிஸ்தானுக்குள் திரும்பி செல்ல முயன்றது. என்றாலும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.

    அமிர்தசரஸ் அருகே ராஜாதல் என்ற இடத்தில் அந்த டிரோன் நொறுங்கி கிடந்தது. அந்த டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

    ×