என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Department of Defense"
- ஆளில்லா உளவு பார்க்கும் டிரோன்களின் சோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.
- இந்திய தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலேயே டிரோன்களை தயாரித்தால் செலவு கணிசமாக குறையும்.
புதுடெல்லி:
இந்திய ராணுவம் தற்போது பல நவீன ஆயுதங்களை தனது படைபிரிவில் சேர்த்து வருகிறது.
மேலும் வெளிநாட்டு ஆயுதங்களை வாங்குவதற்கு பதில் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி ராணுவத்தில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளுக்கான டிரோன்களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து உள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா உளவு பார்க்கும் டிரோன்களின் சோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இச்சோதனையில் டிரோன்களின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமைந்தால் அவற்றை ராணுவத்தில் இணைத்து கொள்வது பற்றி உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
இதுபோல ராணுவத்துக்கு அதிக ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பிலும் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிந்ததும் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் ஆளில்லா விமானத்தின் சோதனையும் நடைபெறும். இந்த விமானச்சோதனை வெற்றி பெற்றால் இந்தியா இதுபோன்ற பல விமானங்களை தயாரிக்கமுடியும்.
டி.ஆர்.டி.ஓ. தயாரித்து வரும் ஆளில்லா விமானம் மூலம் சுமார் 300 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். தரையில் இருந்து 28 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து செல்லவும், 18 மணி நேரத்திற்கு தடை இன்றி பறக்கும் விதத்திலும் இந்த விமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தபஸ் பி.எச். என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான தயாரிப்பும் வெற்றி பெற்றால் இந்திய ராணுவத்தில் டிரோன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதன் கண்காணிப்பு திறனும் மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்திற்காக இப்போது அமெரிக்காவில் இருந்து நவீன டிரோன்கள் வாங்கப்பட உள்ளது. சுமார் 30 டிரோன்கள் வாங்க திட்டமிடப்பட்டது. இதற்கான செலவு 3 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய பண மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடியாகும்.
இதையே இந்திய தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலேயே டிரோன்களை தயாரித்தால் செலவு கணிசமாக குறையும். எனவே விரைவில் இதுபோன்ற உள்நாட்டு தயாரிப்புகளை தொடங்க டிஆர்.டி.ஓ. திட்டமிட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்