என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிபன்"
- சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- பச்சை பயறு, கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம், புரதம் அதிகம் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - அரை கப்
பச்சை பயறு - முக்கால் கப்
இஞ்சி - சிறிய துண்டு
சீரக தூள்- அரை டீஸ்பூன்
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு, பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஊறவைத்த கேழ்வரகு, பச்சை பயறை மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சத்தான சுவையான கேழ்வரகு பச்சை பயறு தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி அருமையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடல் எடையை குறைப்பதற்கு இது ஒரு சுவையான உணவு.
- சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த உணவு சிறந்தது.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
தக்காளி - 1
கேரட் - 1
சின்ன வெங்காயம் தோலுரித்து - 10
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 4 பல்
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன் நன்றாக பொடி செய்தது,
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
ஓமம் - 1/2 ஸ்பூன் இடித்தது
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
செய்முறை
தக்காளி, கேரட், சின்ன வெங்காயத்தை கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பூண்டை துருவிக்கொள்ளவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை பொடித்துகொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, அரைத்த விழுது, துருவிய பூண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ப.மிளகாய், இஞ்சி, பொடித்த மிளகு, சீரகம், மிளகாய் தூள், ஓமம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடை மாவு பதத்திற்கு மாவை கரைத்து கொள்ள வேண்டும்.
அடை மாவு பதம் தெரியாதவர்கள் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை மொத்தமாக ஊற்றி கடலை மாவைக் கரைத்தால், கட்டி கட்டியாக ஆகிவிடும். ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, உங்கள் கைகளை போட்டு நன்றாக பிசைந்து அடை மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
5 நிமிடம் மாவை ஊறவைத்து விட்டு, அதன் பின்பு, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான அடை தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகளவு உள்ளது.
- ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருள்கள்
ஓட்ஸ் - 3 கப்
தயிர் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓட்ஸை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு வறுத்து, மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தையும் அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில், சிறிதளவு வெந்நீர் ஊற்றி, அதில் ஓட்ஸ் பொடி, தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய ஓட்ஸ் மாவில், நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, தோசைக் கல்லில் மெல்லிய தோசை போல ஊற்றி வேகவைத்து, எடுக்க வேண்டும்.
இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை ரெடி.
இதற்கு கார சட்னி, தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சிவப்பரிசியில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்தது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள் :
சிவப்பரிசி மாவு - 4 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.)
புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும்.
பின்னர் புட்டு குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை இந்த முறையில் மாவை நிரப்பவும்.
பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி. சன்னாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மசால் தோசை எனில் உருளைக்கிழங்கு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள்.
- இன்று முட்டை சேர்த்து மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கடுகு - அரை ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
கரம் மசாலா- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித்தழை - கையளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை ஒரு பௌலில் ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளியை சேர்த்து குழை வதக்கி விட வேண்டும்.
தக்காளி நன்கு மசிந்த பிறகு , மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் .
இப்போது முட்டையை ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்த்து முட்டை நன்றாக உதிர்ந்து வரும் வரை கிளறி விட வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து , கல் சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் முட்டை மசாலாவை தோசை மேல் தோசை முழுவதும் பரப்பி விட வேண்டும். சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்த பிறகு எடுத்து , மேலே கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறினால் எத்தனை வைத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இப்போது சூடான முட்டை மசாலா தோசை ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சீஸ் பூரியை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செய்து கொடுத்து அசத்தலாம்
தேவையான பொருட்கள்:
பூரி மாவிற்கு...
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
துருவிய சீஸ் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் மசாலா பூரி தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சோயா பீன்ஸில் அதிகளவு புரதங்கள், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
- முளைக்கட்டிய சோயா பீன்ஸில் தோசையை செய்தால் அதிகளவு வைட்டமின் E கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் - 2 கப்
கேரட் - 1
முள்ளங்கி - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
அரிசி மாவு - 4 ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கேரட், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.
சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மிக்சி ஜாரில் ஊறிய சோயா பீன்ஸை போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான ஆரோக்கியமான தோசை ரெடி!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து இருக்கிறது.
- கருப்பு கொண்டக்கடலையில் வெள்ளை கொண்டக்கடலையை விட அதிகளவு சத்துக்கள் உள்ளன
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை - 250 மி.லி
பச்சரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 /2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
செய்முறை:
* கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
* மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 12 மணிநேரம் புளிக்கவிடவும்.
* பின்பு சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து மாவை சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றி சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிடவும்.
* சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்
- கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
- கொள்ளுவை ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்,
அரிசி - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு,
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 2 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.
- இந்த ரெசிபி கர்நாடகாவின் பாரம்பரிய உணவாகும்.
- இந்த ஸ்நாக்ஸ் கொழுப்பு குறைந்த உடலுக்கு ஆரோக்கியமான உணவு.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கப்
தண்ணீர் - 1/2 லிட்டர் + 3 கப்
பச்சை மிளகாய் - 15 (மிளகாயின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்)
இஞ்சி - விரல் அளவு 1 துண்டு
தேங்காய் துருவல் - 1 கப்
தேங்காய் துண்டுகள்(பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
வெந்தயம் இலைகள் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
* வெந்தயம் இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* துவரம் பருப்பை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்
* மிக்சிஜாரில் ப.மிளகாய், இஞ்சி, ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
* பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை போட்டு கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த முறையில் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேங்காய் துருவல், நறுக்கிய தேங்காய் துண்டுகள், வெந்தயம் இலைகள், உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
* ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் வைக்க வேண்டும்.
* இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு மாவை அனைத்தையும் செய்ய வேண்டும்.
* இட்லி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும்.
* இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, கார சட்னி சூப்பராக இருக்கும்.
* வெந்தயம் இலைகளுக்கு பதிலாக கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம்.
- பரோட்டா பிரியர்கள் மத்தியில் ரோட்டுக்கடை கிளி பரோட்டா படு ஃபேமஸ்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை இலையால் மூடி 15 நிமிடம் அடுப்பு தவாவில் வேக வைத்து எடுத்தால் பூ போல் பிரியும் வாழை இலை பரோட்டா தயார். இதன் வாசனையே பசியை வரவழைத்து நம்மை சாப்பிட தூண்டும். இதை வீட்டிலேயும் செய்யலாம். செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம்.
தேவையான பொருட்கள்
வெஜிடபிள் சால்னா - 2 கப்
பரோட்டா - 2
வாழை இலை - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும்.
பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும்.
இப்போது அதில் நறுக்கிய வெங்காயத்தை தூவவும்.
பின்பு அதன் மேல் மீண்டும் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னாவை ஊற்றவும்.
இறுதியாக அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை தூவி வாழை இலையை பக்குவமாய் மடித்து நூல் அல்லது வாழை நாரை வைத்து வாழை இலையை கட்டி எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும்.
இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
சூப்பரான வாழை இலை கிளி பரோட்டா தயார்.
- தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
- கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 3 ஸ்பூன்,
தண்ணீர் - 4 கப்,
கேரட் - 1
பசலை கீரை - அரை கப்
பச்சை பட்டாணி - கால் கப்
காலிஃப்ளவர் - சிறிதளவு
துருவிய கோஸ் - கால் கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா பீன்ஸ் - கால் கப்
பீன்ஸ் - கால் கப்
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
* பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.
* கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடம் கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.
* கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி(கட்டி விழக்கூடாது) நன்றாக கலக்கி விடவும். அதை 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
* இப்போது சூப்பரான கேழ்வரகு - காய்கறி சூப் ரெடி.
* விருப்பான எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)