search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிபன்"

    • மதுரையில் பன் பரோட்டா மிகவும் பிரபலம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    முட்டை - 1

    பால் - 1 மேசைக்கரண்டி

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு கிண்ணத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, அதில் பால் சேர்த்து நன்கு பிசையவும்.

    * பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரம் மூடிவைக்கவும்.

    * இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

    * அடுத்து கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்க்க வேண்டும்.

    * தேய்த்த மாவை விரலால் சூற்றி (வட்ட வடிவில்) வைக்கவும்.

    * ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடவும்.

    * சுவையான மற்றும் மொறு மொறுப்பான மதுரை பன் பரோட்டா தயார்.

    * இதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன், மட்டன் சால்னா சூப்பராக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் தினமும் வெரைட்டியாக சாப்பிட ஆசைப்படுவாங்க.
    • குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    தோசைமாவு - தேவையான அளவு

    பன்னீர் - 2 கப்

    குடை மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்

    சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    பட்டர் - தேவையான அளவு

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துருவிக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு சாஃப்ட் ஆகும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா வதக்கி கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அதில், துருவிய பன்னீரை சேர்த்து கொள்ளலாம்.

    தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா ரெடியாகி விட்டது. இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நெய் சேர்த்து நன்கு மொறு மொறுப்பாகும் வரை வேக விட வேண்டும்.

    இப்பொழுது தோசையின் மேல் பன்னீர் மசாலாவை சேர்க்க வேண்டும். அதன் மேல் சிறிது பட்டர் வைத்துக் கொள்ளலாம். தோசை வெந்ததும் இரண்டாக மடித்து தட்டில் மாற்ற வேண்டும்.

    இப்போது சூப்பரான பன்னீர் மசாலா தோசை ரெடி.

    இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
    • கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 3 கப்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    தேங்காய் - 1/2 மூடி (துருவிக் கொள்ளவும்)

    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் கோழ்வரகு மாவு மற்றும் உப்பு போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    * இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.

    * அதற்குள் ஒரு இட்லி துணியை நீரில் நனைத்து நீரை முற்றிலும் பிழிந்து, இட்லி தட்டில் விரித்து, பிரட்டி வைத்துள்ள கேழ்வரகு கலவையை இட்லி தட்டில் பரப்பி விடவும்.

    * இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சத்தான கேழ்வரகு புட்டு ரெடி!!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
    • கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - நான்கு கப்

    உளுந்து - முக்கால் கப் ,

    குடைமிளகாய் - 1,

    ப.மிளகாய் - 3

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    இஞ்சி - சிறிய துண்டு,

    பச்சைப் பட்டாணி - கால் கப்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - மூன்று ,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

    உளுந்தை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கி விட்டிருக்கும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.

    கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் துருவல், வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து வெட்டி வைத்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டி யெடுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு மசாலா இட்லி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காலை அல்லது இரவு மீந்து போன இட்லி வைத்து இந்த ரெசிபியை செய்யலாம்.
    • 10 நிமிடத்தில் தயிர் இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 6,

    புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்,

    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,

    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,

    ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,

    மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

    உப்பு - தேவையான அளவு,

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    முந்திரிப்பருப்பு - 6.

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்,

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து தயிரில் கலக்கவும்.

    பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மாதுளம் முத்துக்கள், மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.

    சூப்பரான தயிர் இட்லி ரெடி.

    அல்லது வெறும் கொத்தமல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

    இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேமியா, ரவையில் உப்புமா மட்டுமல்ல பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    சேமியா - 2 கப்

    ரவை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - தேவையான அளவு

    மிளகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    முந்திரி - 10

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

    * அதே வாணலியில் சேமியாவையும், ரவையையும் தனித்தனியாகச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை நன்றாக கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.

    * ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்த பின் ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.

    * பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.

    * தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

    * மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

    * சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * ரவை போட்டு நன்றாக கிளறிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

    * ருசியான ரவா சேமியா பொங்கல் தயார்.

    * இதற்கு சாம்பார் அருமையான இணையாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த தோசையை சாப்பிடலாம்.
    • காலையில் குறைந்த நேரத்தில் சத்தான டிபன் செய்ய நினைப்பவர்கள் இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை - கால் கிலோ

    அரிசி மாவு - கால் கப்

    சின்ன வெங்காயம் - 10

    சீரகம் - அரை டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    காய்ந்த மிளகாய் - 5

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கோதுமை ரவையை நன்றாக கழுவி கொள்ளவும்.

    ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும்.

    அடுத்து அதில் கழுவிய கோதுமை ரவையை போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 15 நிமிடம் ஊற விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான டிபன் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 100 கிராம்

    அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி

    ரவை - ஒரு தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி

    ப.மிளகாய் - ஒன்று

    கொத்தும்மல்லி - சிறிதளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி.

    * இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பரோட்டா மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - ஒரு கப்

    கோதுமை மாவு - கால் கிலோ

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.

    * முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.

    * தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    * இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை ரவை உகந்தது.
    • டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவை உணவுகளை எடுத்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    வரமிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    தேங்காய் துருவல் - அரை கப்

    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிது

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * இஞ்சியை தட்டி வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, வரமிளகாய், தட்டி வைத்த இஞ்சியை போட்டு தாளித்த பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, ஒரு முறை கிளற வேண்டும்.

    * அடுத்து அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

    * வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவை, தேங்காய் துருவல் சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

    * இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

    * இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்
    • உப்புமாவில் சேமியா உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
    • காலையில் சமைத்து சாப்பிட சேமியா உப்புமா தான் சிறந்தது.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 பாக்கெட்

    வெங்காயம் - 1

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கேரட் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

    வரமிளகாய் - 1

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 1 1/2 கப்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பிறகு அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால், சேமியா வெஜிடபிள் உப்புமா ரெடி!!!

    • தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும், மேலும் ஆண்மை குறைபாட்டை நீக்கும்.
    • பச்சைப் பயறில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது, புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    தினை மாவு - 1 கப்,

    பச்சைப் பயறு - அரை கப்,

    தேங்காய்த்துருவல் - 1 கப்,

    கருப்பட்டி - 100 கிராம்,

    நெய், உப்பு - சிறிது.

    செய்முறை

    தினை மாவை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின் ஒரு தட்டில் வறுத்த தினை மாவை சிறிது வெந்நீர் விட்டு, கொஞ்சம் உப்பு கலந்து பிசிறிக் கொள்ளவும்.

    பச்சைப்பயறு, தினை மாவு, தேங்காய்த்துருவல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக புட்டு குழாயில் வைத்து நீராவில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான தினை பச்சைப் பயறு புட்டு ரெடி.

    ×