search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்கப்பாதை"

    • வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதை வடிந்தபோது ஆசாமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
    • ஐஎம்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக குருகிராம் மாவட்டத்தில் உள்ள டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்தள்ள சுரங்கப்பாதை ஒன்றில் தேங்கிய மழை நீரில் மூழ்கி போதை ஆசாமி உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரம், நேற்று முன்தினம் மாலை வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதை வடிந்தபோது ஆசாமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

    உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரிபேந்து எனவும், அவர் மானேசரியில் உள்ள ஐஎம்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

    அரிபேந்து சனிக்கிழமை இரவு முழுவதும் மது அருந்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியதாக இறந்தவரின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். குடும்ப உறுப்பினர்களால் புகார் ஏதும் அளிக்காததால் வழக்கப்பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ரூ.61,843 கோடி செலவில் 3 வழித் தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இதில் மாதவரம்-சிப் காட் இடையேயான வழித்தடத்தில் அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. கிரீன் வேஸ் சாலையை அடையாறு பகுதியுடன் இணைக்க இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    4 மாதங்களுக்கு முன்பு கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக காவேரி எனப்படும் சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி அடுத்து அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த சவாலான பணியில் ஈடுபட நூற்றுக் கணக்கான ஊழியர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் அடையாறு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபடும்.

    மற்ற 2 எந்திரங்கள் மந்தவெளியை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும். இதில் காவேரி என்ற எந்திரம் மட்டும் 150 மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றின் கீழ் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். இந்த பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மொத்த தூரம் ஒரு கிலோ மீட்டர் ஆகும்.

    ஆற்றுபடுகையின் மட்டத்தில் பொதுவாக சிறிய மாறுபாடு இருப்பதாலேயே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க கடினமாக இருக்கும். அதற்கு ஏற்ப சுரங்கம் தோண்டும் எந்திரத்தில் அழுத்த அளவுகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

    ஆற்றுப்படுகையின் ஆழம் சுமார் 3 முதல் 5 மீட்டர் ஆகும். அதற்கு கீழே 11 முதல் 13 மீட்டர் வரை துளையிட வேண்டும். இதன் மூலம் ரெயில் மட்டம் 18 மீட்டர் ஆக இருக்கும். அதற்கு ஏற்ப கவனமாக அளவிட்டு சுரங்கம் தோண்ட வேண்டும்.

    அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. சுரங்கப்பாதை தோண்டும் போது இதில் மாறுபாடு காணப்படலாம் என அதற்கும் தயாராக இருக்க வேண்டும். சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் சில வாரங்களில் ஆற்றுப்படுகையை அடையும்.

    சவாலான சூழ்நிலைகள் காரணமாக இந்த சுரங்கப் பாதை பணிகளை முடிக்க 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் ரெயில் மறியல் நடத்துவோம் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
    • முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றத் தில் முருகப்பெருமானின் முதற்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருப்ப ரங்குன்றத்தில் சாலை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலம் அமைக்கப்பட்ட போது இப்பகுதியில் மேம்பாலம் தேவையில்லை சுரங்கப்பாதை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை மீறி மேம்பாலம் கட்டப்பட்டது.

    திருப்பரங்குன்றம் கோவில், காய்கறி சந்தை, திருநகரில் உள்ள பள்ளி களுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவி கள் ெரயில்வே தண்ட வாளத்தை கடந்து சென்று வந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும், ரயில்வே தண்டவாளம் மற்றும் மேம்பாலத்தை கடந்து வந்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பாதுகாப்பு கருதி ெரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை கடக்க முடியாத வகையில் தடுப்பு அமைத்துள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொது மக்கள் அனைவரும் மேம்பாலத்தில் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும், முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

    இதையடுத்து இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.இதனை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு,

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், வியாபாரி கள் சங்கத்தினர், பொது மக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களின் நலன்கருதி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி கடையடைப்பு போராட்டம், 19-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுரங்கப் பாதையின் வழியாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் பஸ் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை.
    • சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் செட் மூலம் வெளியேற்றும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி சுரங்கப் பாதையில் மழைநீர் இந்த முறை தேங்கவில்லை என்றாலும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் திடீரென மழை வெள்ளம் சூழ்ந்தது.

    காலை 8 மணி வரை அந்த பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்றது. தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதியை ஒட்டிய இடங்களில் இருந்து மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சுரங்கப்பாதையில் தேங்கியது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டன.

    சுரங்கப் பாதையின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார், லாரி, ஆட்டோ மற்றும் பஸ் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை. அங்கு சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் செட் மூலம் வெளியேற்றும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. வியாசர்பாடி சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பெரம்பூர், பேசின்பாலம் வழியாக மக்கள் சென்றார்கள்.

    • தற்காலிக கேட்டை விரைந்து திறக்க வலியுறுத்தல்
    • சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    நாகர்கோவில் : 

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம் கருப்புக்கோட்டை இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் உள்ளவர்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்துதான் நாகர்கோவிலுக்கு வர வேண்டும். ரெயில் நிலையம் அருகே இருப்பதால் அடிக்கடி இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    எனவே அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட்டு சுரங்கப்பாதை பணிக்காக 4 மாதம் ரெயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    எனவே ரெயில்வே கேட் மூடுவதற்கு முன்பாக தற்காலிக ரெயில்வே கேட் அமைத்து தங்களுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்காலிக ரெயில்வே கேட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்காலிக கேட்டை அமைப்பதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணி மற்றும் தற்காலிக கேட்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ெரயில்வே கேட் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்காலிக கேட்டுக்கான பணிகள் மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் ெரயில்வே கேட் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை 9.45 மணிக்கு ெரயில்வே கேட் மூடப்பட்டது. ெரயில்வே கேட் மூடப்பட்டதையடுத்து ஊட்டுவாழ்மடம், கருப்பு கோட்டை, இலுப்பையடி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நாகர்கோவிலுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் கோதை கிராமம் ஒழுகினசேரி வழியாக சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ரெயில்வே கேட் மூடப்பட்டதை தொடர்ந்து தற்காலிக கேட்டுக்கான சிக்னல் உள்பட அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், தற்பொழுது ெரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் நாகர்கோவிலுக்கு அவசர தேவைக்காக நாங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் ெரயில்வே கேட்டை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • அம்பத்தூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும்.

    சென்னை:

    அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் 6-வது லெவல்-கிராசிங் பகுதியில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது.

    நீண்ட ஆண்டுகளாக மக்களால் அந்த நடைமேம்பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நடை மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டது.

    இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த நடைமேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அந்த நடைமேம்பாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

    அந்த நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 வாரங்களுக்கு முன்பு அந்த நடைமேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் தண்டவாளத்தை மக்கள் கடப்பதற்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதையடுத்து அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்த இடத்தில் புதிதாக சுரங்கப்பாதை கட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து முடித்து விட்டனர்.

    அதன்படி புதிதாக கட்டப்பட இருக்கும் சுரங்கப்பாதையில் மக்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கலாம் என்றும் முடிவு செயப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அந்த சுரங்க பாதையை சற்று பெரிதாக கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் அருகில் மார்க்கெட் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அதிகம் வருகின்றன. சிறிய பஸ்களும் அங்கு இயக்கப்படுகின்றன.

    இந்த வாகனங்கள் அனைத்தும் சுரங்க பாதை வழியாக இயக்கப்படும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று அம்பத்தூர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தகைய வசதிகள் செய்யப்படும் பட்சத்தில் அம்பத்தூரில் இருந்து வெங்கடாபுரம், கள்ளிக்குப்பம், கருக்கு, விஜயலட்சுமிபுரம் மற்றும் மேனாம்பேடு பகுதிகளுக்கு செல்பவர்கள் மிக மிக எளிதாக செல்ல முடியும்.

    அம்பத்தூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும்.

    தற்போது காலை, மாலை நேரத்தில் அம்பத்தூர் கனரக வங்கி பஸ் நிறுத்தம் முதல் அம்பத்தூர் ஓ.டி. வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் கட்டப்படும் புதிய சுரங்கப் பாதையை பெரிதாக கட்டினால் நிறைய வாகனங்கள் அந்த பாதையை பயன்படுத்தும்.

    இதனால் அம்பத்ரிதூல் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இதை கருத்தில் கொண்டு அம்பத்தூர் ரெயில் நிலைய சுரங்கப் பாதையை பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

    • சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.
    • சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    மாதவரம் பால் பண்ணை -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித் தடங்களில் 118 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற உள்ளன.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் வேகம் எடுத்து உள்ளது. மாதவரம் மற்றும் கிரீன்வேஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஸ்டெர்லிங் சாலை சந்திப்பின் கீழ் 850 மீட்டர் நீளத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைய உள்ளது. இது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் சிறிய பகுதி ஆகும்.

    இதற்காக சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `சுரங்கப் பாதை துளையிடும் எந்திரம் விரைவில் தயார் செய்யும் பணி தொடங்கப்படும். இது அடுத்த மாதத்தில் முடிவடையும். எனவே ஜூலை மாதம் முதல் சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை பணி தொடங்க வாய்ப்பு உள்ளது.

    சேத்துப்பட்டில் 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை பணி தொடங்கப்படும். இது ஸ்டெர்லிங் சாலை சந்திப்பை நோக்கி செல்லும் போது சுரங்கப்பாதையின் ஆழம் 15 மீட்டராக குறையும். ஏற்கனவே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது என்றார்.

    • ராஜபாளையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முயற்சி நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதால், மூடப்பட்ட ரெயில்வே கேட்டுக்கு மாற்றாக டி.பி.மில்ஸ் சாலையையும், எதிர்ப்புற சாலையையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறாமல் சுலபமாக ரெயில் பாதையை கடக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிகள் நிறைவேறி இடையூறில்லாத போக்குவரத்து உருவாகும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

    அந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்க வேண்டி உள்ளது. அந்த திட்டவரைவை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரெயில்வே துறை தனது பொறுப்பில் சுரங்கப் பாதை நிறுவுவதற்குரிய காங்கிரீட் பாலங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகளை முற்றிலும் கைவிடும் முயற்சிகள் மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத கையறு நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் நகரின் கிழக்கு பகுதியில்தான் அமைந்துள்ளன. மாணவர்கள், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேருதவியாக அமையும் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டப்பணிகள் தாமதம் காரணமாக துவண்டு போய் கிடக்கும் நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    இந்தநிலையில் உள்ளாட்சி மக்கள் மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவன நிர்வாகங்கள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்த திட்டம் கை விடப்படுவதை தடுத்துநிறுத்தி, சுரங்கப் பாதை திட்டத்தை எந்த தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என ராஜபாளையம் ரெயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • 4 மாதம் கேட் மூடப்படும்
    • இந்த ரெயில்வே கேட் தினசரி 24 மணி நேரத்தில் 13 மணி நேரம் பூட்டியே இருக்கும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத் தலைவரும், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் பின்புறம் ஊட் டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி போன்ற 5 சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500 வீடுகளுக்கு மேல் உள்ளது. ரெயில்வே பாதைகள் அமைத்தமையால் வடி வீஸ்வரத்திலிருந்து ஊட்டுவாழ்மடத்திற்கு ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய வகை யில் சாலை அமைக்கப் பட்டு இருந்தது. அதில் ரெயில்வே கேட்டும் அமைக் கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயில்வே கேட் தினசரி 24 மணி நேரத்தில் 13 மணி நேரம் பூட்டியே இருக்கும். இதனால் 5 கிராம மக்கள் நகரினுள் வர இயலாமல் தவித்தனர். தங்களுக்கு அந்த கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வேயை வலியுறுத்தி வந்தனர். மக்கள் தில் செல்ல ரூ.4.5 கோடி எளி செலவில் சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டனர். இந்த பணிகள் டெண்டர் தற்பொழுது விடப்பட்டு சுரங்கபாதை வேலைகள் உடன் துவங்க உள்ளது. இந்த சுரங்கபாதை வேலை முடிவடைய 4 மாதங்கள் ஆகும் என்பதால் அது வரை தற்பொழுதுள்ள ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்வதாக ரெயில்வே அதிகாரிகள் அந்த பகுதியில் போர்டு வைத்துள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாகர்கோவில் வர சுசீந்திரம், ரெயில்வே மேம்பாலம் அடுத்துள்ள சோழன்திட்டை அணைக் கட்டு வரை வந்துதான் நாகர்கோவில் வர 4 கி.மீ தூரம். சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் அடுத்து. வடக்கு பகுதியில் தற்போதைய ரெயில்வே பாதையும் கேட்டும் உள்ளது. இதன் அடுத்து வடக்குப் பகுதியிலுள்ள இடத்தில் தற்போ தைய ரெயில்வே கேட்டை மாற்றியமைக்க நல்ல வச தியும் வாய்ப்பும் உள்ளது.

    புதிய சுரங்கப் பாதை வேலைகள் முடியும் வரை தொடர்ந்து மேற்படி புதிய ரெயில்வே கேட் வழியாக பயணிகளும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது.

    அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தளி வாய்க்கால் மூலமாக ஏழுகுளம் பாசனமும் நடைபெற்று வருகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான பிரதான கால்வாய்க்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தளி வாய்க்கால் கடந்து செல்கிறது. தளி வாய்க்கால் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் துளையை சீரமைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் தளி சுரங்கப்பாதை சந்திக்கும் பகுதியில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அப்போது பி.ஏ.பி, கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல்
    • மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ெெரயில் நிலையத்தில் ரூ.1 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டும் கட்டமான பணியை ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அங்கிருந்து ஒப்பந்ததாரர்களிடமும், அதிகாரியிடமும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் எம்எல்ஏ மற்றும் ெரயில்வே துறைகளில் உடன் இருந்தனர்.

    சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் கணேஷ் கூறியதாவது:-

    வாணியம்பாடி நியூடவுன் ெரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின்படி சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதாக இருந்தது முதலில் நிறுத்தப்பட்டது அது இன்னும் நிலுவையில் உள்ளது.

    ஏனெனில் ெரயில்வே சுரங்க பாதை அமைய உள்ள இடத்தின் மிக அருகில் ஏரி உள்ளது. மேலும் அதில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலம் கட்டும் பகுதியின் அருகாமையில் தான் வெளியேறிச்செல்லும் நிலையும் உள்ளது.

    இதனால் உபரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆதலால் சுரங்கப்பாதை கட்டும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் வழங்கி உள்ள மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதற்காக மாநில அரசு நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றி இடத்தை ஒதுக்க வேண்டும்.

    மேலும் ெரயில் நிலையம் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய ெரயில் நிலைய அலுவலக கட்டிடம் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் நவீன கட்டிடங்கள் கட்டப்படும், பயணிகள் நிற்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி பணிகளும் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்புவனம் அருகே பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ெரயில்வே சுரங்கபாதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை பகுதிக்கு செல்ல மதுரை-ராமேசுவ ரம் நான்கு வழிசாலையில் ராமேசுவரம் செல்லும் தண்டவாளத்தை கடக்க ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்றி விட்டு 2 ஆண்டுகள் முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.

    இது அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை.

    மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்க பாதை அமைக்கும் போதே மழைநீர் வராத அளவிற்கு வடிகால் வசதி செய்யவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்க பாதை மீது மேற்கூரை ஏதும் அமைக்காததால் இன்று வரை கட்டி முடிக்கப் பட்டு மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    எனவே உடனடியாக ெரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×