search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் மூடல்
    X

    ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் மூடல்

    • தற்காலிக கேட்டை விரைந்து திறக்க வலியுறுத்தல்
    • சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம் கருப்புக்கோட்டை இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் உள்ளவர்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்துதான் நாகர்கோவிலுக்கு வர வேண்டும். ரெயில் நிலையம் அருகே இருப்பதால் அடிக்கடி இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    எனவே அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட்டு சுரங்கப்பாதை பணிக்காக 4 மாதம் ரெயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    எனவே ரெயில்வே கேட் மூடுவதற்கு முன்பாக தற்காலிக ரெயில்வே கேட் அமைத்து தங்களுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்காலிக ரெயில்வே கேட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்காலிக கேட்டை அமைப்பதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணி மற்றும் தற்காலிக கேட்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ெரயில்வே கேட் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்காலிக கேட்டுக்கான பணிகள் மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் ெரயில்வே கேட் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை 9.45 மணிக்கு ெரயில்வே கேட் மூடப்பட்டது. ெரயில்வே கேட் மூடப்பட்டதையடுத்து ஊட்டுவாழ்மடம், கருப்பு கோட்டை, இலுப்பையடி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நாகர்கோவிலுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் கோதை கிராமம் ஒழுகினசேரி வழியாக சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ரெயில்வே கேட் மூடப்பட்டதை தொடர்ந்து தற்காலிக கேட்டுக்கான சிக்னல் உள்பட அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், தற்பொழுது ெரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் நாகர்கோவிலுக்கு அவசர தேவைக்காக நாங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் ெரயில்வே கேட்டை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×