search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகிரி"

    • கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட வக்கீல் அணி மருதப்பன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முத்துலட்சுமி, சுமதி, தங்கராசு, தங்கேஸ்வரன், அவைத் தலைவர் துரைராஜ், துணை செயலாளர் முனியாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி கார்த்திக், ஆனந்தா ஆறுமுகம், புல்லட் கணேசன், இளையராஜா, சி.எஸ். மணி, வாசு. பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிக்கந்தர் பாபு, குட்டியப்பன், மாரிமுத்து, கட்டபொம்மன், பாண்டி, முருகன், சுந்தர், மாரியப்பன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது.
    • விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே விஸ்வநாதபேரி திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது. திரவுபதி அம்மன் திருக்கல்யாண அலங்காரம், கனி பறித்தல், அர்ச்சுனன் தபசு, பூப்பறித்தல், அரவான் களப்பொலி, துச்சாதனன் பலி வாங்குதல் ஆகிய வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 9-ம் திருநாளான நேற்று சேனைத்தலைவர் சமுதாயத்தினர் சார்பில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

    காலையில் திரவுபதி அம்மன் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழி திடலில் வேதபராயண முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டது.

    தொடர்ந்து பகலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திரவுபதி அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

    பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாலை 6.30 மணிக்கு பூக்குழி திடலை அடைந்த உடன் பூசாரி மணிகண்டன் பூக்குழி இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், விழா கமிட்டியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 13 சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தை பிடித்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் 2-வது தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தில் 19 சட்டக்கல்லூரிகள் மற்றும் மற்ற மாநிலத்தில் இருந்து தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 13 சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டியில் ஆந்திர மாநில கே.எல். நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தையும், தமிழக சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மாணவி அநன்யா ஸ்ரீ 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

      முதல் பரிசு பெற்ற மாணவி கிருஷ்ண நிகிதாவிற்கு ரொக்க பரிசு 10 ஆயிரத்தையும், 2-ம் பரிசு பெற்ற மாணவி அநன்யா ஸ்ரீக்கு ரொக்க பரிசாக 5 ஆயிரத்தையும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் வழங்கினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பிரசாரத்தின்போது கரகாட்டம், மரக்கால் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சிவகிரி:

    மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு அடிபணியோம் குடிப்பழக்கத்தை விட்டொழிப்போம் போன்ற கோட்பாடுகளை வலியுறுத்தி போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தென்காசியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பிரசாரம்

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாட்களாக நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு தென்காசி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக மது என்கிற அரக்கனை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு தொடக்கி வைத்தார். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராம உதவியாளர் அழகுராஜா, அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள்

    தொடர்ந்து மதுவிலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரகாட்டம், குச்சி, மரக்கால் ஆட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சியும், போதை போன்றவற்றை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விழிப்புணர்வு பாடல்கள் மூலமாகவும் விளக்கம் அளித்து கலைநிகழ்ச்சிகள் சிவகிரி அருகே ராயகிரி பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் துவக்கி வைத்தார். சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துச்செல்வம், கிராம உதவியாளர் மலைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகள் விளக்கி கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் ஆலோசனையின் பேரிலும் மற்றும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை பற்றி தெளிவாக பொதுமக்களிடம் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவ -மாணவிகள் விளக்கி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலட்சுமி செய்திருந்தார். 

    • பொது மக்களும், விவசாயிகளும் மணல் அள்ளும் டிராக் டர்களை சிறைபிடிக்கப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • டிராக்டரை சோதனையிட்டபோது போலி பாஸ் வைத்து மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    சிவகிரி:

    சிவகிரி கண்மாய் பகுதியில் போலியான பாஸ் வைத்து ஒவ்வொரு செங்கல் சூளைகளுக்கும் 100 டிராக்டர் மண் லோடு கொடுப்பதாகவும், அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் மண் அள்ளப்படுவதாகவும் தொடர்ந்து புகார் வந்தது. இதனை கண்டித்து பொது மக்களும், விவசாயிகளும் மணல் அள்ளும் டிராக் டர்களை சிறைபிடிக்கப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் விஜயரங்கப்பேரி, சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. மாலையாபுரம் பகுதியை சேர்ந்த முத்துகணேசன் சூர்யா (வயது25) என்பவர் மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது போலி பாஸ் வைத்து மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் நவமணி வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தார். இதுகுறித்து சப்- இன்ஸ் பெக்டர் ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

    • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீவநல்லூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பெண் கல்வி, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் விளக்கி பேசினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் உள்ள எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சீவநல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின்படி, எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் அரிபா தலைமை தாங்கினார்.

    இதில் 10 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை சீவநல்லூர் ஊராட்சி தலைவர் முத்துமாரி செய்திருந்தார்.

    • சித்தா டாக்டரான மணிவண்ணன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
    • கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மதிப்பு சுமார் 17 லட்சம் என கூறப்படுகிறது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் புது மந்தை விரிவாக்கம் 3- வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    102 பவுன் கொள்ளை

    இவர் தனது குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவிற்கு அருகே வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 102 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மதிப்பு சுமார் 17 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவஇடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, அவிவீனா மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    3 தனிப்படைகள் அமைப்பு

    மேலும், கைரேகை நிபுணர்கள் மூலமாக கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அது வீட்டை சுற்றி வந்து வயல் காட்டில் நின்று விட்டது. சுற்றியுள்ள வீடுகளில் சி.சி.டி.வி. காமிரா உள்ளதா? சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் வந்தார்களா? என்பது குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள வீடுகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படவில்லை. ஆகவே அப்பகுதியில் போலீசார் சி.சி.டி.வி. காமிரா பொருத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் ஆள் இல்லாததை நோட்டம் விட்டு தெரிந்து கொண்டு காம்பவுண்ட் கீழ்புறம் வடக்கு முலையின் வழியாக காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏறி வீட்டின் உள்ளே குதித்து முன்புறம் உள்ள கதவை உடைத்து, வீட்டில் இருந்த சாவியின் மூலமாக பீரோவை திறந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    இப்பொருட்கள் அதிகளவில் இருந்ததால் அருகே இருந்த பீரோவில் பணக்கட்டுகளை எடுத்துச் செல்லவில்லை. கொள்ளையர்கள் யார்? என தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி கமிட்டி நாடார் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு தலைமை ஆசிரியர் மணிமாலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் செயலர், தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பி னர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாசு தேவ நல்லூரில் அமைந்து ள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப் பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினர். வெள்ளானைக்கோட்டை முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் ஞானையா, வாசுதேவ நல்லூர் தெற்கு வட்டார முன்னாள் தலைவர் நெல் கட்டும்செவல் முருகன், வாசுதேவநல்லூர் மூத்த காங்கிரஸ் தலைவர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு அழை ப்பாளராக முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் மோகன் அருணாசலம் கலந்து கொண்டார்.

    சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சேனைத் தலைவர் மகாஜன சங்கம் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசி னார். தமிழ் ஆசிரியர் சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் சிவகிரி ராஜ் நியூ பிரைமரி ஆங்கில பள்ளி கூட்ட ரங்கில் பெருந் தலைவர் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலை மை தாங்கினார். சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர காங்கி ரஸ் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னி லை வகித்த னர். பள்ளி நிர்வாகி ராமர் வரவேற்று பேசினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், மூத்த வக்கீலு மான சங்கை.கணேசன், பள்ளி ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். துணை முதல்வர் ராஜம் நன்றி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வாசுதேவநல்லூர் ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பால சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் காமராஜரின் உருவ சிலைக்கு மலர் மாலை கள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • கண்காட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துரைக்கப்பட்டது.

    சிவகிரி:

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வரும் நிலையில் சிவகிரி விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகிரி கிளை சார்பாக மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு நூல்கள், ஓவியம் சார்ந்த நூல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் மாணவர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    பள்ளியின் முதல்வர் முருகேசன் தொடக்க உரையாற்றி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். துணை முதல்வர் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட இணை செயலாளர் விண்ணரசு மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் நன்மை கள் மற்றும் அதன் பயன்களை எடுத்துரைத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலு வலர்கள், மாண வர்கள், பெற்றோர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் முத்தையா பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 48 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் தலையணை ஆற்றுப்படுகையில் கிணறு அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    அடிக்கல்

    நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்தார். சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வாசு. யூனியன் சேர்மன் முத்தையா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி வாசன், மாவட்ட துணைச் செய லாளர் மனோகரன், வாசு. யூனியன் வட்டார வள ர்ச்சி அலுவலகர்கள் கணே சன், ரவிச் சந்திரன், துணை சேர்மன் சந்திர மோகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் குமார், துணைத் தலைவர் பிரதீபன் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சந்திர லீலா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெய ராமன், விஜய பாண்டியன், உதவி பொறி யாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், தமிழர் விடுதலை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார், மாநில துணைத் தலைவர் சாமி, டி.டி.வி. ஹைடெக் சேம்பர் பிரிக்ஸ் பிரேம்குமார், ஜெய விநாயகா புளு மெட்டல்ஸ் ஸ்ரீகாந்த் பாலாஜி, கவுன்சி லர்கள் கார்த்திகேயன், முருகே சன், வள்ளியம்மாள், மகேஸ்வரி, அப்பாஸ், சிப்பி ராள், ருக்குமணி, பாக்கிய லட்சுமி, ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொ ண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் லதா நன்றி கூறினார்.

    • கோவில் உள்பிரகாரத்தில் சுவாமிகள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    • சிவன், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், திருநீலகண்ட சுவாமி - சமேத மீனாட்சியம்மன் கோவில், கருணையானந்தா சித்தர் கோவில், அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவில், ராமநாத சுவாமிகள் சித்தர் கோவில், நாதகிரி முருகன் கோவில், விஸ்வை அங்காள ஈஸ்வரி கோவில், தென்மலை திரிபுரநா தேஸ்வரர் சுவாமி - சிவபரிபூரணி அம்மன் கோவில், ராமநாதபுரம் சுயம்புலிங்க சுவாமி கோவில், தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்த நாரீஸ்வரர் கோவில், சிவகிரி அருகே சொக்க நாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ஆனி மாதம் சனி மகா பிர தோஷ பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்களுக்கு காட்சி

    சுவாமிகள் அலங்க ரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுத்தருளி கோவில் உள்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சப்பரத்துக்கு முன்பாக தேவாரம் பக்திப் பாடல்கள் குழுவை சேர்ந்த குழுவினர் தேவார பக்தி பாடல்கள் பாடியபடி நூற்றுக்கணக்கான பெண்களுடன் முன்னே செல்ல சப்பரம் பின்னால் தொடர்ந்து வந்தது.

    தீபாராதனை

    பின்னர் சிவன், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரதோஷ பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு வெல்லம் அரிசி, பஞ்சாமிர்தம், புளி யோதரை, பொங்கல், பஞ்சாமிர்தம், தயிர்சாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×