என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரி கமிட்டி நாடார் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி கமிட்டி நாடார் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு தலைமை ஆசிரியர் மணிமாலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளியின் செயலர், தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பி னர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாசு தேவ நல்லூரில் அமைந்து ள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப் பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினர். வெள்ளானைக்கோட்டை முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் ஞானையா, வாசுதேவ நல்லூர் தெற்கு வட்டார முன்னாள் தலைவர் நெல் கட்டும்செவல் முருகன், வாசுதேவநல்லூர் மூத்த காங்கிரஸ் தலைவர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு அழை ப்பாளராக முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் மோகன் அருணாசலம் கலந்து கொண்டார்.
சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சேனைத் தலைவர் மகாஜன சங்கம் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசி னார். தமிழ் ஆசிரியர் சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் சிவகிரி ராஜ் நியூ பிரைமரி ஆங்கில பள்ளி கூட்ட ரங்கில் பெருந் தலைவர் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலை மை தாங்கினார். சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர காங்கி ரஸ் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னி லை வகித்த னர். பள்ளி நிர்வாகி ராமர் வரவேற்று பேசினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், மூத்த வக்கீலு மான சங்கை.கணேசன், பள்ளி ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். துணை முதல்வர் ராஜம் நன்றி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூர் ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பால சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் காமராஜரின் உருவ சிலைக்கு மலர் மாலை கள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்