search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் புத்தக கண்காட்சி
    X

    சிவகிரியில் புத்தக கண்காட்சி

    • கண்காட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துரைக்கப்பட்டது.

    சிவகிரி:

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வரும் நிலையில் சிவகிரி விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகிரி கிளை சார்பாக மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு நூல்கள், ஓவியம் சார்ந்த நூல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் மாணவர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    பள்ளியின் முதல்வர் முருகேசன் தொடக்க உரையாற்றி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். துணை முதல்வர் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட இணை செயலாளர் விண்ணரசு மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் நன்மை கள் மற்றும் அதன் பயன்களை எடுத்துரைத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலு வலர்கள், மாண வர்கள், பெற்றோர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×