search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்

    • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீவநல்லூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பெண் கல்வி, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் விளக்கி பேசினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் உள்ள எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சீவநல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின்படி, எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் அரிபா தலைமை தாங்கினார்.

    இதில் 10 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை சீவநல்லூர் ஊராட்சி தலைவர் முத்துமாரி செய்திருந்தார்.

    Next Story
    ×