search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் பிறந்தநாள்"

    • திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா நடந்தது.
    • பள்ளி தலைமையாசிரியை மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் கர்ம–வீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி–களுக்கு மதுரை ஆனந்தம் செயலாளர் செல்வராஜ் பரிசு–களை வழங்கினார். விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை மற்றும் மாணவ, மாணவிகள், ஊர் பெரியோர்கள் உள்பட ஏராள–மானோர் கலந்துகொண்டனர்.

    • திருமழிசையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • மாங்காட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    சென்னை:

    அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் சென்னையில் 6 இடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காட்டுப்பாக்கம், போரூர், திருமழிசை, மாங்காடு ஆகிய இடங்களில் அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் தலைமையில், பொதுச்செயலாளர் வைரவன் முன்னிலையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருமழிசையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காட்டுப்பாக்கம், போரூர் ஆகிய இடங்களில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. மாங்காட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பூந்தமல்லி வட்டார நாடார் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.எல்.லட்சுமணன் தலைமையில், அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் முன்னிலையில் பூந்தமல்லியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் காமராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளில் அகில இந்திய நாடார் மகாஜன சபை பொருளாளர் ஜெயராமன், தலைமை நிலைய செயலாளர் வி.பி.விஜய், காப்பாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஏ.பி.துரை, மாநில செயலாளர்கள் ஆனந்த கிருஷ்ணன், வேல் குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ராஜகனி, மாநில இளைஞர் அணி தலைவர் மைக்கேல்ராஜ், மாநில இளைஞர் அணி துணை தலைவர் தினேஷ் பாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அபி, மாநில கலை பிரிவு செயலா ளர் பிரகாஷ், சென்னை மண்டல செயலாளர் கமலஹாசன், கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் சரவணன், மகளிர் அணி செயலாளர் சீதாலட்சுமி, மாநில உதவிக் குழு செயலாளர் ஆனந்தபாலன், மாநில தற்காப்பு பிரிவு செயலாளர் சரவணன், தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சேவியர், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விக்கி, காட்டுப்பாக்கம் பகுதி செயலாளர் சுந்தரகுமார், கவுரவ ஆலோசகர்கள் காந்தி மனகரன், அய்யா துரை, மதுரவாயல் தொகுதி தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வாழ்க்கை வரலாற்றினையும், கல்விக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் குறித்தும் பேசினர்.
    • மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் மற்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் காமராஜர் போல் வேடமணிந்து அவரின் வாழ்க்கை வரலாற்றினையும், கல்விக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் குறித்தும் பேசினர். பின்னர் பேச்சுப் போட்டி நடைபெற்றது. தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் மேல்பார்வையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்

    • வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.
    • முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொன்னேரியில் இயங்கி வரும் தமிழாலயா இலக்கிய அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கான வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், பங்கேற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள்,நினைவு பரிசு, பதக்கம் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.காவேரி தலைமை தாங்கினார். தமிழாலயா அமைப்பின் நிறுவனரும், அமைப்பாளருமான பொன்.தாமோதரன் முன்னிலை வகித்தார்.வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து நினைவு பரிசு, சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழாலயா நிர்வாகிகள் கவிஞர்கள் சிவலிங்கம், தனுஷ்கோடி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

    முடிவில், உதவி தலைமை ஆசிரியர் தர்மலட்சுமி நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி கமிட்டி நாடார் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு தலைமை ஆசிரியர் மணிமாலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் செயலர், தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பி னர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாசு தேவ நல்லூரில் அமைந்து ள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப் பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினர். வெள்ளானைக்கோட்டை முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் ஞானையா, வாசுதேவ நல்லூர் தெற்கு வட்டார முன்னாள் தலைவர் நெல் கட்டும்செவல் முருகன், வாசுதேவநல்லூர் மூத்த காங்கிரஸ் தலைவர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு அழை ப்பாளராக முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் மோகன் அருணாசலம் கலந்து கொண்டார்.

    சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சேனைத் தலைவர் மகாஜன சங்கம் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசி னார். தமிழ் ஆசிரியர் சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் சிவகிரி ராஜ் நியூ பிரைமரி ஆங்கில பள்ளி கூட்ட ரங்கில் பெருந் தலைவர் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலை மை தாங்கினார். சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர காங்கி ரஸ் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னி லை வகித்த னர். பள்ளி நிர்வாகி ராமர் வரவேற்று பேசினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், மூத்த வக்கீலு மான சங்கை.கணேசன், பள்ளி ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். துணை முதல்வர் ராஜம் நன்றி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வாசுதேவநல்லூர் ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பால சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் காமராஜரின் உருவ சிலைக்கு மலர் மாலை கள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • சிறப்பு விருந்தினர்களாக குமரி எம்.பி விஜய்வசந்த், குளச்சல் எம்.பி ஜே.ஜி.பிரின்ஸ் கலந்துக் கொண்டனர்.
    • பிறந்த நாள் முன்னிட்டு 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டியும், 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கியும் சிறப்பித்தனர்.

    காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது.
    • தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

    3 முறை தமிழக முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் பதவி வகித்தாலும் தனது வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் காமராஜர்.

    காமராஜரின் இறப்புக்கு பின்பு அவரது எளிமையான வாழ்க்கையை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம் நிறுவப்பட்டது. அங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான், அவர் பயன்படுத்திய 'செவர்லட்' கார்.

    அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் காரை காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவர் பயன்படுத்துவதற்காக டி.வி.எஸ். கம்பெனி நிறுவனர் சுந்தரம் ஐயங்கார் இலவசமாக வழங்கினார். இந்த காரை தான் காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை பயன்படுத்தி வந்தார். காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனை புனரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர்.

    கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து எடுத்துவரப்பட்ட அந்த கார் கிருஷ்ணகிரியில் உள்ள பழுது பார்க்கும் ஆலையில் வைத்து புனரமைக்கப்பட்டது.

    அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் கார் 1952 ஆம் ஆண்டு மாடல் கொண்டதாகும். காரின் கதவுகள், இருக்கைகள், என்ஜின் போன்றவை ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு துருப்பிடித்த பாகங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. காரின் கதவுகளுக்கு இடையே வரும் சில்வர் கிரில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆர்டர் செய்து பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஓடாமல் இருந்த கார் என்ஜின் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

    தற்போது புதுப்பொலிவுடன் காமராஜர் பயன்படுத்திய கார் அவரை போலவே கம்பீரமாக தோற்றமளிக்கிறது. தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் வலம் வந்த செவர்லட் கார் கிருஷ்ணகிரியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    • தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் போன்றவவை வழங்கப்பட்டது.
    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து அணிவகுத்து சென்றனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவர் நரேன் வரவேற்று பேசினார். மாணவர் கோதண்டராமன் காமராஜர் பற்றிய கவிதைகளை வாசித்தார். மாணவர் தேவேஷ் காளிதாஸ் பொற்காலம் தந்த பெருந்தலைவர் காமராசர் என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் கற்பலகை எழுத்துக்கள் வடிவியல் பெட்டி உபகரணங்கள் போன்றவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மழலையர் பிரிவு மாணவர்கள் காமராஜர் போல் வேடம் அணிந்து காமராஜரை நினைவுபடுத்தும் வகையில் அணிவகுத்து சென்றனர். சிறப்பு விருந்தினராக மாணவர் ஜெயதர்சன் கலந்துகொண்டு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றியும் காமராஜரின் கல்விப் பணியை பற்றியும் உரையாற்றினார். முடிவில் மாணவி சைனி ப்ரீத்தி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன்.
    • காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது.

    சிலையின் முன்பு பிரசாரம் செய்தது நினைவுக்கு வருகிறது. காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே. இன்றைய தலைமுறைக்கு அவரை கொண்டு சேர்ப்பது நம் கடமை. அதை சரியாக செய்யும் ஆலங்குளம் பகுதி மக்கள் அனைவரையும் மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறிஉள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் விண்ணைத்தொடும் அளவுக்கு ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.

    இதனால் பொதுமக்கள் தக்காளியின் பயன்பாடுகளை குறைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காமராஜரின் 121-வது பிறந்த நாள் மற்றும் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி தலைமையில் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து மற்ற கட்சியினரும் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இனிப்புக்கு பதிலாக தக்காளி வழங்கினர்.

    இதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தக்காளி விலை ஏற்றத்தை பொதுமக்கள் உணரும் வகையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

    • எம் கருப்புத் தலைவனோ... எங்களுக்கு பாதுகாப்பான... கூரையைத் தந்தான்...
    • பெருந்தலைவனே.. கருப்பாயிருந்தாலும் நீ விளக்கு... நீ வெளிச்சம்...

    எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்

    புராதன அழுக்கைக் கொண்டது

    சிமினி விளக்கை ஏற்றியும்

    லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது

    அவர்களைச் சூழ்ந்த இருள்

    புழுதியும் சேறும்தான்

    அவர்களுடைய பகல்

    அத்தைகளைக் கட்டிக்கொடுக்க

    வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு

    அவர்களது இடக்கை பெருவிரல்

    வண்டிப்பசை பூசியது

    தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்

    அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்தது

    போய்ச் சேர பேருந்தின்

    வண்ணங்களை ஒடுக்குகளை

    அடையாளம் கண்டவர்கள்

    பாட்டிகள் அத்தைகளின் கதையோ

    இன்னும் மோசம்

    விறகுப் புகையில் இருமி

    பிள்ளைப் பேற்றில்

    செத்துப் போனார்கள்

    குக்கிராமங்களில்

    விலங்குகளைப்போல்

    வாழ்ந்த

    இவர்களைச் சிந்தித்தான்

    ஒரு தலைவன்

    அவனும் படிக்காதவன்

    ஏழை பாழைகளின்..

    பஞ்சைப் பராரிகளின்..

    ஏக்கங்களை..

    பெருமூச்சை..

    கண்ணீரை..

    குருதியைப்

    படித்த மா மேதை

    மண்சுவர் கொண்டு

    கூரை வேய்ந்து

    ஒரு கோவில் செய்தான்

    அதில் ஒரு தண்டவாளத்

    துண்டை மாட்டினான்

    வயிற்றுத் தீயை

    இரண்டு உருண்டை

    சோற்றுப் பருக்கைகளால்

    அணைத்து வைத்தான்

    ஒவ்வொரு குடிசையிலும்

    ஔவைப் பாட்டி

    வலதுகாலெடுத்து வைத்தாள்

    வள்ளுவர் வந்தார்

    கம்பர் வந்தார்

    ஷேக்ஸ்பியர் வந்தார்

    அல்ஜிப்ரா வந்தது

    நியூட்டன் வந்தார்

    குடிசையிலிருந்து

    அப்பா ஆசிரியராய்

    வெளிவந்தார்

    அக்காக்களுக்கு

    டீச்சர் ட்ரைனிங் கனவு

    மருமகள்களுக்கு

    மருத்துவக் கனவு

    எங்களை தெய்வங்கள்கூட

    சற்று தூரத்தில்

    இடுப்பில் துண்டைக் கட்டி

    நிற்க வைத்தது

    எம் கருப்புத் தலைவனோ

    எங்களுக்கு பாதுகாப்பான

    கூரையைத் தந்தான்

    ஆண்களோடு பெண்கள்

    சமமாக அமர

    நாற்காலி தந்தான்

    சாதியைக் காட்டி

    பிடுங்கிக் கொண்ட

    பாடப் புத்தகங்களை

    அவனே மீட்டுக் கொடுத்தான்

    வேறெப்படி சொல்லமுடியும்

    பெருந்தலைவனே..

    கருப்பாயிருந்தாலும்

    நீ விளக்கு

    நீ வெளிச்சம்

    சுயமரியாதை கூடிய

    இத்தலைமுறை

    வாழ்வு நீ தந்தது!

    -கவிஞர் கரிகாலன்

    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • வாலாஜாபாத் வட்டார நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் காமராஜர் நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜ் நினைவு அறக்கட்டளையினர் காஞ்சிபுரம் நாடார் சங்கத்துடன் இணைந்து சங்க தலைவர் ராமேஸ்வரம் தலைமையில் காமராஜர் சிலைக்கு புது ஆடைகள் அணிவித்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. செயலாளர் வேலுமணி, பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை குமரகுருநாதன் நிர்வாகிகள் நாதன், காமராஜ், பார்த்தசாரதி, வஜ்ரவேல் இருந்தனர். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத். பா. கணேசன் தலைமையில் காமராஜர் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் வட்டார நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    ×