search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் 15-ந்தேதி த.மா.கா. சார்பில் பொதுக்கூட்டம்- ஜி.கே.வாசன் அறிவிப்பு
    X

    ஈரோட்டில் 15-ந்தேதி த.மா.கா. சார்பில் பொதுக்கூட்டம்- ஜி.கே.வாசன் அறிவிப்பு

    • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா.வினர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் பெருந்தலைவரின் 121-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் வருகிற 15-ந்தேதி மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

    பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா. வினர் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×