search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் கைது"

    • சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
    • இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெரு கேசவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி.

    இவரும் அதேபகுதியை சேர்ந்த இவரது உறவினரான 16 வயது சிறுவனும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

    இந்நிலையில் சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்தநிலையில் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு கார்த்திக் ராஜ் தனது வீட்டிற்கு மீரான் பாளையம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த சிறுவன், கார்த்திக்ராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திக்ராஜின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைதடுமாறிய கார்த்திக் ராஜ் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சென்று தப்ப முயன்றுள்ளார்.

    எனினும் அந்த சிறுவனும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கார்த்திக் ராஜை அரிவாளால் பலமுறை வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் போலீசார் கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    ஆனால் கார்த்திக் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட கார்த்திக்ராஜிக்கு லதா (27) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் சுற்றி திரிவதாக வடபழனி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஏராளமான செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்த போது திடீரென ஒருவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட வாலிபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிந்தது.

    சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபர் உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வரு கின்றனர்.

    • சிறுமி தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
    • வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி, தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த அந்த நபர், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

    அந்த சமயம் மேலும் 7 மாணவிகள் எழுந்து தங்களுக்கும் அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். அதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னைக்கு கடத்தி சென்றார்.
    • பாலியல் தொல்லை கொடுத்த அண்ணனும் சிக்கினார்.

    கோவை

    கோவை பெரியநா யக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயம் ஆனார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சிறுமியின் தாயார் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயம் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சென்னை விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கும் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அப்போது சிறுவன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார்.

    அங்கு சிறுவன், மாணவியை பாலியல் தொந்தரவு செய்தது ெதரியவந்தது.

    மேலும் விசாரணையில் சிறுமியை அவரது தாயாரின் தங்கை மகன் அரவிந்த் (25) என்பவரும் சிறுமியை 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் ெதரியவந்தது.

    இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மாயம் வழக்கை போக்சோ வழக்காக மாற்றி சிறுமியை கடத்தி சென்ற 17 வயது சிறுவன் மற்றும் சிறுமியின் அண்ணன் அரவிந்த் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • புதுவையில் பள்ளி மாணவனை கடத்தி வந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நவுஸ்னா. இவர்களது 11 வயது மகன் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். முகமது குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். மாணவன் பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்தான்.

    அதுபோல் நேற்று மாலை மாணவன் டியூசன் முடிந்ததும் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென மாணவனை மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.

    குயவர்பாளையம் லெனின் வீதியில் ஒரு பெட்டிக்கடை அருகே வந்த போது மாணவன் சத்தம் போட்டு அழுதான். அப்போது பெட்டிக்கடை உரிமையாளர் சரவணன் அந்த வாலிபரிடம் விசாரித்த போது தனது உறவினர் மகனை அழைத்து வருவதாக கூறினார்.

    அதற்கு அந்த சிறுவன் அந்த வாலிபர் எனது உறவினர் இல்லை. என்னை மிரட்டி கடத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தான்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒரு பெண் அந்த சிறுவனை பத்திரமாக தனது வீட்டுக்குள் அழைத்து சென்று பூட்டி வைத்துக்கொண்டார்.

    இதனால் மாணவனை கடத்தி வந்த அந்த வாலிபர் ஆத்திரமடைந்து சிறுவனை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.

    உடனே அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவனை கடத்தி வந்த வாலிபரையும் மாணவனையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மாணவனின் தாய்க்கு தகவல் தெரிவித்து மாணவனை அவரிடம் ஒப்படைத்தனர்.

    பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குயவர்பாளையம் லெனின் வீதியை சேர்ந்த அமீது அப்துல் காதர் (வயது 21) என்பதும் இவர் மாணவனின் தாயிடம் பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அமீது அப்துல் காதரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அமீது அப்துல் காதர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.
    • பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டன்புதுர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.

    பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிறுவனை ஈரோடு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • மேட்டுப்பாளையம் அருகே வீட்டில் குளியலறையில் பெண் குளித்துக்கொண்டிருந்தார்.
    • அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது. சத்தம் வந்த இடம் நோக்கி பெண் சென்றார்.

    அப்போது அங்கிருந்து வாலிபர் ஒருவர் ஓடுவதை பார்த்ததும் இளம்பெண் அதிர்ச்சியானார். உடனே அருகில் இருந்தவர்களிடம் யார் என்று விசாரித்தார். மேலும் இது தொடர்பாக தனது கணவரிடம் தெரிவித்தார்.

    பின்னர் 2 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தான் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்தனர். அதில் பல்வேறு பெண்களை தகாத முறையில் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
    • ேபாலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 -ம்வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறுமிக்கு நேற்று முன்தினம் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவ மனையில் சிறுமிக்கு திடீரென பெண் குழந்தை பிறந்துள்ளது.

    மேலும் திருமணம் ஆகாமல் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததை கண்டு டாக்டர்கள் அதிர்ச் சியடைந்தனர். உடனே ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிறுமியின் தாய் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுமியின் எதிர் வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் தான் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    அந்த சிறுவனின் தங்கையும், பாதிக்கப்பட்ட சிறுமியும் ஒரே பள்ளியில் படித்து வருவதால், சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவனும் , சிறுமியும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், எஸ்ஐ மகாராணி மற்றும் போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பலாத்காரம் செய்து கார்ப்ப மாக்கியது தெரியவந்தது. உடனே, சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து , திருவண்ணாமலை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சீர்திருத்த பள்ளி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 21-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • போலீசார் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்லடம் கரடிவாவியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    கடந்த 21-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அவரை 16 வயது சிறுவன் பல்லடத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மாணவி வீட்டிற்கு செல்லாததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது பெற்றோர் வால்பாறை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் மாணவி சிறுவனுடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பல்லடத்துக்கு சென்று சிறுவனுடன் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். பின்னர் வால்பாறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை சிறுவன் திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • சிறுமி பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் கரூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றார்.
    • கடந்த 4-ந் தேதி திண்டுக்கல்லில் வசித்து வந்த தோழியின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

    கவுண்டம்பாளையம்:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை துடியலூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். ஆனால் சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்கவில்லை. பள்ளிக்கு சென்று படிக்க விரும்பினார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி சிறுமி திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    சிறுமி பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் கரூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றார். கடந்த 4-ந் தேதி திண்டுக்கல்லில் வசித்து வந்த தோழியின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனையடுத்து சிறுமி தனது தோழியுடன் திண்டுக்கல்லுக்கு சென்றார்.

    அப்போது சிறுமிக்கும் அவரது தோழியின் தம்பிக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் சிறுமியை தனியாக அழைத்து சென்று திருமணம் ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.போலீசார் விசாரணை நடத்தி தோழியுடன் இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தோழியின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

    இதனையடுத்து துடியலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தன்னை விட்ட 1 வயது அதிகமாக உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டதால் அவர் மீது தீ வைத்துவிட்டு சிறுவன் ஓடிவிட்டான்.
    • சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளே புகுந்தான்.

    அங்கு யாரும் இல்லாததால் சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டார்.

    சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த சிறுவன் பேப்பரை எடுத்து தீவைத்து சிறுமி மீது போட்டான். இதில் ஆடை தீப்பற்றி எரிந்து சிறுமியின் உடல் கருகியது. வலி தாங்கமுடியாமல் சிறுமி கதறியதால் அவன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி சிறுமியை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×