search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்- பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால் அம்பலம்
    X

    8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்- பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால் அம்பலம்

    • சிறுமி தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
    • வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி, தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த அந்த நபர், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

    அந்த சமயம் மேலும் 7 மாணவிகள் எழுந்து தங்களுக்கும் அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். அதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×