search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோழியுடன் தங்கி இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை- 16 வயது சிறுவன் கைது
    X

    தோழியுடன் தங்கி இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை- 16 வயது சிறுவன் கைது

    • சிறுமி பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் கரூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றார்.
    • கடந்த 4-ந் தேதி திண்டுக்கல்லில் வசித்து வந்த தோழியின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

    கவுண்டம்பாளையம்:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை துடியலூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். ஆனால் சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்கவில்லை. பள்ளிக்கு சென்று படிக்க விரும்பினார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி சிறுமி திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    சிறுமி பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் கரூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றார். கடந்த 4-ந் தேதி திண்டுக்கல்லில் வசித்து வந்த தோழியின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனையடுத்து சிறுமி தனது தோழியுடன் திண்டுக்கல்லுக்கு சென்றார்.

    அப்போது சிறுமிக்கும் அவரது தோழியின் தம்பிக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் சிறுமியை தனியாக அழைத்து சென்று திருமணம் ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.போலீசார் விசாரணை நடத்தி தோழியுடன் இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தோழியின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

    இதனையடுத்து துடியலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தன்னை விட்ட 1 வயது அதிகமாக உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    Next Story
    ×