என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 -ம்வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறுமிக்கு நேற்று முன்தினம் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவ மனையில் சிறுமிக்கு திடீரென பெண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும் திருமணம் ஆகாமல் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததை கண்டு டாக்டர்கள் அதிர்ச் சியடைந்தனர். உடனே ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுமியின் எதிர் வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் தான் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
அந்த சிறுவனின் தங்கையும், பாதிக்கப்பட்ட சிறுமியும் ஒரே பள்ளியில் படித்து வருவதால், சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவனும் , சிறுமியும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், எஸ்ஐ மகாராணி மற்றும் போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பலாத்காரம் செய்து கார்ப்ப மாக்கியது தெரியவந்தது. உடனே, சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து , திருவண்ணாமலை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சீர்திருத்த பள்ளி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்