search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன் கைது
    X

    மேட்டுப்பாளையம் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன் கைது

    • மேட்டுப்பாளையம் அருகே வீட்டில் குளியலறையில் பெண் குளித்துக்கொண்டிருந்தார்.
    • அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது. சத்தம் வந்த இடம் நோக்கி பெண் சென்றார்.

    அப்போது அங்கிருந்து வாலிபர் ஒருவர் ஓடுவதை பார்த்ததும் இளம்பெண் அதிர்ச்சியானார். உடனே அருகில் இருந்தவர்களிடம் யார் என்று விசாரித்தார். மேலும் இது தொடர்பாக தனது கணவரிடம் தெரிவித்தார்.

    பின்னர் 2 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தான் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்தனர். அதில் பல்வேறு பெண்களை தகாத முறையில் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    Next Story
    ×