search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி திருமணம்"

    • குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராம் என்கிற தில்லை நாகரத்தின தீட்சிதர். அவரது மகன் பத்ரிசன், (வயது 19).

    இவருக்கும், திருமண வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும் சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. சிறுமி தற்போது, 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இதுகுறித்து குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.

    இது குறித்து சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர் சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், பத்ரிசன், இவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 6 பேர் தில்லைநாகரத்தினம் தீட்சிதர், பத்ரிசன் சகோதரர் சூர்யா தீட்சிதர், சிறுமியின் தந்தை ராஜகணேசன் தீட்சிதர், சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து உள்ளனர்.

    இவர்களில் சூர்யா தீட்சிதரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிறுமிக்கு சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபம் ஒன்றில் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
    • சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் சிறுமியின் தாய் தாமரை செல்வி உள்ளிட்டோர்) 5 பேர் மீது வழக்கு குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆலம்பாடி அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது. 30) இவருக்கு விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபம் ஒன்றில் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இது குறித்து கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் மகளிர் ஊர் நல அலுவலர் சுமதி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து (கார்மேகம் தந்தை சுப்பிரமணியன், இவரது மனைவி விஜயகுமாரி சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் சிறுமியின் தாய் தாமரை செல்வி உள்ளிட்டோர்) 5 பேர் மீது வழக்கு குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சிறுமி குழந்தை பெற்றது தொடர்பான தகவல் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு கிடைத்தது.
    • சட்ட விரோதமாக சிறுமியை திருமணம் செய்த உதயகுமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போலக்காபட்டியை சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவரது மகன் உதயகுமார் (வயது 28). இவருக்கும் தேனியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

    பின்னர் இருவரும் அங்குள்ள தோட்டத்து வீட்டில் குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். ஆஸ்பத்திரிக்கு சென்றால் குழந்தை திருமணம் குறித்த தகவல் வெளியே தெரிந்துவிடும் என்று கருதிய குடும்பத்தினர் சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்துள்ளனர்.

    7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்து விட்டது.

    சிறுமி குழந்தை பெற்றது தொடர்பான தகவல் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை திருமணத்தை மறைத்து சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இறந்த குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சட்ட விரோதமாக சிறுமியை திருமணம் செய்த உதயகுமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று அவரை கைது செய்தனர்.

    • 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்து விட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போலக்காபட்டியை சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவரது மகன் உதயகுமார் (வயது 28). இவருக்கும் தேனியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

    பின்னர் இருவரும் அங்குள்ள தோட்டத்து வீட்டில் குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். ஆஸ்பத்திரிக்கு சென்றால் குழந்தை திருமணம் குறித்த தகவல் வெளியே தெரிந்துவிடும் என்று கருதிய குடும்பத்தினர் சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்துள்ளனர்.

    7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்து விட்டது.

    சிறுமி குழந்தை பெற்றது தொடர்பான தகவல் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை திருமணத்தை மறைத்து சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இறந்த குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.சட்ட விரோதமாக சிறுமியை திருமணம் செய்த உதயகுமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று அவரை கைது செய்தனர்.

    • 5 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
    • சிறுமியின் விபரங்களை பதிவு செய்தபோது அவருக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் நடந்தது தெரியவந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் அய்யன்குமார்(வயது 29).

    இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

    அப்போது அவரது விபரங்களை பதிவு செய்தபோது சிறுமிக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் யூனியனை சேர்ந்த ஊர்நல அலுவலர் முத்தாத்தாள் புளியங்குடி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யன்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீதும், சிறுமியின் பெற்றோர் மீதும் போலீசார் குழந்தை திருமணம், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நெய்வேலி அருகே ஆசை வார்த்தைகூறி சிறுமிக்கு திருமணம் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியின் தாய் நெய்வேலி நகர நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் தனது மகளை வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அரிபாலன் மகன் ராமு (எ) ராம்குமார்(21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரது மகள் சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுதுவதற்கு குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் டியூஷன் சென்டருக்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி டியூஷனுக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் நெய்வேலி நகர நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் தனது மகளை வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அரிபாலன் மகன் ராமு (எ) ராம்குமார்(21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற ராம்குமார் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைய டுத்து ராம் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • போக்சோ சட்டம் பாய்ந்தது
    • போலீசார் கைது செய்து விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே உள்ள சேங்கபுத்தரி கிராமத்தைச் சேர்ந்த (17 வயது) ஆன இளம் பெண் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

    வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    ஆனால் மாலை அவர் வீட்டுக்கு வராதால் பல இடங்களில் அவர் தந்தை தேடினார்.

    பின்னர் இது குறித்து போளூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் இளம்பெண்ணை கடத்தி சென்று கடந்த 30ஆம் தேதி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக பொக்லைன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

    • மாயமான சிறுமியை அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
    • சிறுமியை கோவைபட்டனம்புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். பிளஸ்-1 படித்து முடித்துள்ள அவர் டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுமியை அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சிறுமியை கோவைபட்டனம்புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்துவரும் அருண்பாண்டியன், வேலை விஷயமாக பாலையம்பட்டி வந்திருந்தபோது அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பழக்கத்தில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்றனர். அங்கு வாலிபர் அருண்பாண்டியன், சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

    சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

    • 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவருடன் பழகி கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்ட–மநாயக்கன்பட்டிையச் சேர்ந்த பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 27). இவர் தனது உறவினர் மகளான 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவருடன் பழகி வந்துள்ளார்.

    பின்னர் வீட்டுக்கு தெரியாமல் அவரை கடத்திச் சென்று திருமணம் செய்தார். திருப்பூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்த அந்த சிறுமிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த விபரம் தற்போதுதான் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    எனவே இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சுரேஷ் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
    • இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(32). இவர் ஈரோடு-மொடக்குறிச்சி வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    அப்போது அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவி அவரது பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரமேஷ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் ரமேஷ் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 9-ந்தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை தனியார் பஸ் டிரைவர் ரமேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி கிளீனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கீழ்நிலவூர் கிராமத்தை சேர்த்த சுதாகர் (வயது 22) லாரி கிளீனர். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி சுதாகர் வீட்டில் இரு தரப்பினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை கிளாக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று காண்பித்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அங்கு குழந்தைக்கு விட்டமின் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

    அதன்பிறகு சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமி கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மருத்துவ நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று குழந்தைத் திருமணத் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுதாகரை கைது செய்துள்ளனர்.

    • சிறுமியை திருமணம் செய்து கொண்ட அருள் பிரகாஷ் மற்றும் சிறுமி கள்ளக்குறிச்சியில் தங்கியுள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • சிறுமியை கடத்தி திருமணம் செய்தது தொடர்பாக டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி அந்த பகுதியில் படித்து வந்தார். இந்நிலையில் ரோடுமாம்புதூர் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (வயது 24) ஜேசிபி எந்திர டிரைவர். இவருக்கும் அந்த சிறுமிக்கும் இடையில் காதல் மோகம் ஏற்பட்டது.

    இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் சிறுமியை கண்டித்து உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் சிறுமியை தங்க வைத்து படிக்க வைத்து வந்தனர். அங்கு படித்துவந்த சிறுமியை கடந்த மூன்று மாதம் முன்னரே அருள்பிரகாஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச் சென்றார். இதில் அருள்பிரகாஷ் சிறுமியை கேரளாவிற்கு கடத்திச்சென்று அங்கு அவரை திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது சிறுமியை திருமணம் செய்து கொண்ட அருள் பிரகாஷ் மற்றும் சிறுமி கள்ளக்குறிச்சியில் தங்கியுள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவலின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்பிரகாஷ் இடமிருந்து சிறுமியை மீட்டனர். மேலும் போலீசார் அருள்பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×