என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமியை கடத்தி திருமணம்- போக்சோவில் டிரைவர் கைது
- சிறுமியை திருமணம் செய்து கொண்ட அருள் பிரகாஷ் மற்றும் சிறுமி கள்ளக்குறிச்சியில் தங்கியுள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
- சிறுமியை கடத்தி திருமணம் செய்தது தொடர்பாக டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி அந்த பகுதியில் படித்து வந்தார். இந்நிலையில் ரோடுமாம்புதூர் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (வயது 24) ஜேசிபி எந்திர டிரைவர். இவருக்கும் அந்த சிறுமிக்கும் இடையில் காதல் மோகம் ஏற்பட்டது.
இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் சிறுமியை கண்டித்து உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் சிறுமியை தங்க வைத்து படிக்க வைத்து வந்தனர். அங்கு படித்துவந்த சிறுமியை கடந்த மூன்று மாதம் முன்னரே அருள்பிரகாஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச் சென்றார். இதில் அருள்பிரகாஷ் சிறுமியை கேரளாவிற்கு கடத்திச்சென்று அங்கு அவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சிறுமியை திருமணம் செய்து கொண்ட அருள் பிரகாஷ் மற்றும் சிறுமி கள்ளக்குறிச்சியில் தங்கியுள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்பிரகாஷ் இடமிருந்து சிறுமியை மீட்டனர். மேலும் போலீசார் அருள்பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்