search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்வேலி அருகே  ஆசை வார்த்தைகூறி  சிறுமிக்கு திருமணம்   போக்சோவில் வாலிபர் கைது
    X

    நெய்வேலி அருகே ஆசை வார்த்தைகூறி சிறுமிக்கு திருமணம் போக்சோவில் வாலிபர் கைது

    • நெய்வேலி அருகே ஆசை வார்த்தைகூறி சிறுமிக்கு திருமணம் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியின் தாய் நெய்வேலி நகர நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் தனது மகளை வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அரிபாலன் மகன் ராமு (எ) ராம்குமார்(21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரது மகள் சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுதுவதற்கு குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் டியூஷன் சென்டருக்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி டியூஷனுக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் நெய்வேலி நகர நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் தனது மகளை வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அரிபாலன் மகன் ராமு (எ) ராம்குமார்(21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற ராம்குமார் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைய டுத்து ராம் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    Next Story
    ×