search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போளூரில் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவர்
    X

    போளூரில் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவர்

    • போக்சோ சட்டம் பாய்ந்தது
    • போலீசார் கைது செய்து விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே உள்ள சேங்கபுத்தரி கிராமத்தைச் சேர்ந்த (17 வயது) ஆன இளம் பெண் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

    வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    ஆனால் மாலை அவர் வீட்டுக்கு வராதால் பல இடங்களில் அவர் தந்தை தேடினார்.

    பின்னர் இது குறித்து போளூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் இளம்பெண்ணை கடத்தி சென்று கடந்த 30ஆம் தேதி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக பொக்லைன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

    Next Story
    ×