search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன்மலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி கிளீனர் போக்சோவில் கைது
    X

    கல்வராயன்மலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி கிளீனர் போக்சோவில் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி கிளீனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கீழ்நிலவூர் கிராமத்தை சேர்த்த சுதாகர் (வயது 22) லாரி கிளீனர். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி சுதாகர் வீட்டில் இரு தரப்பினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை கிளாக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று காண்பித்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அங்கு குழந்தைக்கு விட்டமின் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

    அதன்பிறகு சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமி கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மருத்துவ நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று குழந்தைத் திருமணத் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுதாகரை கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×