search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கைகள்"

    • வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    திருமங்கலம்

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றனர். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டது. வதந்தி பரப்பி யவர்கள் கைது செய்யப்ப ட்டனர்.

    இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலா ளர்களை வரவழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பி ரண்டு வசந்தகுமார் தலைமை தாங்கி பேசும்போது கூறுகையில், ''வட மாநில தொழி லாளர்களுக்கு பாது காப்பான சூழ்நிலை உருவாக்கிட வேண்டும். அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்'' என்றார்.

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி பரவியது. இதனைப் பரப்பிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில் அமைதியாக நடைபெற வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் மற்றும் வட மாநில தொழிலா ளர்களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    இதன் ஒரு பகுதியாக கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை அழைத்து அறிவுரை வழங்கினோம். வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். சம்பளம் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாத ராஜா பேசியதாவது:-

    கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 2500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழி லாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடு க்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் தொழிலா ளர்களை விட அவர்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வதந்திகளால் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.   தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பணி செய்பவர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

    பணியின் போது இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.  இதில் மாநில செயலாளர் டெல்லி அப்பாதுரை, மாவட்ட அமைப்பாளர் தணிகைவேல், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாநில பிரச்சார செயலாளர் அதிதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

    • மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தியப்படி ஆர்ப்பாட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில், தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து 31-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆனால், விவசாயிகளின் கோரிக்கை குறித்து இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்தும், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள் ஏராளமானோர் கூட்டத்தை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு கைகளில் கரும்புகளை ஏந்தியப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
    • அரசு துறைகளில் பயன்படுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தின ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தி னை வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு ஆகியவர்களை உடனே வழங்கிட வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கரு வூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் பயன்ப டுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் வட்டாட்சி யர் அலுவலகம்முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

    நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார்.

    திருவாரூர் மின்வா ரிய அலுவலகம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    திருவாரூர்க லெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர் சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வருகிற 10-ந் தேதி வேலைநிறுத்தம் நடத்தினர்.
    • கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளையும், சாமானிய மக்களையும் பாதிக்கக்கூடிய மின்சார சட்ட திருத்தம் 2022-ஐ திரும்ப பெற வேண்டும். மேலும் கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கேங்மேன் பணி யிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5,000 பேரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 10-ந் தேதியன்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசும், மின்வாரியமும் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு விருதுநகர் மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் துரைப்பா ண்டியன், ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதா கிருஷ்ணன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.

    பொருளாளர் பாலசுப்பி ரமணியன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில நிர்வாகிகள் சேக்கிழார், மணிகண்டன், பாண்டியராஜ் ஆகியோர் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் கோட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மாயாண்டி, ராஜ்குமார் ஆகியோரை பாராட்டி பேசினர்.

    இதனை தொடர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலை வராக இளங்கோவனும், செயலா ளராக ஞான குருவும், செயல் தலை வராக தங்கவேலும், அமைப்பு செயலாளராக ராதாகிருஷ்ணனும், பொருளாளராக பாலசுப்பி ரமணியமும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறை பாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் முனியசாமி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    முன்னாள் படைவீரர் கொடிநாளையொட்டி 2019-ம் ஆண்டில் அதிக வசுல் செய்து சாதனை புரிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சார் பதிவாளர் முத்துச்சாமி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில், ஆனையூர், மங்களம், கீழ திருத்தங்கல் பகுதிகளை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.65ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    • திருப்பத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மக்கள் உரிமை கூட்டணி மாநில பொதுச் செயலாளர் விஸ்டம் கமருதீன் மனு அளித்தார். அதில், நகரில் செயல்பட்டு வரும் மருதுபாண்டியர் அரசு மருத்துவ மனையில் விபத்து போன்ற காலகட்ட ங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

    பொது பிரிவுக்கு என்று மட்டும் தற்சமயம் மருத்துவர்கள் இருந்து வரும் நிலையில் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்று மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். நகரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா உடனிருந்தார்.

    • உசிலம்பட்டியில் சி.ஐ.டி.யு. செஞ்சட்டை பேரணி நடந்தது.
    • பயணிகளின் கூட்ட நெரிசலை போக்குவதற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி தேவர் சிலை அருகே சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு செஞ்சட்டை பேரணி நடந்தது. மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு செல்லக்கண்ணு, மத்திய சங்கத் துணைத் தலைவர் சிவகுமார் முன்னிலை வைத்தனர். ராஜேந்திரன் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் அழகர்சாமி, பொதுச் செயலாளர் கனகசுந்தர், கிளை தலைவர் பாண்டி, செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர் பகத்சிங், பொருளாளர் ஆசைக்கொடி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பழைய பஸ்களை அகற்றி புதிய பஸ்கள் வாங்க வேண்டும், பயணிகளின் கூட்ட நெரிசலை போக்குவதற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

    • சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும்
    • சாலையின் நடுவே பதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து சாலையில் அதிக மான இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    தி.மு.க. அரசு பொறுப் பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் எழுதினார்.

    இதனையடுத்து கிள்ளியூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்திடம் வழங்கினார். மனுவில் கூறப்பட்டுள்ள முக்கியமான கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டத்தில் சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு கடந்த 2006 -ம் ஆண்டு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வழியாக, ஐரேனிபுரம் முதல் சடையன்குழி, கிள்ளி யூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்நகர் வரை சாலையின் நடுவே பதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து சாலையில் அதிகமான இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. எனவே, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சாலையின் நடுவே பாதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்களுக்கு பதிலாக டி.ஐ. பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2019 -ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஒரு தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் இருக்கவேண்டும் என்ற அரசு விதிமுறைப்படி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களையும், காவல் நிலையங்களையும் உட்படுத்தி மாவட்ட உரிமை யியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்து தர வேண்டும்.

    ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்துள்ள பழைய கட்டிடமான ஆய்வக பிரிவு கட்டிடம், புற நோயாளிகள் கட்டிடம் மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் ஆகிய கட்டிடங்களை அகற்றி அந்த இடத்தில் 30 -படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் அமைக்க வேண்டும்.

    பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்ற கருங்கல் பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு விரி வாக்கம் செய்து நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையமாக மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட மீனவ மக்கள் பயன்பெறும் வகை யில் மீன்வளக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    • கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்டம் சார்பாக 01.01.2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படி நிலுவை தொகையினை வழங்க வேண்டும். 1.07.2022 முதல் மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை 497 ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்து 350 ரூபாயாக குறைத்திடவேண்டும். கொரோனா சிகிச்சை கட்டணம் செலவுத் தொகையை உடன் திரும்ப வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர்கள், கிராமபுற நூலகர்களுக்கு ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் கடலூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை நிர்வாகிகள் ராமதாஸ் , அன்பழகன், முத்தமிழ்ச்செல்வி, பன்னீர்செல்வன் ,செல்வராஜ், குமாரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இணைச் செயலாளர் பாலு, பச்சையப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார் . ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை ஓய்வூதியர் சங்க பூண்டியாங்குப்பம் சாம்பசிவம், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ் வோளண்மை அனைத்து ஊழியர் சங்க மாவட்டத் தவைர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தவைர்சிவராமன், பொதுச் செயலாளர் மருதவானன், இந்து சமய அறயநிலைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்ரமணியம் அலுலக உதவியாளர் அலுவலக பணியாளர் ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலைவர் பக்தவச்சலம், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கருணாகரன் , சிவப்பிரகாசம் , கலியமூர்த்தி , பத்பநாபன், ராமனுஜம் , ஞானமணி . சிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சி.குழந்தைவேலு நன்றி கூறினார். 

    • நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
    • நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இதுவரை நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகுதியில் மின்சார துறையில் உள்ள தேவைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே தென்காசி மின் பகிர்மான வட்டமாக அறிவித்திட வேண்டும். நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கேங்மேன் பற்றாக்குறை உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கேங்மேன்கள் பிற மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை தென்காசி மாவட்டத்தில் பணி அமர்த்திட வேண்டும். குருக்கள்பட்டி கிராம மின் நிலையத்தில் நிரந்தர களப்பணியாளர்கள் நியமனம் செய்திட வேண்டும். மேலும் குருக்கள்பட்டி கிராமத்தில் உப மின் நிலையத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. அப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

    நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இதுவரை நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. விரைந்து நிரந்தர பணியாளர்கள் நியமித்திட ஆணை பிறப்பித்திட வேண்டும். குருக்கள்பட்டி மின் அலுவலகத்தில் பொறியாளர் நியமனம் செய்திட ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    • கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்து தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேங்காய் நார் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவி செய்ய வேண்டும். தென்னங்கன்றுக்களுக்கு பராமரிப்பு மானியம் வழங்க வேண்டும்‌ என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, தென்னை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×